சியோல், ஜூன் 8- கொரிய தீபகற்பப் பகுதியில் அமெரிக்காவும், அதன் கூட்டாளிகளும் இணைந்து போர் விமானங்களைப் பறக்கவிட்டு அமைதியைக் குலைக்க முயன்றுள்ளனர். ஐரோப்பாவில் உக்ரைனைத் தூண்டிவிட்டு நெரு க்கடியில் மாட்டி விட்ட அமெரிக்கா, கொரியப் பகுதி யிலும் தனது கை வரிசையைக் காட்டு கிறது. அடுத்த அணு குண்டு சோதனைக் காக வட கொரியா தயார் செய்து கொண்டிருக்கிறது என்று செய்தியைப் பரப்பிவரும் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியாவுடன் இணைந்து கொரியக்கடற்பகுதியில் போர் விமானங்களை வலம் வரச் செய்துள்ளது. இத்தகைய செயல்கள் போர்ப் பதற்றத்தைத் தூண்டி விடுகின்றன. பதிலடி கொடுக்கத் தயங்க மாட்டோம் என்று வடகொரியா அறிவித்துள்ளது. அமெரிக்கா வின் போர் நடவடிக்கைகளில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள 2017 ஆம் ஆண்டில் அணுகுண்டு சோதனையை வடகொரியா நடத்தியது குறிப்பிடத்தக்கது.