states

பெண் தலைவர்களை இழிவுபடுத்துவதா?

மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் திமுக மகளிரணி தலைவியும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியை அவதூறாக இழிவுபடுத்தி பேசியவர் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச்செயலாளர் அ.ராதிகா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: 

பொதுவெளியில் இயங்கும் பெண்களை, அரசியலில் ஈடுபடும் பெண்களை, மாற்று கருத்து சொல்லி விட்டாலே உடனடியாக பாலியல் சார்ந்து விமர்சிப்பது, ஆபாசமாக பேசுவது, அவதூறு செய்வது என்பது சமூகத்தின் பொதுப்புத்தியில் திணிக்கப்பட்டு வருவதை சமீப காலமாக பார்க்க முடிகிறது . தமிழகத்தில் அரசியல் கட்சிகளில் செயல்படும் பெண் தலைவர்களை இழிவுபடுத்துவது அவதூறாக பேசுவது என்பது தொடர்ச்சியாக நடைபெற்று வரு கிறது. ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரை யில் அனைத்திந்திய அண்ணா திரா விட முன்னேற்றக் கழகத்தின் மாநாடு நடைபெற்றது. இம் மாநாட்டில், கலை நிகழ்ச்சி என்ற  பெயரில், திராவிட முன்னேற்றக் கழ கத்தின் மகளிர் அணி தலைவர், கனிமொழி கருணாநிதி எம்.பி.யை  அவதூறாக பேசிய எம்.எஸ்.ராஜ் மீது உடனடியாக, சட்டப்படியான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.

பெருமளவில் மக்கள் கூடி இருக்கக்கூடிய இடத்தில், பெண் அரசியல் தலைவரை, மோச மான அர்த்தத்தில் குறிப்பிட்டது, ஏற்கத்தகுந்தது அல்ல. மாநாட்டில்  முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட முன்னாள் அமைச்சர்களின் முன்னிலையில், இத்தகைய நிகழ்ச்சிகள் நடந்துள்  ளதை வன்மையாக கண்டிக்கி றோம். பொது வெளியில் இயங்கும் பெண்கள் மீது, குறிப்பாக அரசியல்  கட்சி பெண் தலைவர்கள் மீது இத்த கைய வன்ம பிரச்சாரங்களை செய் பவர்கள் மீது தமிழக அரசு உடனடி யாக நடவடிக்கை எடுத்திட வேண்டும். அரசியல் ரீதியான மாறு பட்ட கருத்துக்கள் வருகிற போது,  அதை அரசியல் ரீதியாக எதிர் கொள்வதை விட்டு, எதிர் முகா மில் இருக்கும் பெண் அரசியல்  கட்சி தலைவர்கள் மீது, இத்தகைய  அநாகரிக அவதூறு பிரச்சாரங் களை முன்னெடுப்பவர்கள் யாராக  இருந்தாலும், அதை எதிர்த்த வலு வான குரலை, தமிழகத்தில் இருக்  கும் அனைத்து பெண்கள் அமைப்பு களும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப  வேண்டும். மேலும் இத்தகைய மோசமான அவதூறுகளை, தங்கள் கட்சியின் பொதுக்கூட்டங்களிலோ, மாநாடு களிலோ யார் பேசினாலும் அதை சம்பந்தப்பட்ட கட்சி தலைவர்கள் அனுமதிக்கக்கூடாது. மேற்கண்ட  சம்பவத்தில் முன்னாள் முதல மைச்சர், அமைச்சர்கள் உட்பட, இதை வேடிக்கை பார்த்தது என்பது,  அரசியல் நாகரீகம் அற்றது, கண்  டிக்கத்தக்கது. உடனடியாக சம்  பந்தப்பட்ட எம். எஸ். ராஜ் மீது கட்சி  ரீதியான நடவடிக்கையையும் எடுத்  திட வேண்டும்.