states

img

தனித்துவமிக்க நவம்பர் புரட்சி - கே.பாலகிருஷ்ணன்

உலகத்தில் பல ஆட்சிமாற்றங்கள், ராணுவப் புரட்சிகள், மக்கள் புரட்சிகள் நடந்திருந்த போதிலும் இவற்றில் இருந்து அடிப்படை யிலேயே வேறுபட்ட தன்மை கொண்டது ரஷ்ய நாட்டில் 1917-இல்  நடைபெற்ற மகத்தான நவம்பர் புரட்சி. மனித குலத்தில் நீடித்து நிலைத்து வந்த சுரண்டல் முறைக்கு முடிவு கட்டி, சுரண்டல் ஆட்சிமுறையை சுட்டெரித்து தொழிலாளி மற்றும் உழைப்பாளி மக்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய நாள்தான் நவம்பர் புரட்சி தினமாகும். மனித குல வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத மாற்றத்தை ரஷ்ய வரலாற்றில் மட்டுமல்ல; ஒட்டுமொத்த உலக வரலாற்றில் ஏற்படுத்திய புதுமையான நிகழ்வு இது.

1917 நவம்பர் 7ஆம் நாள் ரஷ்ய நாட்டில் சோஷலிசப் புரட்சி நடைபெற்றது. ரஷ்யா ஒரு வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடல்ல. அப்போது உலக அரங்கில்  ரஷ்யா ஒரு பின்தங்கிய  நாடாகவே இருந்தது. அத்த கைய நாட்டில் சோசலிசப் புரட்சியை நடத்துவதற்கான சரியான நடைமுறை உத்தியை உருவாக்கி அதை வெற்றிகரமாக அமலாக்கியதுதான் உலகப் புரட்சிகர இயக்கத்திற்கு  தோழர் லெனின் வழங்கிய மகத்தான பங்களிப்பாகும்.  பின் தங்கியநாடான ரஷ்யாவில் பெரிய தொழிற்சாலைகளோ, அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களோ இல்லை. அன்றைய ரஷ்யாவின் மக்கள் தொகையில் 85 சதவீதம் பேர் விவசாயிகளே. வெறும் 2சதவீதம் பேர்தான் தொழிலாளர்கள். இத்தகைய  நாட்டில் சோசலிசப் புரட்சியை நடத்துவது எப்படி என்பதுதான் லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சிக்கு பெரும் சவாலாக இருந்தது. 

முதலாளித்துவம் வளர்ச்சியடையாத நாடுகளில், முதலாளித்துவம் தலைமை தாங்கி புரட்சி நடத்தும் வரை காத்திருக்க வேண்டியதில்லை என்ற முடிவுக்கு லெனின் வந்தார். இந்நாடுகளில் நிலப்பிரபுத்துவ அமைப்பை எதிர்த்த முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை தொழிலாளி வர்க்கம் தலைமை தாங்கி நடத்து வதன் மூலம் வெற்றிபெற முடியும் என்ற முடிவுக்கும் லெனின் வந்தார். முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி தொடர்பாக லெனின் உருவாக்கிய இந்த நடைமுறை உத்தி இதற்கு முன் எப்போதும் உருவாக்கப்படாத முற்றிலும் புதிய உத்தியாகும். இப்பிரச்சனை குறித்து, அன்றைய ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி யில் எதிரும் புதிருமான விவாதங்கள் நடந்து போல்ஷ்விக், மென்ஷ்விக் என இரண்டு பிரிவாக கருத்துப் போராட்டம் நடைபெற்றது. இரண்டு பிரிவு களும் தனித்தனியாக மாநாடுகளை நடத்தி தங்களது அணுகுமுறைகளை தீர்மானித்தன.

தொழிலாளர் - விவசாயிகள் கூட்டணி

ரஷ்யாவின் வளர்ச்சி குன்றிய சமூக நிலைமையை கருத்தில் கொண்டு போல்ஷ்விக் கட்சியின் நடைமுறை உத்தியை வகுத்தார் லெனின். ஜார் மன்னனின் ஆட்சியை எதிர்த்து புரட்சி வெற்றிபெற வேண்டுமானால் பெருவாரியான வர்க்கமாக உள்ள விவசாயிகள் அதில் இணையாமல் வெற்றிபெற முடியாது என உறுதியாக நம்பினார். அதுமட்டுமல்ல, ஜார் மன்னனின் ராணுவத்தில் உள்ள வீரர்கள், இந்த விவசாயிகளின் பிள்ளைகள்தான் என்பதையும் கருத்தில் கொண்டார். எனவே தொழிலாளர்கள் - விவசாயிகள் - ராணுவத்தில் பெருவாரியாக உள்ள விவசாயிகள் வீட்டு பிள்ளைகள் ஆகிய மூன்று தரப்பினரையும் இணைப்பது முக்கியம் என்று 

முடிவுக்கு வந்தார். இருபெரும் வர்க்கங்க ளான தொழிலாளர் - விவசாயிகள் கூட்டணியை உருவாக்குவதே புரட்சி வெற்றிபெறுவதற்கான சரியான உத்தி என்ற லெனின் கருத்தை போல்ஷ்விக் கட்சி விவாதித்து ஏற்றுக் கொண்டது. இந்த  உத்தியே ரஷ்யப் புரட்சிக்கு அடித்தள மானது. எனவேதான் உலக வரலாற்றில் ரஷ்யப் புரட்சியானது மிகவும் தனித்தன்மை வாய்ந்ததாக மிளிர்கிறது. அத்தகைய உத்தியை வகுத்தளித்த மாமேதை லெனின் உலகப் புரட்சிகளின் வழிகாட்டியாக திகழ்கிறார். நவம்பர் புரட்சியைத் தொடர்ந்து அடுத்த அரை நூற்றாண்டில் மிகவும் பின் தங்கிய நாடுகளான மக்கள் சீனம், கியூபா, கொரியா, வியட்நாம், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் புரட்சியின் மூலம் சோஷலிச அரசுகள் அமைக்கப்பட்டன.  இந்த நாடுகளில் சோவியத் ஒன்றி யத்தின் அனுபவங்களையும் உள்வாங்கிக் கொண்டு மனிதகுலம் இதுவரை கண்டிராத பல சாதனைகளை சோசலிச நாடுகள் நிகழ்த்திக் காட்டின என்பது குறிப்பிடத்தக்கது.

புரட்சியைக் காப்பது  பெரும் சவால்

சோசலிசப் புரட்சி நடத்துவது மட்டு மல்ல; அந்தப் புரட்சியை தக்க வைப்பதும் நீடிக்கச் செய்வதும் மிகப்பெரும் சவா லாகும். சோசலிசப் புரட்சியால் வீழ்த்தப் பட்ட, தாக்குண்ட ஏகாதிபத்தியமும் முத லாளித்துவமும் சோசலிசப் புரட்சியை தகர்ப்பதற்கு, அழிப்பதற்கு இடைவிடாத முயற்சிகளை, சூழ்ச்சிகளை, சதிகளை அரங்கேற்றிய வண்ணம் இருக்கிறது. சோசலிசப் புரட்சி மட்டுமல்ல, சோசலிச சிந்தனையே உலகில் எங்கும் பரவி விடக்கூடாது என்பதிலும் முதலாளித்துவ மும் ஏகாதிபத்தியமும் முனைப்பாக இருக்கின்றன. சோவியத் ஒன்றியத்தில் அத்தகைய எதிர்புரட்சி சக்திகளை மிகச்சரியாக அடையாளங்கண்டு தடுத்து நிறுத்துவதில் ஏற்பட்ட தோல்வியும், சோசலிச கட்டு மானத்தில் ஏற்பட்ட தவறுகளுமே சுமார் 70 ஆண்டுகளுக்குப் பின்னர் 1991ல் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சி அடைந்தது. சோசலிசப் புரட்சிக்கு அங்கு பின்னடைவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகளிலும் பின்னடைவு ஏற்பட்டது.  அதற்குப் பிறகு முதலாளித்துவம் உலகம் முழுவதும் தொழிலாளர் வர்க்கத்தின் மீது, விவசாய வர்க்கத்தின் மீது நவீன தாராளமய பொருளாதார கொள்கைகள் உள்பட மூலதனத்தின் கொடிய சுரண்டலை வலுவான முறை யில் தீவிரப்படுத்தியுள்ளது. தொழி லாளர்கள் - விவசாயிகள்  உட்பட கரத்தா லும் கருத்தாலும் உழைக்கும் பாட்டாளி மக்கள் மீண்டும் எழுவது உறுதி; சோச லிசம் வெல்வது உறுதி. மார்க்சியம் கண்ட றிந்த மனித சமூகத்தின் இயக்கவியல் விதி இதை உறுதிசெய்கிறது.

இந்தியப் புரட்சி

அதன் ஒரு பகுதியாக இந்தியப் புரட்சியும் நிச்சயம் மகத்தான வெற்றி பெறும். இந்தியாவில் ஒன்றுபட்ட கம்யூ னிஸ்ட் இயக்கம் புரட்சிகரமான பாதை யில் பயணத்தை துவங்கியது. இந்திய சமூக நிலைமைகளுக்கு ஏற்ப, இந்தியப் புரட்சியை கட்டமைப்பது தொடர்பாக ஏற்பட்ட தத்துவார்த்த முரண்பாடுகளின் பின்னணியில் 1964ல், மக்கள் ஜனநா யகப் புரட்சி எனும் மகத்தான திட்டத்தை முன் வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானது. முதலாளித்துவ சக்தி களோடு இயைந்து செல்வதும் அல்ல; அதிதீவிரப் பாதையில்  ஆயுதமேந்தி மக்களிடமிருந்து தனிமைப்பட்டுப் போவ தும் அல்ல; மாறாக இந்திய மக்களில் மிகப்பெருவாரியான உழைக்கும் வர்க்க மாக உள்ள தொழிலாளர் - விவசாயிகள் ஒற்றுமையை வலுப்படுத்தி, இந்த இருபெரும் வர்க்கங்களின் நலன்களை முதன்மையாக முன்னிறுத்தி மக்கள்  ஜனநாயக முன்னணியை கட்டமைப்பது; அதன் மூலம் மக்கள் ஜனநாயக புரட்சியை உருவாக்குவது என்ற - இந்திய மண்ணுக்கேற்ற மார்க்சியப் புரட்சித் திட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உயர்த்திப் பிடித்து, அந்தப் பாதையில் முன்னேறி வருகிறது.  இன்று இந்திய நாட்டில் பாசிச குணம் கொண்ட, வெறுப்பு அரசியலை முன்னிறுத்தி இந்துத்துவா ராஜ்ஜி யத்தை உருவாக்க முயற்சித்து வருகிற ஆர்எஸ்எஸ் - பாஜக மதவெறி சக்திகள்,  ஏற்கெனவே இந்தியாவில் அமலில் உள்ள முதலாளித்துவ ஜனநாயக மாண்புகளை அழித்து, ஒட்டுமொத்த நாட்டையும் பின்னோக்கி இழுத்துச் செல்ல முயற்சிக்கின்றன. மதச்சார் பின்மை விழுமியங்களை அழித் தொழிக்க முயற்சிக்கின்றன. இத்தகைய சக்திகளிடமிருந்து உடனடியாக ஜன நாயகத்தைப் பாதுகாப்பதும் தேசத்தைப் பாதுகாப்பதும் அவசியமாகிறது; முதன் மைக் கடமையாக மாறியிருக்கிறது.  

அதேபோல, உழைப்பாளி மக்களின்  ஒற்றுமையை சிதைத்து, அவர்களின் புரட்சிகர பயணத்தை தடுக்கவும் மதவெறி சக்திகள் முயற்சிக்கின்றன. எனவே,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்ட மான மக்கள் ஜனநாயகப் புரட்சியை நோக்கிய நீண்ட பயணத்தில், தற்போ தைய கட்டம், பாசிச குணம் கொண்ட மத வெறி சக்திகளிடமிருந்து இந்திய ஜன நாயகத்தையும் உழைக்கும் மக்களின் ஒற்றுமையையும் பாதுகாப்பதாகும்.  அந்த உயரிய பணியில் மார்க்சிஸ்ட் கட்சி  தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. மதவெறி மாய்த்து, ஜன நாயகம் காத்து, அதன் மூலம் இந்தியப் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் இந்தியப் புரட்சியின் அடுத்த கட்டத்தை நோக்கி உறுதியோடு முன் செல்வோம் என நவம்பர் புரட்சி தினத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியேற்கிறது. கட்சி மற்றும் வர்க்க, வெகுஜன இயக்கங் களின் அனைத்து தோழர்களுக்கும், ஊழியர்களுக்கும் நவம்பர் புரட்சி தின வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.