states

மார்ச் 28 - அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்

 சிவகங்கை, பிப்.26- தேர்தல் கால வாக்குறுதிகளை  நிறைவேற்றக்கோரி மார்ச் 28  அன்று அரசு ஊழியர்கள் வேலை  நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட  உள்ளதாக தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தின் மாநிலப்பொதுச் செயலாளர் ஆ.செல்வம் அறிவித் துள்ளார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங் கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சிவகங்கையில் அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் ஞாயிறன்று நடை பெற்றது. இக்கூட்டத்தில் மாநிலத்  தலைவர் அன்பரசு, மாநில பொதுச்  செயலாளர் ஆ.செல்வம், மாநில  பொருளாளர் பாஸ்கரன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் மாநிலப் பொதுச்செய லாளர் ஆ.செல்வம் செய்தியாளர் களிடம் கூறுகையில், கடந்த கால  அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர் கள் புறக்கணிக்கப்பட்டனர். திமுக  ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழி யர்கள், ஆசிரியர்கள் பிரச்சனை  தீர்க்கப்படும் என்று தமிழ்நாடு முதல் வரால் உறுதியளிக்கப்பட்டிருந்தது .ஆட்சிக்கு வந்து 20 மாதம் கடந்து விட்டது. 20 மாத காலத்தில் அரசு  ஊழியர் சங்க பிரதிநிதிகள் ஆறு  முறை முதல்வரை சந்தித்து  பேசியிருக்கிறோம். கோரிக்கை களை பரிசீலிப்பதாகத்தான் தெரி வித்து வந்திருக்கிறார்கள்.

பிரதான கோரிக்கைகளை தேர்தல் கால வாக்குறுதியாக அளித்திருந்தனர். புதிய பென்சன் திட்டத்தை ரத்து  செய்து, பழைய பென்சன் திட்டத்தை  வழங்குவோம் என்று தமிழ்நாடு முதல்  வர் தேர்தல் கால வாக்குறுதியாக அறிவித்திருந்தார் .39 ஆண்டுகால மாக கொத்தடிமைகளாக பணி யாற்றி வரக்கூடிய சத்துணவு, அங்  கன்வாடி, ஊர்ப்புற நூலகர், எம்ஆர்பி செவிலியர் என மூன்றரை  லட்சம் ஊழியர்களுக்கு  காலமுறை  ஊதியம் வழங்க வேண்டும். மாந கராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகி யவற்றில் அவுட்சோர்சிங் முறை யில் பணியிடங்களை நிரப்ப அரசு போட்ட உத்தரவு சமூக நீதிக்கு எதி ரானது.இளைஞர்களுக்கு விரோத மானதாகும்.அதனால் அவுட்சோர் சிங் அரசாணைகளை ரத்து செய்  திட வேண்டும். மாநில பிரதிநிதித் துவ பேரவையில் எடுத்த முடிவுப் படி ஐந்து கட்ட போராட்டம் அறி விக்கப்பட்டிருந்தது.இதில் மூன்று கட்ட போராட்டம் முடிவுக்கு வந்தது.  அடுத்து மார்ச் 28 அன்று வேலை  நிறுத்தப் போராட்டம் நடத்த தீர்மா னித்துள்ளோம். பட்ஜெட் கூட்டத் தொடரின்போது சட்டமன்ற அலு வலகம் முற்றுகை போராட்டம்  நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. ஒன்றிய அரசின் 21 மாத காலம் நிலுவைத்தொகை வழங்க வேண்  டும். உடன் சரண்டர், நிறுத்தி வைக் கப்பட்டுள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும். ஜாக்டோஜியோ சார்பில் மார்ச் 5 ஆம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டமும்,மார்ச் 24 இல் மனித சங்கிலி போராட்டமும் நடைபெற உள்ளது என்று தெரிவித்தார்.