உதகமண்டலம், ஏப். 21- ஒன்றிய மோடி அரசு, மக்களை மத ரீதியிலான பிளவுபடுத்திக் கொண்டே, கார்ப்பரேட்டுகளின் நலனை பாதுகாப்பதற்காக மட்டுமே ஆட்சியை நடத்திக்கொண்டி ருக்கிறது என சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் குற்றம்சாட்டினார். மார்க்சிஸ்ட் கட்சியின் மறைந்த மூத்த தோழர் வி.வி.கிரி அவர்களின் படத்திறப்பு விழா நீலகிரி மாவட்டக் குழு சார்பில் வியாழனன்று நடை பெற்றது. ஊட்டியில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு, ஆதிரா தலைமை ஏற்றார். இதில், மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ், ஆர்.பத்ரி, மாவட்டச் செய லாளர் வி.ஏ.பாஸ்கரன் மற்றும் மூத்த தோழர் சங்கரலிங்கம் உள்ளி ட்ட தலைவர்கள் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மறைந்த தோழர் வி.வி.கிரி படத்தை திறந்து வைத்துப் பேசினார். அவர் பேசுகையில், கடந்த 75 ஆண்டு சுதந்திர இந்திய வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில், தற்போது 140 கோடி மக்களும் கடும் நெருக்கடியை சந்தித்து கொண்டு உள்ளனர். பாஜக ஆட்சி செய்யும் உத்தரப்பிர தேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. ஒன்றிய மோடி அரசு ஒருபுறம் மத ரீதியில் மக்களை பிளவு படுத்தி மோதல்கள் உருவாக்கு கிறது. மற்றொருபுறம் கார்ப்பரேட் நிறுவனங்கள் வளம் கொழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களுக்கு மட்டுமே ஆதரவு தரும் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது.
2014 ஆம் ஆண்டு மோடி பிரதம ராகும் போது உலக பணக்காரர்கள் வரிசையில் 609ஆவது இடத்தில் இருந்த அதானி கடந்த ஆண்டு இரண்டாவது இடத்தை எப்படி பிடித்தார். அதானி நிறுவனத்தில் நடந்த விதிமீறல்கள் குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஆய்வு செய்து பக்கம் பக்கமாக அறிக்கை வெளியிட்டது. இதுகுறித்து பிரதமர் வாய் திறக்க மறுக்கிறார். நடைபெற்று முடிந்த நாடாளு மன்ற கூட்டத்தில் அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இந்திய பொருளாதா ரத்தில், பெரும் பாதிப்பை உரு வாக்கியுள்ள ஒரு தனி நபர் அதானி குறித்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி னால், ஆளும் கட்சியே நாடாளு மன்றத்தை முடக்குகிறது என்றால், எந்த அளவிற்கு இவர்களுக்கு கார்ப்பரேட்டுகளின் மீதான பாசம் என்பது தெரியவரும். நாடாளுமன்ற கூட்டத்தில், ரூ.45 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டை 12 நிமிடத்தில் விவாதமின்றி நிறை வேற்றிவிட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக், சமீபத்தில் ஒரு இணைய தளத்திற்கு, புல்வாமா தாக்குத லில் இந்திய வீரர்கள் மரண மடைந்தது குறித்து அளித்த பேட்டி யில், “ஜம்முவில் இருந்து ராணுவ வீரர்கள் ஸ்ரீநகருக்கு சாலை மார்க்கமாக பயணித்தால் ஆபத்து என்பதால் விமானம் மூலம் பய ணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் விமானம் வழங்கப்படாததால் சாலை மார்க்கமாக சென்று தீவிரவாதிகள் தாக்குதலில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நம்முடைய தவறுதான் ராணுவ வீரர்கள் உயிரிழப்பிற்கு காரணம் என பிரதமரிடம் தெரிவித்தேன். அது குறித்து வெளியில் கூற வேண்டாம் என பிரதமர் சொல்லிவிட்டார்”, என்றார். ஆனால் இந்த விவகாரம் குறித்து இதுவரை பிரதமர் இதுவும் பேசவில்லை. கார்ப்பரேட்டுகளின் கள வாணித்தனத்திற்கு துணை போகும் ஒன்றிய மோடி அரசை விரட்டுவோம். இதற்கான களப்பணிகளை முன்னெடுப்போம், வி.வி.கிரி போன்ற தியாகத் தலைவர்களின் பாதையில் நடைபோடுவோம் என்றார்.