புதுதில்லி, நவ. 16 - மாற்றுத் தீர்வை முன்வைக்கா மல், வெறுமனே கொலீஜியம் முறை யை விமர்சிப்பதால் எந்தப் பயனும் இல்லை என்று உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் தெரிவித்துள்ளார். கொலீஜியம் என்பது, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையில், மூத்த நீதிபதிகள் நான்குபேரைக் கொண்ட அமைப் பாகும். உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் நியமனங்களை இந்த கொலீஜியம் அமைப்பே மேற்கொ ண்டு வருகிறது. அதாவது, கொலீஜி யம் பரிந்துரையின் அடிப்படையில் ஒன்றிய அரசு நியமனங்களுக்கான உத்தரவுகளைப் பிறப்பிக்கும். ஆனால், இந்த கொலீஜியம் நடைமுறையில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று அவ்வப் போது விமர்சனங்கள் எழுந்து வரு கின்றன. அண்மையில் நீதித் துறை சீர்திருத்தம் தொடர்பான மாநாட்டில் பேசுகையில், ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு-வும், கொலீஜியம் மூலமான நியமனங் களுக்கான எதிர்ப்பு தெரிவித்திருந் தார். ‘கொலீஜியம் முறை திருப்தி கரமாக இல்லை என நாட்டு மக்கள் கருதுகின்றனர்; அரசமைப்புச் சட்டக் கூறுகளின்படி, நீதிபதிகளை நியமிப்பது அரசின் பணியே ஆகும். அரசு இந்தப் பணியை மேற்கொள் ளும்போது, நியமனத்துக்கு முன் நுண்ணறிவுப் பிரிவு மற்றும் பல்வேறு விசாரணை அமைப்புகளி டம் அறிக்கை பெற்று முடிவு எடு க்கும். ஆனால், நீதித்துறையோ, நீதிபதிகளோ இதைச் செய்ய முடி யாது. உலகம் முழுவதும் அரசு தான் நீதிபதிகளை நியமித்து வரு கிறது’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், கொலீஜி யத்திற்கு எதிரான விமர்சனங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் தில்லியில் நடைபெற்ற விழாவில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “கொலீஜியம் சரியான நடை முறை அல்ல என்று தினமும் யாரா வது கூறுவதை செய்திகளில் படிக் கிறோம். கொலீஜியம் முறை மிகச் சரியானது என்று யாரும் கூற முடியாது; அதேசமயம், தற் போதைய தலைமை நீதிபதி (டி.ஒய். சந்திரசூட்) அண்மையில் குறிப்பிட்ட தைப் போல அந்த முறையை மேம்படுத்த முடியும். அவ்வாறான முயற்சிகளுக்கு எதிராக யாரும் விவாதிக்கமாட்டாா்கள் என எண்ணு கிறேன். கொலீஜியம் முறைக்கு மாற்றாக தேசிய நீதித்துறை நியமனங்கள் ஆணையத்தை உருவாக்கும் சட்டத்தை ஒன்றிய அரசு கடந்த 2014-இல் இயற்றியது. நீதித் துறையின் சுதந்திரத்தை சமரசம் செய்யும் வகையில் இருந்ததால், அச்சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. ஆனால், அதே விஷ யத்தை செய்வதற்கு வேறு வாய்ப்பு களோ அல்லது வழிகளோ இல்லை என்று அா்த்தமில்லை. எனவே, அனைத்து வழிகளிலும் முயற்சிக்க லாம். மாற்றுத் தீர்வைக் குறிப்பிடா மல், கொலீஜியம் முறையை வெறு மனே விமர்சிப்பது எந்தப் பலனை யும் தராது. கூட்டாட்சித் தன்மையைப் பாதுகாப்பதோ அல்லது நாட்டின் அடிப்படை உரிமைகள் அல்லது மதச்சார்பற்ற தன்மையை பாதுகாப்பதாயினும், இவை இறுதி யில் ஒரு சுதந்திரமான நீதித்துறை யால் மட்டுமே கவனிக்கப்படக் கூடிய அம்சங்களாகும். அங்கு தான் நீதித்துறை மற்றும் ஊடகங் களின் பங்கு அதிக முக்கியத்துவம் பெறுகிறது என்று நான் நினைக் கிறேன்.” இவ்வாறு டி.எஸ். தாக்கூர் கூறியுள்ளார். தாக்கூர் டிசம்பர் 2015 முதல் ஜன வரி 2017 வரை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.