புதுதில்லி, பிப்.10- மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆனால் உள் கட்டமைப்பு வசதி இல்லை என விநோத விளக்கம் அளித்தார் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா. மதுரையில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக (எய்ம்ஸ்) வளாகம் கட்டுவதில் தாமதம் ஏற்படுவ தாகக் கூறி, மக்களவையில் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்தனர். எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டு மானப் பணிகள் குறித்து கேள்வி யெழுப்பியதற்கு பதிலளித்த மன்சுக் மாண்டவியா, “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆனால் உள் கட்டமைப்பு வசதி இல்லை” என்றார். அப்போது குறுக்கிட்டுப் பேசிய திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, “இந்தியாவில் எத்தனை கல்லூரிகள் உள்கட்டமைப்பு இல்லா மல் தொடங்கப்பட்டுள்ளன, பிரதமரால் திறந்து வைக்கப்பட்ட எத்தனை கல்லூரிகளில் கட்டுமானப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை? எனக் கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “எந்த விஷ யத்திலும் அரசியல் செய்யலாம். நீங்கள் எழுப்பும் கேள்வி மதுரை எய்ம்ஸ் தொடர்பானது தான். மதுரை எய்ம்ஸில் கற்பிக்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது, உள்கட்ட மைப்பு மட்டும் இல்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மக்க ளுக்கு ஏன் தவறான தகவல்களைத் தருகிறீர்கள்” என்று எரிச்சல் அடைந்தார்.
2019-ஆம் ஆண்டு ரூ.1,276 கோடியில் எய்ம்ஸ்-மதுரை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு மூன்று ஆண்டு கள் ஆகியும், கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை என்பது அர சுக்குத் தெரியுமா என்று திமுக உறுப்பி னர் வி.கலாநிதி கேள்வியெழுப்பினார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதைத் தெரிவிக்க வேண்டும் என்றார். அதற்குப் பதிலளித்த அமைச்சர், முதல் அறிக்கை, மாஸ்டர் பிளான், வசதிகள் மருத்துவமனை வடிவமைப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்ட தைத் தொடர்ந்து, 2021-ஆம் ஆண்டு மார்ச் 26-ஆம் தேதி அன்று ஜப்பான் மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கு இடையே கடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. 150 படுக்கைகள் கொண்ட தொற்று நோய்கள் பகுதி உள்ளிட்ட வேறு சில வசதிகளை மேம்படுத்த முடிவு செய்ததன் காரண மாக, திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ.1,977.8 என ஜெய்கா நிறுவனம் மதிப்பீடு செய்தது. இதையடுத்து அமைச்சகம் நிதி மதிப்பீட்டிற்கான முன்மொழிவை உரிய அறிக்கையுடன் செலவினத் துறைக்கு சமர்ப்பித்தது. செலவினத் துறையின் ஆய்வுக்குப் பிறகு, ஒப்புதல் அளித்தது. திருத்தப்பட்ட செல வினத்திற்கு 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி அமைச்சர வை அங்கீகரித்துள்ளது என்றார். மாண்டவியாவின் பதிலில் திருப்தியில்லை என காங்கிரஸ்- திமுக உறுப்பினர்கள் அமைச்சரின் பதிலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.