சென்னை, ஆக.5- தமிழ்நாட்டில் இந்த ஆண்டும் செப்டம்பர் 1 ஆம் தேதி நெல் கொள்முதலை தொடங்க ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆண்டுதோறும் குறுவை, சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெல், தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படு கிறது. அதற்கான தொகை குறிப் பிட்ட காலத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2022-23 ஆம் ஆண்டு கொள்முதல் (காரீப்) பருவத்தில் 3,497 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன, ஒன்றிய அரசின் முன் அனுமதி பெற்று, முன்கூட்டியே அதாவது செப்.1 ஆம் தேதி முதல் கொள்முதல் மேற்கொள்ளப்பட்டது. வழக்கமாக இது அக்டோபரில் தொடங்கும். 2022 செப்.1 ஆம் தேதி முதல் கடந்த ஜூலை 25 ஆம் தேதி வரை 42.29 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 8.82 லட்சம் விவசாயி களின் வங்கிக் கணக்கில் ரூ.9,096.67 கோடி வரவு வைக்கப்பட்டது. இந்த பருவத்தில் 9.70 லட்சம் டன் கூடுத லாக கொள்முதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் கோரிக்கை
இந்நிலையில், 2023-24 ஆம் ஆண்டு காரீப் பருவத்துக்கு நெல் கொள்முதல் முன்கூட்டியே, அதா வது செப்.1 ஆம் தேதி முதல் தொடங்க அனுமதி அளிக்குமாறு, ஒன்றிய உணவுத் துறை அமைச்ச ருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடி தம் எழுதினார். தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேரில் சந்தித்து வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து, அமைச்சர் அறிவுறுத்தலின் படி, கொள்முதல் செய்வதற்கான முன்னேற்பாடுகள், அரவை ஆலைக்கு அனுப்ப தேவை யான ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டு வந்தது. இந்நிலையில், முதல்வரின் கோரிக்கையை ஏற்று, செப்.1 ஆம் தேதி நெல் கொள்முதல் தொடங்க ஒன்றிய அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தலைமை செயலருக்கு ஒன்றிய உணவுத் துறை சார்பு செயலர் அசோக் குமார் வர்மா எழுதியுள்ள கடிதத்தில், ‘தமிழ்நாடு அரசு கடந்த ஜூலை 21 ஆம் தேதி கடிதத்தில் கேட்டுக் கொண்டதன் படி, 2023-24 காரீப் பருவத்துக்கு நெல் கொள் முதலை செப்.1 ஆம் தேதி முதல் மேற்கொள்ள ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. கொள்முதல் அளவு, அரவை பருவம் தொடர்பான முடிவுகள் ஆகஸ்ட் இறுதியில் நடைபெறும் மாநில உணவுத் துறை செயலா ளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப் படும்’ என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, நெல் கொள் முதலுக்கான அடுத்த கட்ட நடவடிக் கைகளை தமிழக உணவுத் துறை விரைவில் தொடங்க உள்ளது.