states

‘பிரதமரின் வெற்றுப் பயணங்கள்’

ஒன்றிய அரசு என்றால், எல்லா மாநிலங்களையும் மதிக்கணும்! வளர்க்கணும்! ஆனால், இன்றைக்கு ஒன்றியத்தை ஆளுகின்ற அரசு அப்படி செயல்படவில்லை. மாநிலங்களையே அழித்து, நம்முடைய மொழியை – இனத்தை – பண்பாட்டை அழிக்கப் பார்க்கிறது. மாநிலங்கள் ஒன்றி ணைந்ததுதான் ஒன்றிய அரசு. இதை உணராமல் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். தேர்தல் நெருங்கி வருவதால், பிரதமரும் அடிக்கடி சுற்றுப்பயணம் வருகிறார். இந்த சுற்றுப்பய ணங்களை தமிழ்நாட்டு மக்கள் வெற்றுப் பயணங்களாகத்தான் பார்க்கிறார்கள். இந்த பயணங்களால் ஏதாவது வளர்ச்சித் திட்டங்கள் இருக்கிறதா? 2019 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கே இப்போதுதான் கட்டு மானப் பணியை தொடங்கப் போவதாக நாடகம் நடத்து கிறார்கள். தேர்தல் முடிந்ததும் நிறுத்திடுவார்கள்.  10 ஆண்டுகளாக மேலும் 500 ரூபாய் சிலிண்டர் விலையை உயர்த்திட்டு, இப்போது தேர்தலுக்காக 100 ரூபாயை மட்டும் தான் பிரதமர் குறைத்துள்ளார். அப்பட்டமான மோசடி வேலை யில்லையா இது? இதைவிட மக்களை ஏமாற்றுகிற செயல் இருக்க முடியுமா? சென்னை, தூத்துக்குடியில் வெள்ளம் வந்தபோது பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வராத பிரதமர் மோடி, இப்போது வாக்கு கேட்டுதான் வருகிறார் என்பது மக்களுக்குத் தெரியும்.  என்ன வளர்ச்சி நிதி தந்தார்? ‘தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சி நிதியை கொள்ளையடிக்க நான் விடமாட்டேன்’ என்று சொல்லி இருக்கிறார் பிரதமர்.  தமிழ்நாட்டுக்கு அவர் என்ன வளர்ச்சி நிதியை கொடுத்திருக்கார்?  ஜிஎஸ்டி வரி இழப்பீடு நிறுத்தியதால், தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய 20 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கவில்லை. வெள்ள நிவாரணமாக நாம் கேட்ட ரூ.37 ஆயிரம் கோடியை தரவில்லை. மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு பணம் தரவில்லை, ஒப்புதலும் வழங்கவில்லை. பிரதமர் வீடுகட்டும் திட்டத்துக்கு முக்கால் பங்கு பணம் தருவது மாநில அரசுதான். வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குகிற ஜல் ஜீவன் திட்டத்துக்கு மாநில அரசின் பங்களிப்பு 50 விழுக்காடு. இதை  எல்லாம் வைத்து பார்க்கும்போது மாநில அரசிடம் பணம் வாங்கித்தான் தன்னுடைய ஸ்டிக்கரை பிரதமர் ஒட்டிக் கொள்கிறார் என்று அவருக்கு நான் நினைவூட்ட விரும்புகிறேன். வெறும் கையால் முழம் போடுவது என்று சொல்லுவார்கள். அதுபோல, தமிழ்நாட்டுக்கு வந்து வெறும் கையால் முழம் போட்டுக் கொண்டு இருக்கிறார் நம்முடைய பிரதமர் மோடி. தேர்தல் நேரத்தில் மட்டும்தான் பிரதமருக்கு மக்கள் மேல் பாசம்  பொங்கும். 

தருமபுரியில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையிலிருந்து