states

காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக் கூடாது; கர்நாடகத்தில் தொடரும் பாஜக போராட்டம்!

மாண்டியா, ஆக. 22 - காவிரிநீரைத் தமிழ்நாட்டுக்கு திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக பாஜக-வினர் செவ்வாயன்று 2-ஆவது நாளாக போராட்டம் நடத்தினர்.  எந்தக் காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கூடாது என்று கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான பவச ராஜ் பொம்மை எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதுதொடர் பாக மாநில முதல்வர் சித்தராமையாவுக்கு அவர் கடிதம் எழுதினார்.  ஆனால், பாஜக தலைவரின் எதிர்ப்பையும் மீறி, அண்மையில், காவிரியில் 10 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு தமிழகத்திற்கு திறந்து விட்டது. இதற்கு பாஜக, மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கர்நாடக காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்தன. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படியே தண்ணீர் திறந்து விடப் பட்டது என்று துணைமுதல்வர் டி.கே. சிவக்குமார் அளித்த பதிலை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. குறிப்பாக, பாஜக-வினர் கர்நாடகத்தின் பல்வேறு பகுதியில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். குறிப்பாக, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பதை எதிர்த்து, மாண்டி யா பகுதிகளில் தொடர்ந்து 2-ஆவது நாளாக பாஜக-வினர் போராட்டம் நடத்தியுள்ளனர். காவிரி விவகாரம் தொடர்பாக பேசியுள்ள ஒன்றிய பாஜக அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், நீதிமன்றத்திலோ அல்லது அனைத்துக் கட்சிக் கூட்டத்திலோ எந்தவித முன் ஆலோசனையும் இன்றி, காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார், காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 10 டிஎம்சி  தண்ணீர் விடுவதாக அறிவித்துள்ளார். விவசாயிகள் மிகுந்த துயரத்தில் இருக்கும்போது, அவர் ஏன் அதை செய்தார்? இந்தியா (I.N.D.I.A) கூட்டணியின்  முக்கிய கட்சியாக உள்ள திமுகவின் அழுத்தத்தால் சிவக்குமார் இதைச் செய்துள்ளார்” என ஆவேசப்பட்டுள்ளார்.