ஓசூர் சிவகாசியில் பாதாள சாக்கடை திட்டம்
தாள சாக்கடை திட்டம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதனன்று (ஜன.11) நடந்த கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் அளித்த பதில் வருமாறு:- கோ.தளபதி திமுக : மதுரையில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை குழாய்கள் மாற்றி அமைக்கப்படுமா? அமைச்சர் கே.என்.நேரு: தமிழ் நாட்டில் 21 மாநகராட்சிகள் உள்ளன. இதில் 19 மாநகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஓசூர் மற்றும் சிவகாசியில் விரைவில் இந்த பணிகள் தொடங்க உள்ளது. மதுரையில் ரூ.500 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், ஏற்கனவே உள்ள குழாய்களை மாற்றுவது தொடர்பாக ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு கொள்கை முடிவு
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெரு நகரங்களின் அருகில் உள்ள நகரங்களி லும், பெருநகரங்களுக்கு இணையான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. மக்கள் தொகையின் அடிப்படையில் இல்லாமல், எங்கு தேவை உள்ளதோ, அங்கு இதுபோன்ற திட்டங்களை செயல் படுத்த கொள்கை முடிவு எடுக்கப்படும். இதன்மூலம் பெருநகரங்களில் மக்கள் நெருக்கடி குறையும்.
10 ஆண்டுகளாக பாதாள சாக்கடை அமைக்காத அதிமுக!
ஆர்.பி.உதயகுமார் (அதிமுக): மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சி பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா? அமைச்சர் கே.என்.நேரு: திருமங்க லம் நகராட்சி முதல் நிலை நகராட்சியா கும். தற்போது 60 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். 19 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. திருமங்கலத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த ரூ.400 கோடி செலவு ஆகும். இதை பராமரிக்கும் அளவுக்கு அந்த நகராட்சிக்கு வருவாய் இருக்க வேண்டும். எனவே திருமங்கலத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தும் பணி அரசின் பரிசீலனையில் உள்ளது. நிதி நிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்ப டும். அதிமுக ஆட்சியில் இரண்டு முறை பத்தாண்டு காலம் வருவாய்த்துறை அமைச்சராக இருந்த உதயகுமார், தனது தொகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வரவில்லை என்பதை அமைச்சர் நேரு சுட்டிக்காட்டினார்.
மன்னார்குடியை நோக்கியும் பயணிக்கும் டைடல் பார்க் !
டி.ஆர்.பி.ராஜா (திமுக): டெல்டா மாவட்டங்களில் தொழிற்சாலை என்பதே கிடையாது. ஆகவே, எனது மன்னார்குடி தொகுதியில் விவசாயம் சார்ந்த தொழிற் பூங்கா அமைக்கப்படுமா? சிறு நகரங்களிலும் தொழிற் பூங்கா அமைக்க அரசு முன்வருமா? அமைச்சர் தங்கம் தென்னரசு: டெல்டா மாவட்டங்கள் குறுநிலை அமைப்பை கொண்டதாகும். இந்த பகுதியில் வேளாண் உற்பத்தி மண்டலம் அமைக்கப் படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. குறிப்பாக உணவு பொருட்கள் தயாரிப் புக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். குறிப்பாக, இரண்டாம் கட்ட நகரங்க ளுக்கும் தொழிற் பூங்காக்கள் செல்ல வேண்டும் என்பதுதான் முதல்வரின் விருப்பம். எனவே, தஞ்சை, திருச்சி, மன்னார்குடி போன்ற நகரங்களை நோக்கியும் டைடல் பார்க் பயணம் செய்யும்.