states

img

பாலக்காடு கொலைகள் மீது சமரசமற்ற நடவடிக்கை

திருவனந்தபுரம், ஏப்.18- பாலக்காட்டில் நடந்த தாக்குதல் மற்றும் கொலைகள் மனித மனசாட்சிக்கு விரோதமானது என முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கோவிட் நெருக்கடியை சமாளிக்கவும், நாட்டின் முன்னேற்றம் மற்றும் ஒளிமய மான எதிர்காலத்திற்காகவும் கேரளா ஒன்றிணைந்து முன்னேறும் நேரத்தில் இந்த கொலைகள் நடத்தப்பட்டன.  நாட்டின் நலனுக்குக் கேடு விளை விக்கும் இக்கொடூரச் செயல்களுக்குக் காரணமானவர்கள் மீது அரசு தரப்பில் சமரசமற்ற அணுகுமுறை இருக்கும். அவர்கள் மீது கடுமையான சட்ட  நடவடிக்கை எடுக்க காவல்துறை யினருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கேரளாவில் சகோதரத்துவத்தையும் அமைதியையும் குலைக்க எந்த சக்தியையும் அனுமதிக்க முடியாது. இதுபோன்ற முயற்சிகளுக்கு எதிராக மக்களை ஒன்றிணைத்து உறுதியாக நிற்போம். ஒன்றாக நாம் ஒருமனதாக முன்னேறுவோம். நட்பு மற்றும் மனித நேயத்தின் கேரள மாதிரி பாதுகாக்கப்படும். வகுப்புவாத விஷத்தையும் குறுகிய மனப்பான்மையையும் கொண்டு நாட்டை குழப்பும் இத்தகைய சக்திகளை இனங்கண்டு மக்கள் அவர்களை விலக்கி வைக்க வேண்டும் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.