states

கல்லூரிகளில் சாதி பாகுபாடு: யுஜிசி கண்டிப்பு

சென்னை, ஜூன் 21- கல்லூரிகளில் முதலாம் ஆண்டில், புதிய மாணவர்கள் வர வுள்ளதால், சாதி பாகுபாடு ஏற்படா மல் தடுக்க வேண்டும் என பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி., அறி வுறுத்தியுள்ளது. நாடு முழுதும் அனைத்து கல்லூரி, பல்கலைக் கழகங்களில் புதிய கல்வி ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்ந்துள் ளனர். இந்த மாணவர்களுக்கு, பல்வேறு கட்டங்களில் வகுப்புகள் துவங்கி உள்ளன. இந்நிலையில், பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி. சார்பில், உயர்கல்வி நிறு வனங்களுக்கு சுற்றறிக்கை அனுப் பப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: கல்லூரிகள், பல்கலைகள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங் களில், சாதிய, இன பாகுபாட்டை தடுக்க, பல்வேறு வழிமுறைகளை யு.ஜி.சி., வகுத்துள்ளது. இதன்படி, அனைத்து கல்லூரிகளும், பல்கலை களும், மாணவர்களிடையே சாதி பாகுபாடு ஏற்படாமல் தடுக்க, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். இதுகுறித்து, நடுநிலையாக செயல்படும் அதிகாரிகள் மற்றும் பேராசிரியர்களை கொண்ட கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். சாதி பாகுபாட்டால் மாணவர்கள், பேராசிரியர்கள், ஊழி யர்கள் பாதிக்கப்பட்டால், அவர்கள் சுதந்திரமாக புகார் அளிக்கவும், அந்த தகவல்களை ரகசியமாக பாதுகாப்பதுடன், தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.