states

திருக்காக்கரையில் யுடிஎப் வெற்றி தேர்தல் முடிவு எதிர்பாராதது : சிபிஎம்

கொச்சி, ஜுன் 3- கேரள மாநிலம் திருக்காக்கரை சட்டப்பேரவை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் யுடிஎப் வேட்பா ளர் உமா தாமஸ் வெற்றி பெற்றார். இந்த முடிவு எதிர்பாராதது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எர்ணாகுளம் மாவட்டச் செயலாளர் சி.என்.மோகனன் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். ஒருமாத கால அவகாசத்தில் செய்த வேலையைப் பார்த்தால், எக்காரணம் கொண்டும் இப்படி ஒரு தீர்ப்பை எதிர்பார்க்கவில்லை. முடிவு பற்றிய விவ ரங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது நம்ப முடியாதது. மற்ற விசயங்கள் பின்னர் விளக்கப்படும். சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டிய தருணம் இது என்றார். மாவட்டத்தில் சிபிஎம் தலைமையில் தேர்தல் பிரச்சாரம் நடந்தது. கட்சி முடிவின்படி முதல்வர், அமைச்சர்கள் தொகுதிக்கு வந்தனர். இது ஆட்சி குறித்த மதிப்பீடு என்று சொல்ல முடியாது. இது மாநிலம் தழுவிய தேர்தல் அல்ல. இது ஒரு தொகுதியின் இடைத்தேர்தல். எல்டிஎப் ஒரு வேட்பாளரை மட்டுமே முடிவு செய்தது. வாக்கு எண்ணிக்கையை சரிபார்த்த பிறகே மற்ற விவரங்கள் தெரியவரும் என்றார் சி.என்.மோகனன்.

வாக்கு விவரம்

உமா தாமஸ் (யுடிஎப்) - 72770, டாக்டர் ஜோ ஜோசப் (எல்டிஎப்)- 47,754, ஏ.என்.ராதாகிருஷ்ணன் (பாஜக) 12,957. உமா தாமஸ் 25,016 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2021 தேர்தலில் பெற்றதைவிட எல்டிஎப் 2,246 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளது. பாஜக 2,526 வாக்குகளை இழந்துள்ளது. கடந்த தேர்தலில் 13,773 வாக்குகள் பெற்ற 20-20 கட்சி ஆம்ஆத்மியுடன் கூட்டணி அமைத்தது. தில்லி முதல்வர் கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சா ரமும் செய்தார். ஆனால், வேட்பாளரை நிறுத்தாமல் நடுநிலை வகிப்பதாக அறிவித்தது இந்த நான்காவது முன்னணி. இந்த நிலைப்பாடு வாக்குகள் சிதறாமல் யுடிஎப் வெற்றி பெற உதவி உள்ளதாக கருதப்படுகிறது.