states

மதுரை முக்கிய செய்திகள்

முல்லைப்பெரியாற்றில்   மூழ்கி இரண்டு குழந்தைகள் பலி

தேனி ,ஏப்.4- சின்னமனூர் அருகே முல்லைப்பெரியாற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு குழந்தைகள் தாயின் கண் முன்னே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள துரைச் சாமிபுரத்தைச் சேர்ந்த தம்பதியர் மணிகண்டன்-கலாவதி. இவர்களுக்கு  தீனதயாளன்(10) என்ற மகனும், மகாசக்தி (7) என்ற மகளும் உள்ளனர். கலாவதி செவ்வாய்க்கிழமை  இங்குள்ள முல்லைப் பெரியாற்றின் தடுப்பணை பகுதியில்  துணி துவைக்கச் சென்றார். பள்ளிக்கு விடுமுறை என்பதால் இரண்டு குழந்தைகளும் அவருடன் சென்றனர். ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது ஆழமான பகுதியில் சிக்கி இரண்டு குழந்தைகளும்  உயிரிழந்தனர்.குழந்தைகள் இறப்பு குறித்து சின்னமனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

அரசு பேருந்து மோதி  இளம்பெண் பலி

திருவில்லிபுத்தூர், ஏப்.4- விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே அண்ணா நகரைச் சேர்ந்தவர் இளம் பெண் பவித்ரா. தனது அண்ணன் காசி மாயனுடன் டைப்ரைட்டிங் வகுப்பிற்கு சென்று விட்டு திரும்பும் போது மதுரையிலிருந்து செங்கோட்டை வந்த அரசு பேருந்து மோதியதில் காயம டைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார் . காசிமாயன் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .அவர் கொடுத்த புகாரின் பேரில் திருவில்லி புத்தூர் நகர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை மத்திய சிறைக்  கைதிக்கு கொரோனா  

மதுரை, ஏப். 4- மதுரை மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்ட விசார ணைக்கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  மதுரை மத்திய சிறையில் சுமார் 1800 கைதிகள் உள்ளனர். குற்றவழக்குகளில் சிறைக்கு கொண்டு வரப்படும் சிறைவாசிகளுக்கு  முறையாக கொரோனா பரிசோதனை அரசு மருத்துவமனையில்  காவல்துறை மூலம்  மேற்கொண்ட பின்பு தான் மதுரை மத்திய சிறைக்கு அழைத்து வரப்படுகின்றனர்.  கொரோனா பரிசோதனை முடிவு  வரும் வரை சிறை யில் தனியாக வைக்கப்பட்டு அதன்பின்பே சிறைக்குள் மாற்றப்படுகின்றனர். இந்நிலையில் மதுரை மத்திய சிறையில் கடந்த மாதம் 28 ஆம் தேதியன்று பாலமேடு காவல்நிலை யத்தில் இருந்து விசாரணை கைதியாக வந்த சிறைவாசி ஒருவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில்  அவருக்கு கொரோனா தொற்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.  அதனடிப்படையில் கொரானா தொற்றால் பாதிக்கப் பட்ட சிறைவாசிக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாரியம்மன் தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்  

மதுரை, ஏப். 4- மதுரை  மாரியம்மன் தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம் வீசுகிறது.  மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் மதுரை மக்களின் மிகவும் முக்கியமான சுற்றுலாத்தலமாக இருந்து வருகிறது. தமிழக அரசு மேற்கொண்ட முயற்சியின் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக குளத்தில் தண்ணீர் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளது  இந்த நிலையில் செவ்வாயன்று  குளத்தில் இருந்த மீன்கள் திடீரென செத்து மிதந்ததால்  அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது.  உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் குளத்தில் இறந்துள்ள மீன்களை அப்புறப்படுத்த வேண்டும்  என்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தினர்.

தோட்டத்திற்கு மருந்து அடிக்க சென்றவர்  மயக்கமடைந்து பலி

தேனி ,ஏப்.4-  தேனி மாவட்டம், உத்தம பாளையம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி கருமாரிபுரத்தை சேர்ந்தவர் கணேசன்(60). இவர் மருந்து அடிக்கும் தொழில் செய்து வந்தார். சம்பவத்தன்று அணைப்பட்டிக்கு சென்று தோட்டத்தில் மருந்து அடித்துவிட்டு வந்தவ ருக்கு வாந்தி, மயக்கம் ஏற் பட்டுள்ளது. இதையடுத்து அவர் கம்பம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.இது குறித்து ராயப்பன்பட்டி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

இராமநாதபுரம் நகராட்சிக்கு நிரந்தர  ஆணையாளர் நியமித்திடுக!

முதல்வருக்கு சிபிஎம் மனு

இராமநாதபுரம், ஏப்.4- இராமநாதபுரம் நகராட்சிக்கு நிரந்தர ஆணையாளர் நிய மிக்க வேண்டும் என்று வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் தாலுகாச் செயலா ளர் பி.செல்வராஜ், முதல மைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனு அனுப்பினார்.  அந்த மனுவில், இராம நாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் நகர் முழுவதும் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட சாலைகள் மற்றும் பல்வேறு வகைகளில் பள்ளமான ரோடுகள் குண்டும், குழியு மாக உள்ளன, மேலும் பாதாள சாக்கடை மூடிகள் சேதமாகி நகர் கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசி வருவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. காவிரி கூட்டுக்குடிநீர் 33 வார்டுகளில் குறிப்பிட்ட நேரங்களில் முறையாக விநியோக செய் யப்படவில்லை, பேருந்து நிலையம், இரயில் நிலையம், அரண்மனை ஆகிய முக்கிய மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தெருவிளக்குகள், கைமாஸ் விளக்குகள் எரிய வில்லை, குப்பைகள் வீடுகளு க்கு சென்று வாங்குவதில்லை. இது போன்ற நகரின் அடிப்ப டை பிரச்சனை குறித்து உரிய முறையில் மகஜர் கொடுக்க இராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் சென்றால் ஆணையாளர் இல்லை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி ஆணை யாளர் பொறுப்பு போடப் பட்டுள்ளது, மாதம் ஒரு முறை தான் வருவதாக நகராட்சி ஊழியர்கள் மூலமாக தெரிய வருகிறது, மேலும் மகர் நோம்பு பொட்டலுக்கு அருகி லுள்ள சாலை தேவிபட்டிணம் - திருச்சி பிரதான சாலையின் சந்திப்பில் கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் ஓடிய பாதாள சாக்கடை கழிவுநீர் இன்றும் ஆறாக ஓடிக் கொண் டிருக்கிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவியர் சாலை யை கடக்க முடியாமல் தேர்வு  காலங்களில் கடும் சிர மத்துக்கு உள்ளாகின்றனர். எனவே தாங்கள் தலையிட்டு நகர்மன்ற நிர்வாக பணிக ளை மேம்படுத்த உதவியாக இராமநாதபுரம் நகராட்சிக்கு புதியதாக முழு நேர ஆணை யாளரை நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

குறைந்தபட்ச சம்பளம் வழங்காத 17 வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்

விருதுநகர்,ஏப்.4- விருதுநகர் மாவட்டத்தில் தொழிலா ளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 17 நிறுவனங்கள் மீது நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலா ளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது :  சென் னையில் உள்ள மாநில தொழிலாளர் ஆணையர்  உத்தரவின்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  கடைகள் மற்றும் வர்த்தக நிறுவ னங்கள்,  தனியார் நிதி  நிறுவனங்கள், மருந்து கடைகள், ஸ்கேன் மையங்கள், ஹார்டுவேர் கடைகள், பரிசோதனை மையங்கள்  ஆகிய இடங்க ளில் திடீர் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, அங்கு பணிபுரிந்து வரும் 35  தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம்  17 நிறுவனங்களில் வழங்காமல் இருப்பது தெரிய வந்தது. பின்பு அந்நிறுவனங்கள் மீது மதுரை தொழிலாளர் இணை ஆணையர் மூலம் நீதிமன்றத்தில் கேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, 17 நிறுவனங்களில் பணிபுரிந்த 35 தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச  சம்பளம் ரூ.9லட்சத்து 66ஆயிரத்து 56-ஐ  வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும்,  அனைத்து நிறுவனங்களும் குறைந்தபட்ச கூலிச் சட்டத்தின் கீழ்  தொழிலாளர்களுக்கு ஊதியம் மற்றும் அகவிலைப்படியை வழங்க வேண்டும். குறைவான ஊதியம் வழங்கினால்,  04562-225130 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் இவ்வாறு அதில்  கூறி யுள்ளார்.

முறைகேடு எதிரொலி:  ஓ.பன்னீர்செல்வம் தம்பி ஓ.ராஜா  தலைமையிலான ஆவின் நிர்வாகம் கலைப்பு

தேனி ,ஏப்.4- ஆவின் முறைகேடு தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் உடன்பிறந்த சகோதரர் ஓ.ராஜா தலைமை யிலான ஆவின் நிர்வாகம் கூண்டோடு கலைக்கப் பட்டது .  தேனி மாவட்ட ஆவினுக்கு 2019 ஆம் ஆண்டு புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்களாக 17 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தலைவராக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா தேர்வு செய்யப்பட்டார். இவர்கள் பதவிக்காலத்தில் தேனி ஆவினில் துணை மேலாளர், டிரைவர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 38 பேர் புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டனர். பணி நியமனத்தில் கூட்டுறவு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என  புகார் எழுந்தது. இதனையடுத்து கடந்த ஆண்டு பணி நியமனம் செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதிதாக பணி யில் சேர்ந்த 38 பேர் நியமனம் ரத்து செய்யப்பட்டது.  தேனி ஆவின் நிர்வாக சீர்கேடு குறித்து தலைவர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு விளக்கம் கேட்டு கடந்த மாதம் கூட்டுறவுத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த குழுவின் பதவிக்காலம் 2023ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில் குழுவை கலைத்து பால்வளத்துறை ஆணையர்  சுப்பையன் உத்தரவிட்டார். இதனையடுத்து 17 இயக்கு னர்கள் மற்றும் 420 பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆவின் செயல் ஆட்சியராக தேனி ஆட்சியர் ஷஜீவனா நியமிக்கப் பட்டுள்ளார்.

சிவகாசியில் தொழிலாளி கொலை

சிவகாசி, ஏப்.4- சிவகாசியில் பணிமுடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த தொழிலாளியை மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  சிவகாசி,  முத்துராமலிங்கம் காலனியை சேர்ந்த வர்தனலட்சுமி. இவரது மகன் சுந்தர பாண்டி  (36). தனியார்சாம்பிராணி கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், திங்களன்று  மாலை  வேலை முடிந்ததும் நிறுவனத்தை விட்டு வெளியே வந்துள்ளார்.  அப்போது பயங்கர ஆயுதங்களுடன் அங்கு தயாராக இருந்த மர்ம கும்பல்  சுந்தர பாண்டியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. இதனால் படுகாயமடைந்த  சுந்தர பாண்டியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால்.  அங்கு சிசிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு காவல்துறையினர்  வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

சிவகங்கையில் உழவர் இதழ் கையேடு வெளியீடு 

சிவகங்கை,ஏப்.4- சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட ரங்கில் மார்ச் 31 அன்று விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவிக்கை யில்,  சிவகங்கை மாவட்டத்திலுள்ள நீர் நிலையிலுள்ள ஆக்கிரமிப்புக்களை உடனடியாக அகற்றி பயன் பாட்டிற்கு கொண்டு வரவும், விவசாய நிலங்களை விலங்கு கள் சேதப்படுத்தாமல் பாதுகாத்திடவும், தேவையான நிலங்களில் தடுப்பணைகள் ஏற்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தினை பாதுகாத்திடவும், குறிப்பாக நீர்நிலைகளில் கருவேல் மரங்கள் அகற்றுதல் போன்ற விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக, மாவட்;ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.  மேலும் நில அளவைத்துறையினர் விவசாயிகள் கோரும் அளவீட்டுப்பணியினை விரைந்து மேற்கொள்ள வும், விவசாயிகளுக்கான மின் விநியோகங்களை சீரான  முறையில் வழங்கிடவும், தேவையான உரங்களை இருப்பு வைத்திடவும், வங்கிகளின் மூலம் கடனுதவி கள் வழங்கி வேளாண் சார்ந்த புதிய தொழில் தொடங்கிட உறுதுணையாக இருந்திடவும், கடனுக்குரிய மானியத்தொகையினை தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு உடனடியாக வழங்கிட உரிய நடவடிக்கைகளை சம்மந்தப் பட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி தெரிவித்தார். இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு பயனுள்ள வகை யில் உழவர் இதழ் கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலை வர் வெளியிட, அதனை விவசாயிகள் பெற்றுக்கொண்டனர்.

மாற்றுத்திறனாளிகள் சங்க  புதிய கிளை அமைப்பு 

திருவில்லிபுத்தூர்,ஏப்.4- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாலிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் திருவில்லிபுத்தூர மேட்டுத்தெருவில் புதிய கிளை அமைக்கப்பட்டது வட்டக் கிளை தலைவர் அய்யக்காள் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் மாரியப்பன் வட்டக்கிளை நிர்வாகி காளீஸ்வரி ஆகியோர் பேசினர். இதில் கிளைத் தலைவராக விஜயலட்சுமி. செயலா ளராக செண்பகவல்லி, பொருளாளராக பரமகல்யாணி  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மனைவிக்கு கொடுமை:  நகராட்சி ஊழியர் உள்பட 3 பேர் மீது வழக்கு

போடி, ஏப். 4- மனைவியை கொடு மைப்படுத்திய நகராட்சி ஊழியர் உள்பட 3 பேர் மீது போடி அனைத்து மகளிர் காவல்துறையினர் திங்கள் கிழமை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம், போடி அருகே சில்லமரத்துப்பட்டி சௌந்தரவேல் தெருவில் வசிப்பவர் சாந்திலட்சுமி (33). இவருக்கும் கம்பம் தக்கன் காலனியை சேர்ந்த அழகர் மகன் ரவி (41) என்ப வருக்கும் 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. ரவி போடி நகராட்சியில் அலு வலக ஊழியராக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் ரவி வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொண்டு இருவரும் புகைப் படம் எடுத்து வாட்ஸ்அப்பி லும் பகிர்ந்துள்ளார். இதனை சாந்திலட்சுமி கண்டித் துள்ளார். இதனால் ஆத்திர மடைந்த ரவி, இவரது தாயார் ராஜம்மாள், ரவியின் அண்ணன் மனைவி கீதா ஆகியோர் சேர்ந்து அடித்து கொடுமைப்படுத்தி யதாகவும், ரவி நகைகளை அடகு வைத்து வீண் செலவு செய்துவிட்டதாகவும் சாந்திலட்சுமி போடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் ரவி உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.

போடி அருகே விபத்தில் ஆசிரியர் பலி

தேனி , ஏப். 4- போடி அருகே திங்கள் கிழமை இரவு, இரு சக்கர வாகன விபத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் இறந்தார். தேனி மாவட்டம், போடி அருகே தருமத்துப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர்  ரெங்கசாமி மகன் ராமர் (79). இவர் போடியில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.  போடிக்கு பொருள்கள் வாங்க வந்த வர் தனது இரு சக்கர வாக னத்தில் மீண்டும் தருமத்துப் பட்டிக்கு சென்றார். அப்போது இடி, மின்னல், காற்றுடன் மழை பெய்ததில் மின்தடையும் ஏற்பட்டது. இருட்டில் போடி தரு மத்துப்பட்டிக்கு சென்ற போது சாலையின் குறுக்கே திடீரென நாய் சென்றது. நாய் மீது இரு சக்கர வாக னம் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த ராமரை அங்கி ருந்தவர்கள் மீட்டு போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்காக தேனி  க.விலக்கு அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற தில் அங்கு சிகிச்சை பல னின்றி இறந்தார்.