அனைத்து பயனாளர் கணக்குகளுக்கும் டுவிட்டர் எக்ஸ் நிறுவனம் மாதாந்திர கட்ட ணம் வசூலிக்க உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளி யாகியுள்ளது. ஏற்கனவே புளு டிக் செயல் பாட்டிற்கு டுவிட்டர் எக்ஸ் நிறுவனம் கட்டணம் வசூலித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சினிமா பைனான்சியர் அன்பு செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் நடிகர் விஷால் பெற்ற ரூ.21.29 கோடி பணம் விவகா ரம் தொடர்பாக, லைக்கா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷால் செப். 22 அன்று நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்த ரவிட்டுள்ளது. ஆஜராகும் பொழுது வங்கிக் கணக்கு மற்றும் சொத்து விவரங்களும் தாக்கல் செய்ய வும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் விடிஷா மாவட்டத் தில் உள்ள ஹைதர்கர் கிராமத்தில் 6 பேர் தங்க ளது விவசாய நிலத்தை பார்வையிட காரில் சென்ற னர். டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை யோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக் குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத தூத்துக் குடி மாவட்ட கல்வி அதிகாரிக்கு 4 வாரம் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதம் விதித்து உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.