மதுரை,மே 2- ஜனநாயகத்தை நேசிக்கிற ஒவ்வொரு வரும் ஜான் பிரிட்டாஸ் எம்.பி.யுடன் இணைந்து நிற்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறி யுள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: “மோடி தலைமையிலான பாஜக தான் கர்நாடகாவை பாதுகாக்க முடியும்; பக்கத்தில் கேரளா இருக்கிறது; அதற்கு மேல் சொல்ல விரும்பவில்லை” என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா மங்களூர் பேரணியில் பேசியுள்ளார். “பெரும்பான்மை வாதத்தை” உறுதி யாக நிராகரிக்கும் மக்களைக் கொண்ட கேரளா பற்றி அவர் மோசமாக பேசுவது முதல் முறையல்ல. அதிக கல்வியறிவு கொண்ட மாநிலத்தை இழிந்து பேசுகிற பாஜக தலைவரும் இவர் மட்டுமல்ல” என்று சிபிஎம் மாநிலங்களவை உறுப்பி னர் ஜான் பிரிட்டாஸ் அமித்ஷாவின் உரை குறித்து விமர்சனக் கட்டுரை எழுதியுள்ளார். மேலும் இப்படி தேசத்து மக்களி டையே பகையை தூண்டுவது இந்திய தண்டனைச் சட்டம் 153 ஏ- இன் படி குற்றம்; இப்படி அடிக்கடி கேரளா மீது பாய்வது அவர்களின் இந்து ராஷ்டிரா இலக்கு நோக்கிய அவசரத்தினால்தான். ஆனால் பாஜகவின் சதிகளை கேரளா தளர்வின்றி எதிர்த்து வந்துள்ளது என்றும் ஜான் பிரிட்டாஸ் கூறியுள்ளார்.
ஜான் பிரிட்டாஸின் கூற்று தேசத் துரோகமானது என கேரள பாஜக செய லாளர் பி.சுதிர் மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கருக்கு கடிதம் எழுதியுள் ளார். இதன் மீது ஜான் பிரிட்டாஸூக்கு “சம்மன்” அனுப்பப்பட்டு விசாரிக்கப் பட்டுள்ளார். பாசிச மனோபாவம் கொண்டவர் களின் பசிக்கு நியாயங்கள்தான் ருசியாக இருக்கும் போல... அமித்ஷா மீது புகார் வருகிறது என்றவுடன் அதைத் தடுக்கத் துடிக்கிறார்கள். இப்படி திசை திருப்பி விடுகிறார்கள். மாநிலங்களவையின் மிகச்சிறந்த பங்களிப்பாளர் ஜான் பிரிட்டாஸ். அவர் மீதான புகார் ஜனநாயகத்திற்கு விடுக்கப் பட்டுள்ள சவால். நாடாளுமன்ற உறுப்பி னர்களின் வாயை அடைக்க முயற்சிக்கும் இவர்கள், நாளை நாட்டையே ஜனநாயக இருளில் ஆழ்த்திவிடுவார்கள். “கர்நாடகத்தை அடுத்து கேரளம்” இருக்கிறது என மிரட்டும் அமித்ஷா வுக்கு நாங்கள் சொல்வோம், மாநிலங் களின் சகோதரத்துவத்தை வாக்கு வங்கிக் காக பலிகொடுக்கும் அற்ப அரசியலுக்கு எதிரான போரில் கேரளத்துடன் தமிழ்நாடு இணைந்து நிற்கும். ஜனநாயகத்தை நேசிக்கிற ஒவ்வொருவரும் ஜான் பிரிட்டாஸுடன் இணைந்து நிற்போம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.