உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வரும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டா லின் நலம் விசாரித்தார்.
சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ள தாக கிடைத்த தகவலின் பேரில் அமலாக்கத் துறை அதிகாரிகள் செவ்வாயன்று அதிகாலை முதல் தமிழ்நாடு முழுவதும் புதுக்கோட்டை, திரு வள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் 40 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்ற னர். குறிப்பாக தி.நகர் சரவணா தெருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பணி யாற்றி வரும் ஜோதிகுமார் என்பவரின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் வாகைக்குளம் சுங்கச் சாவடியில் 50% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை நிறை வேற்றாதது ஏன் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆருத்ரா மோசடி வழக்கில் தொடர்ந்து சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் பாஜக நிர்வாகியும், நடிகருமான ஆர்.கே.சுரேஷின் சொத்துகளை முடக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜய பாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ. 35.79 கோடி சொத்துக் குவித்ததாக தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணையை, புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் அக்டோபர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
தென்காசி புளியரை சோதனைச் சாவடி வழி யாக 10 சக்கரங்களுக்கும் மேற்பட்ட லாரி களில் கனிமங்கள் கொண்டு செல்ல தடை இல்லை என்ற உத்தரவுக்கான இடைக்கால தடையை நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தர விட்டுள்ளது.
புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறை கேடு நடைபெற்றதாக, அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் 2018ல் அளித்த புகார் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்த ரவு பிறப்பித்துள்ளது.
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் ஜன.24-ம் தேதிக்கு முன் திறக்கப்படும் என தலைமை பூசாரி அறிவித்துள்ளார்.
சேலம் பெரியார் பல்கலை. ஆசிரியர் நியமன முறைகேடு, ஊழல்புகார் தொடர்பாக 2 வாரத்துக்குள் ஆவணங்களை அளிக்கவேண்டும் என நிர்வாகத்திற்கு தமிழ்நாடு உயர்கல்வித்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே ஏற்ற இறக்கங்களு டன் இருந்த சென்செக்ஸ் 66,000 புள்ளிகளுக்கு கீழ் சென்றது. அதாவது குறியீட்டு எண் சென்செக்ஸ் 78 புள்ளிகள் குறைந்து 65,945 புள்ளிகளானது.
நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.