நாகர்கோவில், ஜூலை. 14 நெல்லை மண்டலத்தில் 29காவல் ஆய்வாளர்கள் புதனன்று இடமாற்றம் செய்யப்பட்டனர். அந்த வகையில் குமரி மாவட்டத்தில் 7 ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதாவது நித்திரவிளை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர் வின்சென்ட் அனபரசி புதுக்கடைக்கு மாற்றப்பட்டார். இதே போல் துணை ஆய்வாளர்க ளராக இருந்து பதவி உயர்வு பெற்ற ஆய்வாளர் சுபாஷ் ராஜன் தென்காசி மாவட்டம் கடையநல்லூருக்கும், கொல்லங்கோடு ஆய்வாளர் அந்தோ ணியம்மாள் தூத்துக்குடி மாவட்ட குற்ற பிரிவுக்கும், குளச்சல் ஆய்வாளர் அருள் பிரகாஷ் நித்திரவிளைக்கும், கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய சொர்ணராணி புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும், ஏ.சி.டி.யு. பிரிவு ஆய்வாளர் சாந்தகுமாரி, கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும், களியக்கா விளை ஆய்வாளர் எழில்அரசி திருநெல் வேலிக்கும் இடமாற்றம் செய்யப் பட்டனர். மேலும் நாங்குநேரியில் பணியாற்றி வந்த ஆய்வாளர் காளியப்பன் களி யக்காவிளைக்கும், தூத்துக்குடியில் பதவி உயர்வுபெற்ற ஆய்வாளர் கிறிஸ்டி குளச்சலுக்கும், திருநெல் வேலியில் பணியாற்றிய ஆய்வாளர் ரமா கொல்லங்கோடுக்கும் மாற்றப் பட்டு உள்ளனர்.