குரூப்-2 மெயின் தேர்வுக்கு நவ.14 ஆயக்குடியில் பயிற்சி துவக்கம்
பழனி,நவ.10- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நக ராட்சி ஆணையர்,சார்பதிவாளர்,வணிக வரிதுறை அதி காரி, முதுநிலை கூட்டுறவு ஆய்வாளர். வருவாய் ஆய்வா ளர் ஆகிய நேர்முக தேர்வு உள்ள மற்றும் நேர்முகத் தேர்வு இல்லாத 5400 பணிகளுக்கான முதல் நிலை தேர்வினை கடந்த மே மாதம் நடத்தியது. இதற்கான முடிவுகள் 1:10 என்ற விகிதத்தில் 8-11-2022 அன்று வெளியிடப்பட்டது. இதில் தமிழகம் முழு வதும் 54 ஆயிரம் பேர் மெயின் தேர்வுக்கு தகுதி பெற்றுள் ளனர். இவர்களுக்கு 25-2-2023 இல் பிரதான தேர்வு நடை பெறவுள்ளது..தேர்வர்களை முன்கூட்டியே தயார் படுத்தும் விதமாக ஆயக் குடியில் வருகிற நவம்பர் 14 அன்று இலவச வகுப்புகள் துவங்க உள்ளது.. வகுப்பில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் ஆதார்அட்டை, பாஸ் போர்ட் அளவு புகைபடம் ,ஹால் டிக்கெட் நகல் இவைகளுடன் பயிற்சியில் கலந்து கொள்ளவும்..மேலும் தொடர்புக்கு 9486301705,7904148183. ஆகிய எண் களை தொடர்பு கொள்ளவும் என்று ஆயக்குடி பயிற்சி மையம் தெரிவித்துள்ளது.
காந்திகிராம பல்கலை. பட்டமளிப்பு விழாவில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பா?
திண்டுக்கல், நவ.10- திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழக பட்டம ளிப்பு விழாவில் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. வெள்ளியன்று காந்தி கிராம பல்கலைக்கழ கத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். இந்நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்ய சென்னை யிலிருந்து பல்வேறு ஊடகங்களில் இருந்து நேரடி ஒளி பரப்பு வாகனங்கள் தற்போது வந்த வண்ணம் உள்ளன. பிரதமர் வருவதால் தமிழ்நாடு போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். இதனால் பட்டமளிப்பு விழா அரங்கத்திற்குள் தூர்தர்ஷன் நேரடி ஒளிபரப்பு கேமரா மட்டும் அனுமதிக்கப்பட உள்ளது. பிற தனியார் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சேனல்கள் தூர்தர்ஷன் மூலம் இணைப்பு பெற்றுக்கொள்ள வேண்டும். அதே போல் பத்திரிக்கை யாளர்கள் அனைவருக்கும் அனுமதி தருவதில் சிரமம் இருப்பதாகவும், சில முக்கிய பத்திரிகை நிருபர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படு கிறது. இதனால் செய்தியாளர்கள் அரங்கத்திற்கு வெளியே அமர வேண்டிய நிலை ஏற்படும். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள் ளார். அவருக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து விடக் கூடாது என்பதற்காக இப்படி ஒரு கெடுபிடி நிலவு வதாக கூறப்படுகிறது.
கம்பம் அருகே அனுமதியின்றி மாட்டு வண்டி பந்தயம் 5 பேர் மீது வழக்கு
தேனி, நவ.10- தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி பட்டி யைச் சேர்ந்தவர்கள் நிவாஸ்(25), சரவணன்(23), ராம்குமார்(26), லால்கிருஷ்ணன்(24), தினகரன்(37). இவர்கள் 5 பேரும் சுருளிப்பட்டி-சுருளி தீர்த்தம் சாலை யில் மாட்டு வண்டி பந்தயம் நடத்திக் கொண்டிருந்தனர். பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு செய்வதாக ராயப்பன்பட்டி சார்பு ஆய்வாளர் முனியம்மாள் இவர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார்.
கார் மோதி கூலித்தொழிலாளி பலி
நத்தம், நவ.10- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வேலாயு தம்பட்டியை சேர்ந்தவர் மூக்கன். இவரது மகன் பூமி (38). இவர் கடந்த 6 ஆம் தேதி எர்ரமநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில் சாலையை கடக்க முயன்றுள்ளார்.அப்போது எதிரே வந்த கார் மோதி பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பூமி இறந்து விட்டார்.மேலும் இச்சம்ப வம் தொடர்பாக நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நத்தம்: லாரி மோதி சிறுவன் பலி பொதுமக்கள் மறியல்
நத்தம், நவ.10- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கர்ணம் தெருவை சேர்ந்தவர் பொன்னழகப்பன் .இவரது மகன் குருபா (வயது 7).இவர் நத்தத்தில் உள்ள தனியார் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பள்ளி செல்வதற்காக சாலையை கடக்க முயன்ற போது கொட்டாம்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி மோதியதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் போலீ சார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள் பள்ளிகள் அருகில் செல்லும் டிப்பர் லாரிகள் வேகமாக செல்வதாகவும், வேகத்தடை அமைக்கக்கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். நத்தம் காவல் ஆய்வா ளர் தங்கமுனியசாமி இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக நத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.'
கேரளாவுக்கு மணல் கடத்திய லாரி ஓட்டுநர் கைது
தேனி, நவ.10- கம்பம் அருகே கேரளாவிற்கு மணல் கடத்திய லாரி ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர் . தேனி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறையில் உதவி புவியியலாளர் பாண்டியராஜன் புதன்கிழமை கம்பம் மெட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கம்பத்தில் இருந்து கேரளாவுக்குச் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரியை சோதனை செய்தனர். இதில் காலாவதியான அனுமதிச்சீட்டு மூலம் 6 யூனிட் எம் சாண்ட் மணல் கடத்திச் செல்வது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இடுக்கி மாவட்டம் மேரிகுளம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் வர்கீஸை(46) கம்பம் வடக்கு போலீசார் கைது செய்தனர். மணலுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் நகை கொள்ளை
சிவகாசி, நவ.10- சிவகாசி அருகே உள்ள ரிசர்வ் லயன் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தீபன். இவரது மனைவி பிரியா. இரு வரும் கல்லூரி பேராசிரியர்களாக பணிபுரிந்து வரு கின்றனர். இந்நிலையில் இருவரும் வழக்கம் போல் பணிக்கு சென்று வீடு திரும்பியுள்ளனர். அப்போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டும் , அடுத்தடுத்த அறை களில் உள்ள பீரோக்கள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். எனவே, கார்த்தீபன் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார், அங்கு விசாரணை மேற்கொண்டனர். அதில், ரூ.3லட்சம் மதிப்பிலான 8 பவுன் தங்க நகைகள் கொள்ளடிக்கப் பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, அங்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்களை சேகரித்துச் சென்ற னர். மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடைபெற்றது.
சிவகங்கை கல்வித்துறை கண்காணிப்பாளர் இடைநீக்கம்: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வாலிபர் சங்கம் கோரிக்கை
சிவகங்கை, நவ.10- சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் பணியாற்றி வந்த கண்காணிப்பாளர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவருடைய பணி நியமனம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சிவகங்கை மாவட்டக்குழு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஜேம்ஸ் ராஜா தலைமையில் மாவட்ட செயலாளர் சுரேஷ் , மாவட்ட பொருளாளர் இன்னாசி ராஜா முன்னிலையில் சிவகங்கையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சிவகங்கை அருகே ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கிராபைட் கனிமம் கிடைத்து வருகிறது. கிராபைட் கனிமம் உலக அளவில் இரண்டாம் தர வாய்ந்தது.கருப்புத்தங்கமாகும். அது மட்டுமில்லாமல் நூற்றுக்கும் மேற்பட்ட அத்தியாவசிய பொருட்கள் செய்வதற்கு உப பொருளாக இருந்து வருகிறது. கிராபைட் தொழிற்சாலையில் தொடர்ந்து முறைகேடு நடைபெற்று வருகிறது .
அதாவது கிராபைட் தொழிற்சாலையில் பத்து ஆண்டுகளுக்கு முந்தைய திமுக ஆட்சி காலத்தில் ஒரு டன் கிராபைட் கனிமம் ரூ. 70 ஆயிரத்துக்கு விற்பனையாகிக் கொண்டிருந்தது .திமுக ஆட்சி முடிந்து கடந்த 10 ஆண்டு காலமாக கிராபைட் கனிமம் விலையை குறைத்து ஒரு டன் ரூ.30 ஆயிரத்திற்கு கொடுத்து வருடத்திற்கு ரூ .40 கோடி ஊழல் முறைகேடு செய்து இருக்கிறார்கள் .இதற்கு காரணமான அதிகாரி தற்போது சென்னையில் பணிபுரிந்து வருகிறார் .அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கிராபைட்டைமேம்படுத்துவது தொடர்பாக நேர்மையான அதிகாரிகள் கொண்டு விசாரணை செய்து ஒரு நல்ல திட்டமாக செயல்படுத்த வேண்டும் .இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த கோரி வாலிபர் சங்கம் போராட்டத்தை நடத்தும். சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சரவணன் என்பவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார் .இவர் பணிக்கு வந்தது ஊழல் முறைகேடு நடந்தது என்று தெரிய வருகிறது. இது தொடர்பாக இவரை காப்பாற்றுவதற்கு தொடர்ந்து மாவட்ட கல்வி அதிகாரிகள் முயற்சித்து வந்திருக்கிறார்கள். இவர் தற்போது தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். இவருடைய ஊழல் முறைகேடுகளுக்கு உறுதுணையாக இருந்த கல்வித்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயத்தொழிலாளர் சங்க ஆத்தூர் ஒன்றிய மாநாடு
சின்னாளபட்டி, நவ.10- அகில இந்திய விவசாயத்தொழிலாளர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றிய மாநாடு சின்னாள பட்டியில் கே.சி.குணா தலைமையில் நடைபெற்றது. ஆர்.டி.ஆர். இளங்கோவன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சுப்பிரமணி வேலை அறிக்கை சமர்ப்பித்தார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே அருள்செல்வன் துவக்கி வைத்துப் பேசினார். சிஐடியு ஒன்றிய கன்வீனர் வி.கே. முருகன் ,தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் பாண்டியராஜன், ஒன்றிய தலைவர் பிச்சை மணி, சிபிஎம் ஒன்றிய செயலாளர் சூசைமேரி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டத் தலைவர் பி வசந்தாமணி நிறைவுரையாற்றினார். மாநாட்டில் சீராளன் ஒன்றிய தலைவராகவும் பி.சுரேஷ் ஒன்றிய செயலாளராகவும் எஸ். எம் மலைச்சாமி பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்ட னர். ஒன்பது பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப் பட்டது. பேரூராட்சியிலும் 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கிடுக! சிவகங்கை ஒன்றிய மாநாடு கோரிக்கை
சிவகங்கை, நவ.10- அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சிவகங்கை ஒன்றிய 3 ஆவது மாநாடு வீரப்பட்டி சமுதாய கூட்டத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு ஏலம்மாள் தலைமை வகித்தார். பாப்பா கொடியேற்றினார். ஒன்றிய துணைச் செயலாளர் அமுதப்பிரியா அஞ்சலி தீர்மா னத்தை வாசித்தார். ஒன்றிய துணைத் தலைவர் பாண்டி வரவேற்றார். மாவட்ட தலைவர் பொன்னுச்சாமி துவக்கிவைத்து பேசினார். சிபிஎம் ஒன்றிய செயலாளர் உலகநாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் வேங்கையா, கீழப்பூங்குடி ஊராட்சி மன்ற தலைவி சண்முகவள்ளி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டச் செயலாளர் மணியம்மா நிறைவுரையாற்றினார். மாநாட் டில் ஒன்றிய தலைவராக தனசேகரன் ,ஒன்றிய செயலா ளராக முத்துக்கருப்பன் ,பொருளாளராக ஊராட்சி மன்ற உறுப்பினர் மகாலிங்கம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கேரள மாநிலத்தில் இடது ஜனநாயக முன்னணி அரசு வீடற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் வீடு கட்டி தருவது போன்று தமிழகத்திலும் செயல்படுத்த வேண்டும். குடிமனை பட்டா வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் 200 தினங்கள் வேலை வழங்க வேண்டும். தினந்தோறும் ரூ.600 கூலி வழங்க வேண்டும். கிராபைட் கனிமத் தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் .கிராமங்கள் தோறும் குளியல் தொட்டி அமைக்க வேண் டும். விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்தபடி வீரபட்டி கண்மாய்க்கு பெரியார் ஆற்று தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகங்கை அருகே கிராபைட் கனிமத்தை பயன்படுத்தி ஆயிரம் கோடியில் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. சிவப்பிரகாசம் நன்றி கூறினார்.
டிராக்டர் மீது பைக் மோதி தொழிலாளி பலி
இராஜபாளையம், நவ.10- தென்காசி மாவட்டம், சிவகிரி, இந்திரா நகரைச் சேர்ந்த கோவிந்தராஜ் (46) கூலி தொழிலாளி. இவர் வேலை நிமித்தமாக தளவாய்புரம் வந்தவர், புத்தூர் ரோடு மருத்துவனேரி கண்மாய் அருகே வரும் போது சாலை ஓரத்தில் நிறுத்தியிருந்த டிராக்டரை கவனிக் காமல் அதன் மீது மோதியதில் படுகாயமடைந்தார். இவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டுவந்தனர், வரும் வழியிலேயே பரிதாப மாக உயிரிழந்தார். இது குறித்து கோவிந்தராஜ் மனைவி மதியழகி கொடுத்த புகாரின் பேரில், தளவாய்புரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, தேவிபட்டினத்தைச் சேர்ந்த ஓட்டுநர் தங்கம் என்பவரிடம் விசாரிக்கின்றனர்.
மலைக்கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மேல்முறையீடு செய்க!
கடமலைக்குண்டு, நவ.10- தேனி மாவட்டம், கடமலைக்குண்டு கிரா மத்தில் புதன்கிழமை தி.மு.க சார்பில் ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது. தி.மு.க கட மலை-மயிலை தெற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கப் பாண்டி ஆகியோர் தலைமை தாங்கினர். தி.மு.க தேனி தெற்கு மாவட்ட செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பி னர் மகாராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கடமலை-மயிலை ஒன்றி யத்தில் மேகமலை, தும்மக்குண்டு உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைக்கிராம பொதுமக்கள் 3 தலை முறைகளுக்கு மேலாக வனப்பகுதி நிலங்களில் விவசாயம் செய்து வசித்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கடமலை-மயிலை ஒன்றிய வனப்பகுதியில் வசித்து வரும் மலைக் கிராம பொதுமக்களை வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து மலைக்கிராம பொதுமக்களுக்கு வனத்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து சிரமப்படுத்தி வரு கின்றனர். பல்வேறு மாவட்டங்களில் மக்கள் நல னுக்காக ஆளும் அரசு நீதிமன்றங்களில் மேல் முறையீடு செய்து மக்கள் நலனை காத்துள்ளது. அது போல கடமலை-மயிலை ஒன்றிய மலைக் கிராம மக்களின் வாழ்வாதாரம் கருதி தமிழக அரசு தீர்ப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.13 லட்சம் மோசடி -4 பேர் மீது வழக்கு
தேனி, நவ.10- கூடலூரை சேர்ந்த வாலிபருக்கு ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்து ,போலி நிய மன ஆணை வழங்கி ,கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலகூடலூர் காமாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முரு கன் மகன் ஸ்ரீ நிவாஸ்குமார் (29).இவ ருக்கு ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக அதே தெருவை சேர்ந்த ஆனந்தமூர்த்தி என்பவர் சென்னை காட்டுப்பாக்கம் கண்ண தாசன் தெருவை சேர்ந்த பரத் என்ப வரை கூடலூர் அழைத்து வந்துள் ளார். பரத்தின் தந்தை ராஜேந்திரன் ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்று, பலருக்கு வேலை வாங்கி தந்துள்ளதாக அறிமுகம் செய்து வைத் துள்ளார். வேலைக்கு முதல் தவணை யாக ரூ.2 லட்சத்தை பரத்தின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார் .பின்பு வேலை நியமன ஆணையை பரத், கூட லூருக்கு வந்து கொடுத்துள்ளார். இதற்காக பல்வேறு தவணைகளில் ரூ.13 லட்சம் வரை வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். வேலை நியமன ஆணை போலியானது என தெரிய வந்தது. பணத்தை திருப்பிக் கேட்ட போது கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது குறித்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் பரத், அவரது தந்தை ராஜேந்திரன், ராஜேந்திரன் மனைவி அருணா ,ஆனந்த மூர்த்தி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.