states

தக்காளி விலை மேலும் உயரும்

சென்னை,மே 11- கோயம்பேடு சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் ஒட்டன் சத்திரம், திண்டுக்கல், தேனி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது.  வரத்து குறைவு காரணமாக  மொத்த விற்பனை கடைகளில் ரூ.55க்கு விற்கப்பட்டது. சில்லரை  கடைகளில் ஒரு கிலோ  தக்காளி ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படு கிறது. இதுகுறித்து தக்காளி  வியாபாரிகள் கூறுகையில் சந்தைக்கு புதனன்று  42 லாரிக ளில் தக்காளி விற்பனைக்கு வந்தது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்த கோடை மழையால் அங்கு தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதை யடுத்து அங்குள்ள வியாபாரிக ளும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங் களில் தக்காளியை கொள்முதல் செய்ததால் கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளி வரத்து  குறைந்து விலை அதிகரித் துள்ளது என்றனர்.