states

img

கோவையின் அடையாளத்தை பாதுகாப்போம்! - பி.ஆர்.நடராஜன்

உற்பத்தித் துறையில் நாட்டில் அதிகம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்து வரும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக கோயம்புத்தூர் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைப்பு உருவாக்கப் பட்டிருப்பதும் அதன் சார்பில் கோவையில்  மாநில அளவிலான தொழில் பாதுகாப்பு மாநாடு மார்ச் 5 அன்று நடைபெறுவதும் வாழ்த்துகளுக்குரியது.  கோவை மாவட்டத்தைப் பொறுத்த வரை சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் கள் மிக முக்கிய பங்கினை ஆற்றுபவை. பஞ்சாலை, இன்ஜினியரிங், மோட்டார் பம்புகள் உற்பத்தி, ஆட்டோமொபைல் தொழில், விசைத்தறி, வார்ப்படம், தென்னைப் பொருட்கள் என பல தொழில் கூடங்கள் செயல்படும் மாவட்டமாகும். கோவை மாவட்டத்தின் அடையாளமே தொழில்களும், தொழிலாளர்களும் என்றாகி உள்ளது.  

ஜிஎஸ்டி எனும் தாக்குதல்

மூலப்பொருட்களின் விலை நிலை யானதாக இல்லாததாலும், சில வரு டங்கள் கடுமையான மின் பற்றாக்குறை காரணமாகவும் தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. தற்போதைய நிலையில் ஜி.எஸ்.டி தரும் நெருக்கடியால் தொழில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஜாப் ஆர்டர் (JOB ORDER) மீது போடப்படும் ஜி.எஸ்.டி முற்றிலும் நீக்கப்பட வேண்டும் என்று 2019 பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நான் நாடாளுமன்றத்தில் வலியுறுத்திப் பேசினேன். தொடர்  வலியுறுத்தல்கள் காரணமாக தற்போது சிறிது குறைக்கப் பட்டுள்ளது.  இருப்பினும் ஜாப் ஆர்டர் (JOB  ORDER) மீதான ஜிஎஸ்டி முற்றிலும் குறைக்கப்படவேண்டும் என்பதே நமது நிலைபாடு. அதற்காக தொடர்ந்து நாடாளு மன்றத்தில் குரல் எழுப்பி வருகிறேன்.  வங்கிக் கடன் விஷயத்தில் கடுமை யான நிபந்தனைகள் உருவாக்கப் பட்டுள்ளன. செயல்படாத சொத்துக்கள் என்று கூறி சிறு, குறு நிறுவனங்கள் முடக்கப்படும் (Non Performance Asset) நிர்பந்தத்தாலும் தொழில் முடங்கியுள்ளது . மூலப்பொருட்களின் விலை கட்டுப்பாட்டில் இல்லாத காலங்களி லும், மின் பற்றாக்குறை காலங்களிலும் 180 நாட்களாக அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது . 

தனி அமைச்சகம் தேவை

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறு வனங்கள் தங்கள் தொழிலை பாது காத்திட கூட்டுறவு அமைப்பினை அமைத்திட வேண்டியுள்ளது.‘அதற்கு அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் தற்போது உள்ள பிரச்சனைகள் சவால்கள் ஆகியவற்றை எதிர்கொள்ள அவர்களுக்கு உதவவும் பொருத்தமான வழிகாட்டுதலை செய்ய வும் ஒன்றிய அரசு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு என்று தனி அமைச்சகம் ஒன்றை உருவாக்கித் தர வேண்டும்.

நெருக்கடியில் ஜவுளி

கோவை மாவட்டத்தின் முக்கிய தொழி லான ஜவுளித்தொழிலும் இன்று  நெருக்கடியை சந்தித்து வருகின்றது. ஒரு காலத்தில் நூற்றுக்கணக்கான பஞ்சா லைகளில், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், இரண்டு, மூன்று ஷிப்டு களில் பணியாற்றுவர். பகலைப்போலவே இரவிலும் ஆட்களின் நடமாட்டமும், சைக்கிளில் செல்லும் தொழிலாளர்கள் எழுப்பும் மணி ஓசையும், பஞ்சாலை களின் சங்கு சத்தம் என பாய்ச்சல் வேகத் தில் பஞ்சாலைத்தொழில் வளர்ச்சி யடைந்து கொண்டிருந்தது. ஆடை நெய்த வன் அம்மணமாய் என்கிற சொலவாடை யைப்போல, பஞ்சாலைத்தொழில் பெரும் நெருக்கடியில் சிக்கிவிட்டது. ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்டிசி ஆலைகூட கடந்த மூன்று வரு டங்களாக இழுத்து மூடப்பட்டுள்ளது. கொரோனாவை காரணம் காட்டி ஒன்றிய அரசு என்டிசி ஆலைகளை மூடியது. அது இன்றுவரை தொடர்கிறது. என்டிசி வசம்  உள்ள பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், தொழி லாளர்களின் வியர்வையில் உருவாக்கப் பட்டவை. அதனை ஒன்றிய அரசு பண மாக்கல் திட்டத்தின் பெயரால் விற்பதற் கான சூழ்ச்சியை செய்து வருகிறது. 

பஞ்சு மீதான வரியை  ரத்து செய்க!

இது ஒருபுறம் என்றால், ஜவுளி தொழிலின் முக்கிய மூலப்பொருளான பஞ்சு விலை நிலையில்லாததாக உள்ளது. இதன் காரணமாக நூல்  உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். குறைந்த காலத்திற்காவது பஞ்சு விலை நிலையான தாக இருக்கும் விதத்தில் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும். இந்திய பருத்திக் கழகத்தை பலப்படுத்தி, நாடு முழுவதும் விவசாயிகளிடமிருந்து பஞ்சி னை கொள்முதல் செய்து, தேவைப்படும் தொழில் முனைவோருக்கு நியாயமான விலையில் அளிக்கும் ஏற்பாடு உறுதிப் படுத்தப்பட வேண்டும். அதேபோல பஞ்சு மீதான இறக்குமதி வரி முற்றிலும் ரத்து செய்யப்பட வேண்டும்.  கோவை மாவட்டத்தில் முக்கிய விவசாய விளைபொருள் தென்னைப் பொருட்கள் ஆகும். தென்னை விவசாயி களை பாதுகாக்கும் விதத்தில் பொது விநி யோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடையில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். விசைத்தறியை பாதுகாக்க..! விசைத்தறி தொழிலில் கோவை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள்  ஈடுபட்டுள்ளனர். விசைத்தறி தொழிலும் கடும் நெருக்கடியை சந்தித்து வரு கின்றது. பலர் தொழிலை நடத்த முடியா மல் கைவிட்டு தொழிலில் இருந்து வெளி யேறுகின்ற நிலைமை ஏற்பட்டு வரு கின்றது. விசைத்தறிதொழிலுக்கான ஜி.எஸ்.டி வரி விலக்கு தரப்பட வேண்டும். விசைத்தறித்தொழிலுக்கான மானிய மின்சார அளவான 750 யூனிட்கள் என் பதை 1500 யூனிட் களாக உயர்த்தி வழங் கிட வேண்டும். மேற்கண்ட கோரிக்கை களை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வலியுறுத்திட வேண்டியுள்ளது. இதன் மூலம் கோவை மாவட்டத்தின் தொழில் களையும் தொழிலாளர்களையும் பாது காக்க வேண்டும். அத்தகைய நோக்கத் திற்காக நடைபெறும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் பாதுகாப்பு மாநாட்டினை வெற்றி பெறச் செய்வோம்.