சென்னை,ஏப்.16- தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகங்களுக்கு 1,771 பேருந் துகளைத் தயாரித்து வழங்கு வதற்கான ஒப்பந்த புள்ளி கோர திங்களனன்று (ஏப்.17) கடைசி நாள் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கி றார்கள். இதுதொடர்பாக அவர்கள் கூறிய தாவது:- அரசு போக்குவரத்துக் கழகங் களுக்கு 1,771 பேருந்துகள் கொள் முதல் செய்வதற்கான டெண்டர் அறி விப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியிடப்பட்டது. அதன்படி, பிஎஸ்-6 வகை குளிர் சாதனமில்லா டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்யப் படவுள்ளன. சென்னை மாநகர போக்கு வரத்துக் கழகத்துக்கு 402 பேருந்து கள், விழுப்புரம் போக்குவரத்துக் கழ கத்துக்கு 347, சேலம் போக்கு வரத்துக் கழகத்துக்கு 303, கோவை போக்குவரத்துக் கழகத்துக்கு 115, கும்பகோணம் போக்குவரத்துக் கழ கத்துக்கு 303, மதுரை போக்கு வரத்துக் கழகத்துக்கு 251, திரு நெல்வேலி போக்குவரத்து கழகத் துக்கு 50 பேருந்துகள் வாங்கப் படவுள்ளன. இதுதொடர்பான விவ ரங்கள் ஏற்கெனவே, இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. பழைய பேருந்துகளோடு ஒப்பிடு டும் போது இந்த பேருந்துகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக ஏறி, இறங்க மூன்று படி கள் உள்ள நிலையில் இவற்றில் 2 படிகள், பேருந்துகளை முழுமை யாக கண்காணிக்க ஒருங்கிணைந்த மென்பொருள் என நவீன வசதிக ளோடு புதிய பேருந்துகள் வர உள்ளன. பேருந்துகளைத் தயாரித்து வழங்க தேசிய மற்றும் சர்வ தேச அளவில் தகுதி பெற்ற நிறுவனங் களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டி ருந்தது. இதற்கிடையே நீதி மன்றத்தில் டெண்டருக்கு எதிரான வழக்கு நிலுவையில் இருப்பதால், டெண்டர் கோருவதற்கான அவ காசம் கடந்த டிச.5 ஆம் தேதி யிலிருந்து படிப்படியாக நீட்டிக்கப் பட்டது. தற்போது இறுதி வாய்ப்பாக ஏப்.17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக் குமாறு நிறுவனங்களுக்கு அறிவு றுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.