புதுதில்லி, செப்.20- காவிரி நிதிநீர் மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு எதிராக, கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. திங்கட்கிழமையன்று (செப்.18) கூடிய காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம், தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் தினமும் 5 ஆயிரம் கன அடி விகிதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அர சுக்கு உத்தரவிட்டது. கர்நாடக அரசும் அந்த உத்தரவை ஏற்று, திங்கட்கிழமையன்று இரவே கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 5,735 கனஅடியும், கபினியில் இருந்து 3,490 கனஅடி தண்ணீரும் தமிழ்நாட்டிற்குத் திறந்து விட்டது. எனினும், தமிழ்நாட்டிற்கு தொட ர்ந்து தண்ணீர் திறக்க முடியாது என்றும், 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கன அடி விகிதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கர்நாடக அரசு, புதனன்று உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய் துள்ளது. காவிரியில் 24 ஆயிரம் கன அடி நீர் திறக்கக் கோரும் தமிழ்நாடு அரசின் மனு, வியாழனன்று (செப்.21) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
துரைமுருகன் பேட்டி
காவிரி விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு, வியாழனன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுரு கன், இவ்வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்கியை புதனன்று தில்லி யில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார். தமிழக நீர்வளத்துறைச் செயலா ளர் சந்தீப் சக்சேனாவும் உடன் சென் றார். சுமார் 1 மணிநேரம் முகுல் ரோத்கி யுடன் ஆலோசனை நடத்திய துரை முருகன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “கர்நாடக அணை களில் கிட்டதட்ட 54 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் இருந்தும் தமிழகத்திற்கு போதுமான தண்ணீரை திறந்து விட மறுக்கிறார்கள்” என்று தெரிவித்தார். மேலும், “கர்நாடக அணைகளில் தண்ணீர் இருக்கிறதா? இல்லையா? என்பதை காவிரி நீர் ஒழுங்காற்று குழுதான் உறுதி செய்ய வேண்டும்; ஆனால் அவர்கள் இரட்டை நிலை பாட்டை எடுக்கிறார்கள்” என்று கூறிய துரைமுருகன், “உச்ச நீதிமன்றம்தான் நமக்கு ஒரே தீர்வு; ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை உச்ச நீதிமன்றத் தீர்ப்புத்தான் கைகொடுத்து உள்ளது” என்றார். அதன்படி “உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாட்டின் நிலையை எடுத்து ரைத்து உரிய நீரை திறக்க கோரு வோம்; தமிழ்நாட்டின் உடனடி தேவைக்கு 12500 கன அடி தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றத்தில் வலி யுறுத்துவோம்” என்றும் கூறினார்.