states

கடலை எண்ணெய், துவரம் பருப்பு, பாசிப் பருப்பு விலை உயர்வு

விருதுநகர், மே 28- விருதுநகர் சந்தையில் கடலை எண்ணெய், துவரை மற்றும் பாசிப் பருப்பின் விலை உயர்ந்துள்ளது. இத னால் பொது மக்கள் பெரும் அதிர்ச்சி யடைந்துள்ளனர். அதேவேளை பாமா யில் விலையானது சற்று குறைந்துள்ளது. விருதுநகர் சந்தையில் வாரந்தோ றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.  அதன் விபரம் வருமாறு: கடந்த வாரம் 15 கிலோ கடலை  எண்ணெய் டின் ஒன்று ரூ.3 ஆயி ரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ.100 வரை உயர்வு ஏற்பட்டு தற்போது ரூ.3100-க்கு விற்கப்படுகிறது. 15 கிலோ பாமாயில் விலை யானது கடந்த வாரம் ரூ.1475 என  இருந்தது. இந்த வாரம் ரூ.35 குறைவு  ஏற்பட்டுள்ளது. எனவே, பாமாயில்  ரூ.1440க்கு விற்பனை செய்யப்படு கிறது. 100 கிலோ துவரம் பருப்பு புதுஸ்  நாடு வகையானது ரூ.11,200க்கு கடந்த வாரம் விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.300 உயர்ந்து தற்போது ரூ.11500க்கு விற்பனையாகிறது. பாசிப்பருப்பு  கடந்த வாரம் 100  கிலோ ரூ.10,300-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த  வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.200 உயர்ந்து தற்போது ரூ.10,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை இந்த வாரம் பிற உணவுப் பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. கடந்த வாரம் விற்பனையான அதே விலையே நீடிக்கிறது.