அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பஞ்சனன் கலிதா. இவர் ரத்த தானம் செய்தல், குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்த்தல், மரங்களை பாதுகாத்து வளர்த்தல் ஆகியவற்றை மக்களிடம் வலியுறுத்தும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் நாடு முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்னர் அசாமில் இந்த சைக்கிள் பயணத்தை தொடங்கிய கலிதா, பல்வேறு மாநி லங்களைக் கடந்து 3,200 கிமீ-க்கும் மேலாக பய ணித்து தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத்தலமான இராமேஸ்வரத்தை வந்தடைந்துள்ளார்.
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள மிகத் தீவிர புயலான ஹமூன் புத னன்று வங்கதேச கடல் எல்லையில் கரையைக் கடக்க உள்ள நிலையில், மேற்கு வங்கம், சிக்கிம், மணிப்பூர், மிசோரம், மேகாலயா, திரிபுரா, அசாம் ஆகிய 7 மாநிலங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள் ளது. வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்தாலும் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும் இடி மின்ன லுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
பல்வேறு திட்டங்களுக்கு ஒன்றிய அரசு நிதி அளித்தால், அதை ஆந்திராவில் உள்ள ஜெகன்மோகன் அரசு பயன்படுத்திக்கொண்டு, அனைத்தையும் தாங்களே செய்ததை போன்று விளம்பரம் செய்கிறார்கள். ஒன்றிய அரசின் ஒத்து ழைப்பு உள்ள ஒவ்வொரு திட்டத்திலும் மோடியின் புகைப்படம் இடம்பெற வேண்டும். இல்லையேல் நிதியுதவியை நிறுத்துவோம் என ஆந்திர அரசுக்கு ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரி ராஜ்சிங் மிரட்டல் விடுத்துள்ளார்.
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூரில் உள்ள லாலா லஜ்பத் ராய் (எல்எல்ஆர்) மருத்துவமனையில் தலசீமியா நோய்க்கு ரத்தம் மாற்றிய 180 பேரில் 14 குழந்தை களுக்கு உயிருக்கு உலை வைக்கும் கொடிய நோயான எச்ஐவி மற்றும் ஹெபடைடிஸ் எனப் படும் கல்லீரல் வீக்க நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள தாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரி வித்துள்ளது.
ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் தங்க ளுக்கு ஆதரவான நபர்களுக்கு சீட் மறுக் கப்பட்டதை தொடந்து சித்தோர்கரில் உள்ள மாநி லத் தலைவர் சிபி ஜோஷியின் வீடு மீது கற்களை வீசி பாஜகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதே போல் ராஜ்சமந்தில் உள்ள கட்சி அலுவலகத்தைச் சூறையாடிய பாஜகவினர், அங்குள்ள பொருட் களை தீ வைத்துக் கொளுத்தினர்.
சாலை விபத்தில் சிக்கி, தலையில் ஏற்பட்ட காயத்தால் நினைவிழந்த கர்ப்பிணி பெண்ணுக்கு வென்டிலேட்டர் சிகிச்சையுடன் ஆரோக்கியமான குழந்தையை பிரசவிக்கச் செய்து சாதனை படைத்தனர் தில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள்.