states

லாக்கப் மரணங்களில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

சென்னை,மார்ச் 2- கொலை மற்றும் எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த பிறகும் குற்றம்சாட்டப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பி காவல்துறை இயக்கு நருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேரில் கடிதம் அளிக்கப்பட்டது. கடலூர் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலை யத்தில் 2015 ஆம் ஆண்டில் நிகழ்ந்த லாக்கப் மரணத்தில் குற்றவாளிகளான காவல் ஆய்வாளர் ராஜா, துணை ஆய்வா ளர் செந்தில்வேல், காவலர் சௌமியன் ஆகியோர் மீது 2022 ஆகஸ்ட்டில் கொலை மற்றும் எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவுகள் குற்றப்பத்திரிக்கையில் இணைக்கப் பட்ட பின்பும் அவர்கள் மீது எவ்வித துறைசார் நடவடிக் கையும் இல்லை. மேலும், சம்பவம் நடந்த நெய்வேலிக்கு மிக அருகில் உள்ள வடலூர் காவல் நிலையத்திற்கு இவ்வருடம் பிப்ரவரியில் ஆய்வாளராக ராஜா இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார். இடைநீக்கம் செய்து, கைது செய்வதற்கு பதி லாக பாதிக்கப்பட்டவர்களையும், சாட்சிகளையும் அச்சுறுத்து வதற்கு ஏதுவாக இடமாற்றம் நிகழ்ந்திருப்பது அனுமதிக்க முடியாதது. இதை கண்டித்து மார்ச் 6 அன்று கடலூர் எஸ்.பி., அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி மார்ச் 2 அன்று காலை காவல்துறை இயக்குந ரையும் கூடுதல் இயக்குநரையும் (சட்டம்-ஒழுங்கு) மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, லாக்கப்பில் கொல்லப்பட்ட சுப்பிரமணியனின் இணையர் ரேவதி ஆகி யோர் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.