புதுதில்லி, அக்.21- ஒன்றிய பாஜக அரசின் அலட்சியத்தால், நாடு முழுவதும் 2 ஆயிரம் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புக்கான இடங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த 2 ஆயிரம் இடங்கள், அடுத்துவரும் ஐந்தரை ஆண்டுகளுக்கும் காலியாகவே இருக்கும் என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு 2 ஆயிரம் எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு சேர்க்கை நடத்தாமல் விட்டு, அவற்றை வீணடித்திருப்பது மட்டுமல்லாமல், ஏற்கெனவே கல்லூரிகளில் சேர்ந்த 600 மாணவர்களின் சேர்க்கையையும் ரத்து செய்ய உத்தரவிட்டது. இதனால் மிகுந்த ஆர்வத்துடன் மருத்துவப் படிப்பில் சேர்ந்த 600 மாணவர்களின் எதிர்காலத்தையும் மோடி அரசு கேள்விக்குறியாக்கியுள்ளது.
தேசிய மருத்துவ ஆணையத் தின் (National Medical Commission - NMC) இளநிலை மருத்துவக் கல்வி வாரிய இயக்கு நர் சாம்பு சரண் குமார் அண்மை யில் அறிவிக்கை ஒன்றை வெளி யிட்டார். “நிகழாண்டு எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என தேசிய மருத் துவ ஆணையம் அறிவுறுத்தியி ருந்தது. ஆனால், சில மாநிலங்க ளில் அதற்குப் பிறகும் இணைய வழி மற்றும் நேரடிக் கலந்தாய்வு மூலம் எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரப்பப்பட்டதாகத் தெரிகிறது. இந்தச் செயல்பாடுகள் என்எம்சி விதிகளுக்கும், உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கும் புறம்பானவை. காலியாக இடங்கள் உள்ளது என்ப தற்காகவே மாணவர் சேர்க்கைக் கான காலக்கெடுவை நீட்டிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது. எனவே, என்எம்சி அறிவுறுத் தலை மீறி நடத்தப்பட்ட கலந்தாய்வு செல்லாது. ஒருவேளை மாணவர் களை கல்லூரிகளில் சேர்த்திருந் தால் அவர்களை உடனடியாக விடு விக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று அந்த அறிவிப்பில் கூறியிருந்தார். இந்த அறிவிப்புதான் மருத்துவ மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதாக அமைந்துள் ளது. தேசிய மருத்துவ ஆணையத் தின் இந்த உத்தரவால், நாடு முழு வதும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற் பட்ட மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் ஐந்தரை ஆண்டு காலத் துக்கும் காலியாகவே இருக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப் படுகிறது.
அதுமட்டுமல்லாமல், தேசிய மருத்துவ ஆணையம் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குப் பின்னர், காலியாக இருந்த எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு அக்டோபரில் கலந் தாய்வு நடத்திய மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் 600 மாண வர்களின் சேர்க்கையும் கேள்விக் குறியாகி உள்ளது. அக்டோபரில் சேர்க்கை பெற்ற இந்த மாணவர்கள், ஏற்கெனவே மிகப்பெரிய கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்று, மருத்துவக் கல்வியில் சேர்க்கை கிடைக்கிறதே என்பதற்காக- தாங்கள் சேர்ந்தி ருந்த கல்வி நிறுவனங்களிலிருந்து விலகி, மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தவர்கள் ஆவர். அவ்வாறு வந்து சேர்ந்த நிலையில், மருத்து வக் கல்லூரி சேர்க்கை செல்லாது என்று தேசிய மருத்துவ ஆணை யம் வெளியிட்டுள்ள திடீர் அறிவிப் பால், இந்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவர்கள், விரும்பிய மருத்து வப் படிப்பும் படிக்க முடியாது; முன்பு விலகிவந்த கல்வி நிறு வனங்களுக்கும் திரும்ப முடி யாது; கலை - அறிவியல் கல்லூரி களிலும் கூட சேர்க்கை பெற முடி யாது என்ற நிலைக்கு தள்ளப்பட் டுள்ளதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் 1500 எம்.பி. பி.எஸ். இடங்களை மோடி அரசு நிரப்பாமல் போட்டு வைத்துள்ளது. அத்துடன், இந்த 600 இடங்களும் சேரும்போது மொத்தம் 2100-க்கும் அதிகமான எம்.பி.பி.எஸ். இடங் கள் காலியாகவே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வில் வெற்றிபெறுவதற்காக மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் பல லட்சங்களை செலவிட வேண்டிய நிலையில் உள் ளனர். அதில் வெற்றிபெற முடி யாத நிலையில் மாணவர்கள் பலர் நாடு முழுவதும் தற்கொலை செய்து கொள்ளும் அவலங்களும் அரங் கேறுகின்றன. மருத்துவப் படிப்பை எளிதில் படிக்க விடாத அளவிற்கு நீட் தேர்வு உள்பட பல தடைகளை மோடி அரசு ஏற்கெனவே ஏற் படுத்தி வைத்துள்ளது. அதையும் தாண்டி வந்தால், தற்போது விதி கள், உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்று காரணங்களை காட்டி, சேர்க்கை யை மறுத்துள்ளது. நீதிமன்றத் தீர்ப்பும், விதி களும் தடையாக இருந்தால், அவற்றை உரிய முறையில் தலை யிட்டு சரிசெய்வதுதான் அரசும், ஆட்சியாளர்களும் செய்ய வேண் டிய வேலை. அதைச் செய்யாமல் நாடு முழுவதும் 2 ஆயிரம் மருத் துவ படிப்புக்கான இடங்களை, ஐந்தரை ஆண்டுகளுக்கும் வீண டிக்கப் போகிறோம் என்பது மாண வர்கள் மீதும், மருத்துவக் கல்வி மீதும் மோடி அரசுக்கு இருக்கும் அலட்சியத்தையே பிரதிபலிப்ப தாக குற்றச்சாட்டுக்கள் எழுந் துள்ளன.