மதுரை, மே 30- பாசிசத்தை அழித்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்; நாட்டில் கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக செயல்படும் இந்துத்துவா பாஜகவை நிச்சயம் வீழ்த்துவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். மதுரையில் ஞாயிறன்று பெரியாரிய உணர்வா ளர்கள் கூட்டமைப்பு நடத்திய செஞ்சட்டைப் பேரணி- பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஜி.ராமகிருஷ் ணன் பேசியதாவது:- நீலச்சட்டைப் பேரணி கோயம்புத்தூரிலும், கருப்புச் சட்டைப் பேரணி திருச்சிராப்பள்ளியிலும் சிவப்புச் சட்டைப் பேரணி மதுரையிலும் நடைபெற்றுள் ளது. வர்க்க-வருண ஆதிக்க ஒழிப்பு என்ற முழக்கத் தோடு மாநாடு நடைபெறுகிறது.
ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் கொள்கை யை அமலாக்க முயல்வதையும், பொதுத்துறைகளை தனியார் மயமாக்குவதையும் எதிர்த்து மூன்று நிறங்க ளும் ஓரணியில் திரண்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழக முதல்வராக கலைஞர் இருந்தபோது மாவட்டம் தோறும் சமத்துவபுரங்களை உருவாக்கினார். வாழும் வரலாறாகத் திகழும் தோழர் என்.சங்கரய்யா தமது குடும்பத்தையே சமத்துவபுரமாக ஆக்கியவர். தோழர் என்.சங்கரய்யா களமாடிய மதுரையில் சிவப்புச் சட்டைப் பேரணி நடந்துள்ளது பொருத்தமானதே. கம்யூ னிஸ்ட்டுகள், மார்க்சிஸ்ட்டுகள் பாசிசத்திற்கு எதிராக போராட்டம் மட்டுமே நடத்துவதில்லை. பாசிசத்தை அழித்த வரலாறு கம்யூனிஸ்ட்டுகளுக்கே உண்டு. பாசிச ஹிட்லர் சோவியத்யூனியன் மீது படை யெடுத்தபோது அவரை தோற்கடித்த பின் ஜெர்மன் நாடா ளுமன்ற கட்டடத்தில் பிரிட்டிஷ் கொடியோ ஜெர்மன் கொடியோ ஏற்றப்படவில்லை. செங்கொடி தான் ஏற்றப் பட்டது. இந்த வரலாற்றிற்கு சொந்தக்காரர்கள் கம்யூ னிஸ்ட்டுகள்.
1925-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆர்எஸ்எஸ் இயக்கம் 2025-ஆம் ஆண்டு (நூறாவது ஆண்டில்) இந்துத்துவத்தை இந்தியாவில் நிறுவி விடத் துடிக்கி றது. பாசிசத் தன்மை கொண்ட பாஜகவை மட்டுமல்ல; அதை வழிநடத்தக்கூடிய ஆர்எஸ்எஸ் பரிவாரங்களை யும் வீழ்த்த வேண்டும். இந்துத்துவத்தை நிறுவுவதற்கு திரிசூலத்தை ஆயுதமாக பாஜக பயன்படுத்துகிறது. திரிசூலம் தூக்கி வருபவர்களை மூன்று வர்ணங்கள் (நீலம், கருப்பு, சிவப்பு) முறியடிக்கும். நாட்டில் ஆர்எஸ்எஸ்-கார்ப்பரேட் கூட்டணி அரசு தான்செயல்படுகிறது. இந்த கூட்டுக் களவாணிகளை எதிர்த்து வலுவான போராட்டத்தை நடத்த வேண்டும் 2002-ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவா ரங்கள் இஸ்லாமியர்களை படுகொலை செய்தன. இந்தப் படுகொலையை முதலாளிகள் சங்க கூட்ட மைப்பில் இடம் பெற்றிருந்த டாடா, பஜாஜ் ஆகியோர் வன்மையாகக் கண்டித்தனர். சங்பரிவாரத்தை இவர் கள் இருவரும் கண்டித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து தனி முதலாளிகள் சங்கத்தை தொடங்கியவர் தான் அதானி. இதனால் தான் அதானியை மோடியும்-அமித்ஷாவும் முழுமையாக ஆதரிக்கின்றனர்.
எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட்களுக்கு தாரை வார்க்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வரு கிறது. தனியார்மயத்திற்கு எதிரான போராட்டத்தில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பும் இணைந் துள்ளதன் மூலம் மோடி அரசுக்கு கூடுதல் நெருக்கடி யைக் கொடுக்க முடியும். ரூ. 5 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட எல்ஐசியின் இன்றைய சொத்து மதிப்பு ரூ.38 லட்சம் கோடி. இதை தனியாருக்கு தாரை வார்க்க மோடி அரசு முயற்சிக்கிறது. இதை எதிர்ப்பது தான் வர்க்கக் கடமை. தமிழகத்தில் சாதி ஆணவப்படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும். சாதி மறுப்புத் திரு மணம் செய்து கொண்டவர்களுக்கு தனிச்சிறப்புத் திட்டத்தின் கீழ் கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே மதம், ஒரே தேர்தல் என்ற ஒற்றைப் பண்பாட்டு முறைக்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டும். அந்தந்த மாநில மக்கள் அவரவர் தாய்மொழியில் தான் படிக்க வேண்டும். இந்தப் போராட் டங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும். இவ்வாறு அவர் பேசினார்.