states

img

“இந்த முறை பரிசோதனை முயற்சியெல்லாம் இல்லை!” -இயக்குநர் பார்த்திபன்

இயக்குநர் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் குறித்து இவ்வாறு கூறியுள்ளார்: “இந்தமுறை நான்லீனியர், பரிசோதனை முயற்சி என்று எந்தப் பிரச்சனை களுக்குள்ளும் சிக்காமல், முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடவும் குழந்தைகள் ரசிக்கவும் மட்டுமே என்று ஒரு படம் தயாராகிவருகிறது!” - என்று குறிப்பிட்டுள்ளார் அவர்.  இது பற்றி அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டி ருக்கும் வீடியோவில், “நான் ஒரு புதிய படத்தை இயக்கி வரு கிறேன். அந்தப் படத்தின் தலைப்பை விரைவில் அறிவிப்பேன். வெறும் ரசிகர்களுக்கான திரைப்படமாக இருந்தால் ஏதோ ஒரு  படத்தை எடுத்துவிடலாம்; ஆனால், நான் எடுக்கும் திரைப்படம் ரசனை மிகுந்தவர் களுக்கான திரைப்படம். இந்தமுறை நான்லீனியர், எக்ஸ்பிரிமென்டல் என எந்தப் பிரச்சனைகளுக்குள்ளும் போகாமல், முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடவும் குழந்தைகள் ரசிக்கவும் ஒரு படம் தயாராகிறது.அதனால் நானும் குதூகலமாக இருக்கிறேன்.  படத்துக்கான டப்பிங் பணிகள் நடந்து வருகின்றன. என்னு டைய அறிவுக்கு எட்டிய அளவில் படத்தில் உள்ள குறைகளைத் திருத்தி உங்கள் பார்வைக்குக் கொண்டுவருவேன். இதில் விஎஃப்எக்ஸ் பணிகள் நிறைய உள்ளன. வழக்கமாக நாம்  ஹாலிவுட் படங்களை மட்டுமே கொண்டாடுவோம். ஹாலிவுட்  படங்களைப் போல நம்மால் எடுக்க இயலாது. நமக்கு இருக்கும் ஒரே கட்டுப்பாடு படத்தின் பட்ஜெட்தான். தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்திலேயே ‘அவ்வையார்’, ‘சந்திரலேகா’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ உள்ளிட்ட பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. எனது இந்தப் படம் பிரம்மாண்டப் படம் அல்ல. ஆனால் இது மிகவும்  நுணுக்கமான  படம். அதற்கான நிறைய விஎஃப்எக்ஸ் வேலைகள் நடைபெற்று வருகின்றன. முடிந்ததும் நான் விரைவில் உங்களை நல்ல படத்துடன் சந்திக்கிறேன்!” - என்று கூறியுள்ளார்.