states

எங்களின் மகளுக்கு நீதி கிடைக்கும் வரை சாம்பலைக் கங்கையில் கரைக்க மாட்டோம் : பெற்றோர் குமுறல்

ஹத்ராஸ் சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும், குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை தங்கள் மகளின் சாம்பலை கங்கையில் கரைக்க மாட்டோம் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பேட்டி அளித்துள் ளனர். அதில் அவர்கள் மேலும் கூறியிருப்ப தாவது: நாங்கள் கடந்த 2 ஆண்டுகளாக சிஆர்பிஎப் (CRPF) அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறோம். உறவினர்கள் எங்களைப் பார்க்க வேண்டுமானால் கூட மூத்த சிஆர்பிஎப் அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும். ஆவணங்களைக் காட்ட வேண்டும். இதனால், யாரும் எங்களைப் பார்ப்பதற்கு வருவதில்லை. 2020-ஆம் ஆண்டு முதல் இந்த குடும்பத்தில் உள்ள 3 சிறுமிகள் பள்ளிக்குச் செல்லவில்லை. வெளியே சென்று விளையாடக்கூட முடிய வில்லை. வீட்டைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.  சமூகப் புறக்கணிப்பு காரணமாக நாங்கள் வேலைக்கும் செல்ல முடியவில்லை. எங்கள் குழந்தைகளுக்கு தேவைப்படும் பாலுக்காக நாங்கள் சமீபத்தில் ஒரு எருமை மாடு வாங்கி னோம். எங்களுக்கு கிடைத்த 25 லட்ச ரூபாய் இழப்பீட்டில் காய்கறிகள் மற்றும் இதர உணவுப் பொருட்களை வாங்குகிறோம். அதை நம்பித்தான்  நாங்கள் வாழ்கிறோம். காய்கறிகள் வாங்க பாது காப்பு வளையத்துடன் செல்ல வேண்டியுள்ளது. அப்போதும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் எங்களை வெளிப்படையாக மிரட்டுகிறார்கள். 

இந்த கெடுபிடிகள் ஒருபுறத்தில் எங்களை பாதுகாப்பாக உணர வைக்கும் அதேநேரத்தில், சிறைவாசம் போன்ற உணர்வையும் ஏற்படுத்து கிறது. இதனால், நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். நீதி கிடைத்தவுடன் கிராமத்தை விட்டு வெளியேற நினைத்திருந்தோம். எங்களால் இப்போது வெளியேற முடியவில்லை.  வழக்கில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களும், ஆதாரங்களும், குற்றம் சாட்டப்பட்ட அனைவரை யும் தண்டிக்க உதவும் என்று நாங்கள் நம்பினோம். அது நடக்கவில்லை. தற்போது எங்களின் மகளுக்கு நீதி கிடைக்கவும், குற்றவாளி களைத் தண்டிக்கவும் மேல்முறையீடு செய்ய உள்ளோம். எங்களது மகளின் சாம்பல் ஒரு கல சத்திற்குள் இருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தண்டிக்கப்படும் வரை நாங்கள் அந்த சாம்பலை கங்கையில் கரைக்கமாட்டோம்.” இவ்வாறு ஹத்ராஸ் பெண்ணின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.  9 பேர் கொண்ட ஹத்ராஸ் தலித் பெண்ணின் குடும்பத்தினருக்கு, கண்ணீர்ப்புகை குண்டுகள் மற்றும் துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்திய 30 சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு அளித்து  வருகின்றனர். வீட்டிற்கு வெளியே மெட்டல் டிடெக்டர் மற்றும் சிசிடிவிகளையும் பொருத்தி வைத்துள்ளனர். இவை ஒருபுறமிருக்க, உ.பி. பாஜக அரசானது, தலித் பெண்ணின் குடும்பத்திற்கு அறிவித்த, அரசு வேலையைக் கூட 2 ஆண்டுகளாகியும் கூட இன்றும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.