இன்று சந்திர கிரகணம்: இந்தியாவில் பகுதியளவு காணலாம்!
சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அதன்படி முழு சந்திர கிரகண நிகழ்வு செவ்வாய்க்கிழமையன்று (நவ.8) நிகழ உள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 2.39 மணியளவில் சந்திர கிரகணம் தொடங்குகிறது. முழு சந்திர கிரகணம் பிற்பகல் 3.46 மணியளவில் தொடங்கி, 5.12 மணி வரை இருக்கும். பின்னர், பகுதி அளவு சந்திரகிரகணம் 6.19 மணியளவிலும் முடிவடைகிறது. இந்த கிரகணத்தின் ஆரம்ப நிலையை இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்தும் காண இய லாது. முழுமையான மற்றும் பகுதி அளவு சந்திர கிரகணத்தின் நிலைகளை கொல்கத்தா, கவுகாத்தி, கோஹிமா, அகர்தலா உள்ளிட்ட நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளிலிருந்து காணலாம்.
ஹேமந்த் சோரன் மேல்முறையீடு: உச்சநீதிமன்றம் ஏற்பு
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், சட்டவிரோத சுரங்க குத்தகை ஒதுக்கீட்டில் ஈடுபட்ட தாக பாஜக குற்றச்சாட்டு எழுப்பியது. இததொடர்பாக சோரனுக்கு எதிராக பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் விசாரணைக்கு உகந்தது என்று அம்மாநில உயர் நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஹேமந்த் சோரன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித், நீதிபதிகள் ரவீந்திர பட், சுதான்சு துலியா அமர்வு சோரனின் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
ஜனநாயக அடிப்படையையே மோடி குழிதோண்டி புதைக்கிறார்
“பாஜக வேட்பாளரை நினைவுப்படுத்த வேண்டிய அவசியமில்லை. வாக்களிக்க செல்லும் போது தாமரை சின்னத்தை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தாமரை சின்னத்தை எங்கு பார்த்தாலும் அது பாஜக என்றும், நான் உங்களிடம் வந்து விட்டேன் என்றும் அர்த்தம்” என்றும் பிரதமர் மோடி இமாச்சல் பிரச்சாரத்தில் பேசியிருந்தார். இந்நிலையில், “நாடாளு மன்ற விவாதங்கள் மற்றும் செய்தியாளர் சந்திப்புகளை புறக்கணித்து விட்டு, மாண்புமிகு பிரதமர் இப்போது தொகுதி அடிப்படையிலான நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படையே குழிதோண்டி புதைத்து வருகிறார். தொகுதியில் வேட்பாளர் பெயரையே வாக்காளர் நினைவில் வைத்திருக்க வேண்டியதில்லை என்று கூறுகிறார்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பீகாரை புறக்கணிக்கிறார்கள்
“2000-ஆம் ஆண்டு முதல் பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிக்காக, 15வது நிதிக் கமிஷன் பரிந்துரைகளின்படி, எங்களுக்கு மிகக் குறைந்த தொகையாக ரூ. 7.35 கோடியை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. உத்தரப் பிரதேசத்துக்கு ரூ. 1,988 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. எங்களுக்கு தேவையானது ஒன்றிய அரசின் சிறிய உதவி மட்டுமே. அது கிடைத்தால், இன்னும் வேகமாக முன்னேறி, அடுத்த இரண்டே ஆண்டுகளில் முதல் ஐந்து மாநிலங்களுக்குள் வருவோம்” என்று பீகார் துணைமுதல்வர் தேஜஸ்வி கூறியுள்ளார்.
காலணியில் மகாத்மா காந்தி படம்: அரசுகள் பதிலளிக்க உத்தரவு
சென்னை,நவ.7- காலணிகளில் மகாத்மா காந்தி அச்சிட்டு விற்பனை செய்யும் அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் நான்கு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், மதுரையைச் சேர்ந்த முத்துகுமார் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், “அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், செருப்புகள், உள்ளாடைகளில் மகாத்மா காந்தி அச்சிட்டு விற்பனை செய்து வருகின்றன. சர்வதேச ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் இந்த செயல்பாடு இந்திய நாட்டின் உள்விவகாரங்க ளில் தலையிடும் வகையில் உள்ளது. நாட்டு மக்களிடையே விரோதத்தை தூண்டும் வகை யில் செயல்படும் இந்த நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி ஒன்றிய - மாநில அரசுகளுக்கு மனு அனுப்பியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இந்த நிறு வனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதி பதிகள், மகாத்மா காந்தி புகைப் படத்தை காலணிகளில் அச்சிட் டுள்ளதாக மனுவில் கூறியுள்ள தைச் சுட்டிக்காட்டி, இந்த மனு தொடர்பாக ஒன்றிய மாநில அரசு கள் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தர விட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
சின்ன வெங்காயம் விலை கடும் உயர்வு
சென்னை,நவ.7- வெளி மாவட்டங்களி லிருந்து சென்னைக்கு சின்ன வெங்காயம் விற்ப னைக்கு வருகிறது. தினசரி 8 முதல் 10 வாகனங்களில் வருவது வழக்கம். ஆனால் கடந்த ஒரு மாதமாக இதன் வரத்து வெகுவாக குறைந்து விட்டது. தற்போது தினசரி ஒன்று முதல் 2 வாகனங்க ளில் மட்டுமே வருகிறது. இதனால் விலை திடீரென அதிகரித்தது. இந்த நிலையில், மொத்த விற்பனை கடை களில் ஒரு கிலோ ரூ.90-க்கு விற்கப்படுகிறது. சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடுமையான பதிலடி கொடுப்போம் இஸ்ரேலுக்கு ரஷ்யா எச்சரிக்கை
மாஸ்கோ, நவ.7- உக்ரைனுக்கு ராணுவ ரீதியான உதவிகளை மேற்கொண்டால், கடுமையான பதிலடி கிடைக்கும் என்று இஸ்ரேலை ரஷ்யா எச்சரித்துள்ளது. உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் நடவடிக்கைகள் தொடர்கின்றன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உக்ரைன் தலையில் ஆயுதங் களைக் கட்டி வருகின்றன. இந்நிலையில் இஸ்ரேலும் ஆயு தங்கள் உள்ளிட்ட உதவிகளை அளிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களாக இதற்கான பணிகள் நடைபெற்று வந்திருக்கின்றன என்று புளூம்பெர்க் ஊடகக்குழு மம் வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கிறது. கடந்த மாதத்திலேயே, இஸ்ரேல் இது போன்ற வேலை களில் இறங்கும் என்று ரஷ்யா வின் முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெத்வதேவ் எச்சரிக்கை விடுத்திருந்தார். இத்தகைய முட்டாள்தனமான நடவடிக்கை யை இஸ்ரேல் எடுத்தால், அனைத்து வகையான உறவு களையும் ரஷ்யா முறித்துக் கொண்டு விடும் என்றும் அவர் குறிப்பிட்டார். அக்டோபர் 17-ஆம் தேதியன்று இஸ்ரேல் அமைச்சர் நாச்மன் ஷாய் ஆயுதங்கள் வழங்குவதற்கான நேரம் வந்துவிட்டதாகக் கூறியிருந்தார். தற்போது நடைபெற்ற தேர்தலில் தீவிர வலதுசாரி பெஞ்ச மின் நேதன்யாஹூ வெற்றி பெற்றுள்ள நிலையில், உக்ரைனு டனான நிலைப்பாட்டில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. ரஷ்யாவைப் பகைத்துக் கொள்ள இவர் விரும்ப மாட்டார் என்று தெரிகிறது. கியூபாவுக்கு ஆதரவான ஐ.நா. தீர்மானத்திற்கு இஸ்ரேல் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், உக்ரைன் வாக்களி க்காமல் புறக்கணித்தது குறிப்பி டத்தக்கதாகும்.