சென்னை,நவ.30- “பிரதமருக்கு வழங்கிய பாது காப்பில் எவ்வித குறைபாடும் இல்லை. தமிழக காவல்துறையில் நவீன தொழில்நுட்பக் கருவிகளைத்தான் வைத்திருக்கிறோம். தமிழக காவல் துறையிடம் அளவுக்கு அதிகமாகவே உபகரணங்கள் உள்ளன. கிட்டத்தட்ட இரண்டு மடங்கு உள்ளன” என்று தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார். சென்னையில் தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு புதனன்று (நவ.30) செய்தியாளர்களைச் சந்தித் தார். அப்போது அவரிடம் பிரதமர் வரு கையின்போது பாதுகாப்பு குறைபாடு இருந்ததாக பாஜக தலைவர் அண்ணா மலை குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “பிரதமர் வருகையின்போது, பாதுகாப்பில் குளறுபடிகள் நடந்ததாக எந்த விதமான தகவலும் இல்லை. நல்ல முறையில் பாதுகாப்பு இருந்தது. அது தொடர்பாக எந்த தகவல் பரி மாற்றங்களும் கிடையாது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் தமிழக காவல்துறை பயன்படுத்தக் கூடிய அனைத்துவிதமான உபகர ணங்களும், பாதுகாப்பு உபகரணங்கள் உள்பட அனைத்தும் என்ன நிலையில் இருக்கின்றன என்பதை ஆய்வு செய்து, ஏதாவது உபகரணங்கள் காலாவதியாகியிருந்தால், அதனை மாற்றும் வழக்கம் பல ஆண்டுகளாக உள்ளது. அதுதான் தற்போது மேற் கொள்ளப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, இப்போது இருப்ப திலேயே தமிழக காவல்துறை வசம் தான் நல்ல தரமான உபகரணங்கள் உள்ளன.தற்போது இரண்டுபிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், மோப்ப நாய்க ளுடன் அந்தமான் சென்றனர். அங்கு பணி முடிந்து, திரும்ப உள்ளனர். அவர் களைத் திரும்பவும் கேரளாவுக்கு அனுப்ப இருக்கிறோம். இப்படி அண்டை மாநிலங்களுக்கு தமிழக காவல்துறை உதவி செய்து கொண்டிருக்கிறது. எனவே அதில் எந்த விதமான குறைபாடுகளும் இல்லை. பழையனவற்றை மாற்றுவதும், புதிய வற்றை வாங்குவதும் காலங் காலமாகச் செய்வது. தமிழக காவல்துறையில் பழைய தொழில்நுட்பங்களை எல்லாம் பின் பற்றவில்லை. தமிழக காவல்துறை யிடம் இருந்து மற்ற மாநிலங்கள் எல்லாம் கேட்டு வாங்குகின்றனர் என்றால், பழைய தொழில்நுட்பம் இருந்தால் எல்லாம் வாங்க மாட்டார்கள் அல்லவா. நவீன தொழில் நுட்பக் கருவிகளைத்தான் வைத்திருக் கிறோம். தமிழக காவல்துறை வசம் அளவுக்கு அதிகமாகவே உபகர ணங்கள் உள்ளன. கிட்டத்தட்ட இரண்டு மடங்கு உபகரணங்கள் உள்ளன. அதேநேரம் எதை வைத்திருக்க வேண்டும், எதை களைய வேண்டும் என்ற பயிற்சிக்கான நிலையாணை உள்ளது. அந்த நிலையாணையைத் தான் பின்பற்றுகிறோம். மேலும், பிரத மர் வருகையின்போது, பாதுகாப்பு குறைபாடு என்று எஸ்பிஜியிடம் இருந்து எந்தவிதமான தகவலும் குற்றச் சாட்டும் இல்லை. ரொம்ப சிறப்பாக நடந்து முடிந்ததாகத்தான் வாய்மொழி யாக அவர்கள் சொல்கின்றனர் என்றார்.