டிசம்பர் 24 இந்து தமிழ் நாளிதழில் வெளிவந்த வெண்மணி நினைவுநாளை அரசு நிகழ்ச்சியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் குறிப்பிட்டுள்ள சில தவறான பதிவுகளுக்கான மறுப்பு.
1968 டிசம்பர் 25 இரவு நிலப்பிரபுக்களால் கீழவெண்மணியில் விவசாய தொழி லாளர்கள் தீ வைத்து கொளுத்தப் பட்டனர் .சில தோழர்கள் துப்பாக்கி யால் சுடப்பட்டார்கள். இதைக் கண்டு நடுங்கிய பெண்களும் குழந்தை களும் வயது முதிர்ந்த சில ஆண் களும் ஓடி ஒளிந்த இராமையா என்ப வரின் சிறு குடிசை எரித்து சாம்ப லாக்கப்பட்டது. அதில் தஞ்சம் அடைந்த 44 உயிர்கள் எரிந்து கரிக் கட்டைகள் ஆகின. இந்த சம்ப வத்தை கொடியேற்றிய நிகழ்வால் ஏற்பட்டது என சுருக்கி சித்தரிப்பது சரியானது அல்ல. இதில் ஒரு நீண்ட நெடிய வர லாற்றுத் தொடர்ச்சி அடங்கி உள் ளது என்பதை நாம் பார்க்க வேண் டும். சுருக்கமாக இங்கே குறிப்பிட விரும்புவது:
1966 நாகை தாலுகாவில் நான் கரை படி நெல் கூலியிலிருந்து அரைப் படி உயர்த்தி 5 படி கூலி கேட்டு மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் நடைபெற்ற கூலிக்கான போராட் டங்கள். செங்கொடியை இறக்கி விட்டு நெல் உற்பத்தியாளர் சங்க கொடியை ஏற்றுங்கள். இல்லை என்றால் தீ வைத்து கொளுத்தி விடு வேன் என்ற பண்ணையார்களின் மிரட்டலுக்கு பயப்படாமல் உயிரே போனாலும் செங்கொடியை இறக்க மாட்டோம் நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் மஞ்சள் கொடியை ஏற்ற மாட்டோம் என்ற ஜனநாயக ரீதியி லான அரசியல் போராட்டம், அதோடு தாழ்த்தப்பட்ட சாதிக்கா ரர்களுக்கு இவ்வளவு வீராப்பா என்ற அவர்களின் தீண்டாமைக்கு எதிரான போராட்டங்கள் ஆகிய முப்பரிமாண பிரச்சனைகளை உள்ளடக்கியதே வெண்மணி சம்ப வம் ஆகும். பண்ணை அடிமைத்தனத்திலி ருந்து விடுதலை பெறவும் தீண்டா மைக் கொடுமைகளுக்கு எதிராக வும் தொடர்ச்சியான போராட்டங் கள், மக்கள் பொருளாதார வாழ்வி யல் உரிமைகளை நிலைநாட்டிட வும் அவர்களுக்கு பாதுகாப்பு அர ணாக விளங்கியதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் வர்க்க வெகுஜன அமைப்புகளும் தான். வெண்மணி மற்றும் அதன் சுற் றுப்புற கிராம மக்களின் உரிமை களை காத்து நின்றது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே.
வெண்மணி படுகொலைச் சம்ப வத்திற்கு முன்பும் அதற்குப் பின்பும் மக்களோடு உறுதியாக நின்ற ஒரே இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே. அந்த வகையில் கீழ வெண்மணி நினைவாலயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே உரிமை கொண்டாட முடியும் என் பதை இங்கு குறிப்பிட வேண்டும். இதையே நாளடைவில் பல் வேறு அரசியல் கட்சித் தலைவர் களும் ஏற்றுக் கொண்டு பிரகடனப் படுத்தியுள்ளனர். சாதிய, மதவாத உணர்வு களோடும் குறிப்பாக மக்களை பிளவுபடுத்தும் கொடியோடும், கோஷங்களோடும் வெண்மணியை கைப்பற்றுவோம் என்ற முழக்கங் களோடும் வெண்மணி தியாகி களுக்கு அஞ்சலி என்ற பெயரில் வரு பவர்களை மட்டுமே அடையாளம் கண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனுமதிப்பது இல்லை.வர்க்க உணர்வோடும் மக்களை ஒற்று மைப்படுத்தும் கோஷங்களோடும் அஞ்சலி செலுத்த வருபவர்களை எவராக இருந்தாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தடுப்பதில்லை இதுதான் உண்மையான நிலை.
வெண்மணித் தீயின் வெளிச்சத் தில் தான் அப்போதைய தமிழக அரசு கண் திறந்தது வெண்மணி தியாகத்திற்கு.பின்பு கணபதியா பிள்ளை கமிஷன் அமைக்கப்பட்டு இருதரப்பு விசாரணைகளையும் முடித்து தனது அறிக்கையை வெளியிட்டது.அதில் உள்ளூர் மக்களுக்கு வேலையும், ஒரே வித மான கூலியும் என்ற கோரிக்கையில் இருக்கும் நியாயத்தை மறுக்க இயலாது என்றும் வெளியாட்கள் இறக்குமதி தான் பிரச்சனைக்கு காரணம் என்பதையும் கண பதியா பிள்ளை கமிஷன் வெளிப் படுத்தியது. அதோடு மட்டுமல்லாமல் ஒரு கடை நிலை ஊழியன் பெரும் ஊதியம் கூட ஒரு விவசாய தொழி லாளிக்கு வழங்கா விட்டால் அவன் எப்படி வாழ முடியும் என்ற கேள்வி யும் எழுப்பி நியாயமான கூலியான ஆண்களுக்கு கூலி 6 படி நெல் ரூபாய்1.50 அல்லது ரூபாய் 3.00, வழங்கிடவும் பெண்களுக்கு தினக் கூலி 5 படி நெல், 50 காசு அல்லது 1.45 அறுவவடையில் 4 ல் ஒரு பங்கு (54 படியில் 6 படி) இந்தக் கூலி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று சட்டம் ஆக்கியது. எனவே வெண்மணித் தியாகி களுக்கு யாரும் அஞ்சலி செலுத்தத் தடையில்லை.அதில் அவதூறு களுக்கு இடமில்லை.