இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 5 மில்லியன் நீரூற்றுகள் உள்ளன, அவற்றில் கிட்டத்தட்ட 3 மில்லியன் நீரூற்று கள் இமயமலைப் பகுதிகளில் இருப்ப தாக நிதி ஆயோக், மற்றும் இந்திய அர சாங்க ஆய்வுக் குழு தெரிவிக்கிறது. இந்தியாவில் 200 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நீரூற்றுகளை சார்ந்து வாழ்கின்றனர். அவர்களில் 50 மில்லியன் பேர் இந்திய இமயமலைப் பகுதிகளில் 12 மாநிலங்களில் வாழ்ந்து வருகின்றனர். அப்பகுதியில் இருக்கிற 80-90 சதவீத மக் கள் தங்கள் அன்றாட பயன்பாட்டிற்கு நீரூற்றுகளையே நம்பியிருக்கிறார்கள். ஆனால் இந்திய இமயமலைப் பகுதி களில் பாதிக்கும் மேற்பட்ட நீரூற்றுகள் வற்றிவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நேச்சர் சயின்டிஃபிக் ரிப்போர்ட் சமீ பத்தில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை யில், இப்பகுதிகளில் உள்ள நீரூற்றுகள் பெரும்பாலும் நல்ல நிலைமையில் இருந் தாலும் அவை நாளுக்கு நாள் மிகவும் மோசமடைந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இது குறித்தான ஆராய்ச்சிகளை,சாமி உல்லா பட், ஷாஹித் அஹ்மத் தார் மற்றும் ஆதில் ஹமித் ஆகிய விஞ்ஞானி கள் மேற்கொண்டனர். அவர்கள் ஆய்வு களின் அடிப்படையில் கூறியிருப்பதாவது பெரிய அளவிலான நிலங்கள் பயன் படுத்தப்படுவதற்கு மனிதனால் தூண்டப் பட்ட நடவடிக்கைகள், அதனால் ஏற்படும் மாற்றங்கள், நீர்ப்பிடிப்பு அதிகமாக இருக் கக்கூடிய பகுதிகளில் காடுகள் அழிக்கப் படுதல், காலநிலை மாற்றங்கள் மற்றும் பனிப்பாறைகள் பின்வாங்குதல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு போன்ற சுற்றுச்சூழல் காரணிகளால், வடமேற்கு இமயமலைப் பகுதியில் உள்ள நீரூற்று கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றது. காஷ்மீரில் இருக்கக்கூடிய நீரூற்று கள் மனித உயிர்களுக்கு மிகவும் முதன் மையானதாக இருப்பதால் அவைகளை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
“காஷ்மீரில் இருக்கக்கூடிய நீரூற்று கள் தற்போது நல்ல நிலையில் இருப்ப தால் சிறந்த குடிநீருக்கான ஆதாரமாக இருக்கிறது. ஆனால் விரைவான நகர மயமாக்கல், தொழில்மயமாக்கல், மனித தலையீடுகள், மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் காலநிலை மாற்றம் போன்ற காரணிகளால் நீருற்றுகள் தொடர்ந்து சீரழிவுக் குள்ளாகின்றன.” காஷ்மீர் பள்ளத்தாக்கின் 258 நீரூற்று களின் நீரின் தர மதிப்பீட்டின்படி, 39.5சத வீத நீரூற்றுகளில் சிறந்த நீரும், 47.7சத வீத நல்ல நீரும், 5சதவீத மோசமான நீரும், 1.6சதவீத மிக மோசமான நீரும், 6.2சதவீத நீரூற்றுகள் குடிநீர் தேவைக்கு முற்றிலும் தகுதியற்றவையாகவும் இருக் கின்றன. பெரும்பாலான (87சதவீத) நீரூற்றுகள் எந்த மாற்றத்திற்கும் உட்படுத்தாமல் குடிப்பதற்கு ஏற்ற நீராக இருக்கிறது. இந்த நீரூற்றுகள் பிராந்தி யத்தில் அதிகரித்து வரும் மக்கள்தொகை யின் குடிநீர்த் தேவைகளை பூர்த்தி செய்கி றது.
மத்திய மற்றும் தெற்கு காஷ்மீரில் உள்ள நீரூற்றுகள் சுண்ணாம்புக் கற்கள் நிறைந்த பாறைகளால் நீர் காரத்தன்மை கொண்டதாக இருக்கிறது. குப்வாரா மற்றும் பாரமுல்லா மாவட்டங்களில் உள்ள நீரூற்றுகளில் நீர் பிடிப்புப் பகுதி களில் கனிம உரங்கள் மற்றும் உள்நாட்டு கழிவுநீர் கலப்பதால் அமிலத்தன்மை காணப்படுகிறது. மண் மற்றும் விவசாயக் கழிவுகளில் இருந்து வரும் கசிவு மற்றும், செப்டிக் டேங்க் தொட்டிகள், மேற்பரப்பு வடிகால் களில் இருந்து கசிவுகள் மற்றும் தண் ணீரை மாசுபடுத்தும் உள்நாட்டு கழிவுநீர் ஆகியவைகளால் நீரூற்றுகள் அதிக அளவு சல்பேட்டுகள் மற்றும் நைட்ரேட்டு கள் காணப்படுகின்றன. என்று அறிக்கை குறிப்பிடுகிறது.
மனித செயல்பாடுகள் அதிகரித்து வரு வதால் குப்வாரா பகுதியில் சோடியம் மற்றும் பொட்டாசியத்தின் செறிவு அதி கரித்து வருவது, மத்திய மற்றும் தெற்கு காஷ்மீரில் தோட்டக்கலை மற்றும் விவ சாய பயன்பாடுகளினால் மண்ணில் மாற்றங்கள் ஏற்படுகிறது. கந்தர்பால் மற்றும் புட்காம் மாவட்டங் களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லாததால் செப்டிக் டேங் கழிவுகள் மற்றும் மனிதக் கழிவுகள் நிலத்தடியில் புதைந்து கிடப்பதால் சில நீரூற்றுகளில் கோலிபார்ம் பாக்டீரியாக்கள் அதிகமாக காணப்படுகின்றன. இதனால் நிலத்தடி நீரும் மோசமடைந்து வருகிறது. பனி உருகுவதற்கான காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் நிலத்தடி நீர் கரேவாஸ் பகுதிகளில் மூன்றில் ஒரு பங்கு குறைந்திருக்கிறது என்று ஆய்வு களின் அடிப்படையிலான தரவுகள் தெரி விக்கின்றன.