உச்ச நீதிமன்றத்தில் டாக்டர் ஜெயா தாக்கூர் வழக்கு
புதுதில்லி, டிச. 2 - அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு மூன்றாவது முறையாக பதவிக்கால நீட்டிப்பு வழங்கியதற்கு எதிராக, உச்ச நீதிமன்ற த்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பதவிக்கால நீட்டிப்பு வழங்கியது ஜனநாயக செயல்முறை யை சீரழிக்கும் நடவடிக்கை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. சஞ்சய் குமார் மிஸ்ரா நவம்பர் 2018-இல் இரண்டு வருட காலத்திற்கு அமலாக்கத்துறை இயக்குநராக நிய மிக்கப்பட்டார். அவர், 2021 நவம்பர் 19 அன்று ஓய்வுபெறவிருந்த நிலையில், அவரது பதவிக்காலத்தை 2022 நவம்பர் 18 வரை ஓராண்டுக்கு நீட்டித்து நரேந்திர மோடி அரசு உத்தரவிட்டது. சிபிஐ, மத்தியப் புலனாய்வுக் கழ கம், அமலாக்க இயக்குநரக தலைவர் களுக்கு 3 ஆண்டு பதவிக்கால நீட்டிப்பு வழங்கும் மோடி அரசின் சலுகையை அனுபவிக்கும் முதல் நபர் என்ற பெய ரையும் எஸ்.கே. மிஸ்ரா பெற்றார். அப்போதே இந்த பதவி நீட்டிப்பு தொடர்பாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அவற்றை மோடி அரசு கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், 2022 நவம்பரில் மிஸ்ரா ஓய்வுபெறுவார் என்று இருந்த நிலையில், 2022 நவம்பர் 17 அன்று, மிஸ்ராவுக்கு 2023 நவம்பர் 18 வரை மேலும் ஓராண்டுக்கு பதவி நீட்டிப்பு வழங்கியது மோடி அரசு. இது மீண்டும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்நிலையிலேயே, எஸ்.கே. மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட பதவி நீட்டிப்பை எதிர்த்து, சமூக ஆர்வல ரும், மத்தியப் பிரதேச மகளிர் காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளருமான டாக்டர் ஜெயா தாக்கூர் உச்சநீதிமன்றத் தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். வழக்கறிஞர்கள் வருண் தாக்கூர், ஷஷாங்க் ரத்னூ ஆகியோர் மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
“ஜனநாயகம் என்பது நமது அரசி யலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாகும், சட்டத்தின் ஆட்சி மற்றும் சுதந்திர மான மற்றும் நியாயமான தேர்தல் ஆகி யவை ஜனநாயகத்தின் அடிப்படை அம்சங்களாகும். ஆனால், தனது அரசி யல் எதிரிகளுக்கு எதிராக அமலாக்கத் துறையை தவறாகப் பயன்படுத்தி, ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்ட மைப்பையே எதிர்மனுதாரர்கள் அழித் துள்ளனர். அமலாக்க முகமைகளில் நியமனமானது நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருக்க வேண்டும். மாறாக, நியமனம் ஒருதலைப்பட்சமான முறையில் நடந்தால், பின்னர் அந்த பதவிகள் கருவிகளாகப் பயன்படுத்தப்படலாம்” என்று டாக்டர் ஜெயா தாக்கூர் கூறி யுள்ளார். மேலும், “அமலாக்க இயக்குநரின் பதவிக்காலத்தை அவ்வப்போது நீட்டிக்க முடியாது. அமலாக்க இயக்கு நரின் பதவிக் காலத்தை நீட்டிக்க இந்திய ஒன்றிய அரசுக்கு எந்த அதி காரமும் இல்லை. முக்கிய விசார ணைகள் நிலுவையில் உள்ளதால், அம லாக்க இயக்குநரின் பதவிக்காலத்தை நீட்டிக்கிறோம் என்ற காரணத்திற்குள் ஒன்றிய அரசு புகுந்து கொள்ள முடி யாது. அமலாக்கத்துறை இயக்குநர் பத விக்கு நியமனம் செய்ய தகுதியான பல திறமையான அதிகாரிகள் இருக்கி ன்றனர். மத்திய ஊழல் தடுப்பு ஆணைய (Central Vigilance Commission) சட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையின்படி நியமனம் செய்ய ப்படுவதற்கான வாய்ப்பை தகுதியான அதிகாரிகள் இழக்கக்கூடாது” என்றும் ஜெயா தாக்கூர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.