states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பொதுத்தேர்வு தேதிகளில்  மாற்றமில்லை
சென்னை, டிச. 20 - “மழையால் பாதிக்கப் பட்ட நான்கு (தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி) மாவட்ட பள்ளிகளில் பாது காப்பான சூழல் திரும்பிய பிறகு மாணவர்கள் அரை யாண்டு தேர்வு எழுத அனு மதிக்கப்படுவார்கள். அவர் களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்படும். 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதியில் எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை. பள்ளிகளில் பாடத் திட்டங்கள் நிறைவு பெறா மல் இருந்தால் சனிக்கிழமை களிலும் பள்ளிகள் நடத்தப் படும்” என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன் பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடிக்கு விமான சேவை துவங்கியது

தூத்துக்குடி, டிச. 20 - கனமழையால் தூத்து க்குடி விமான நிலையம் வெள்ளத்தால் சூழப்பட்ட நிலையில், விமான நிலை யம் மூடப்பட்டது. 3 நாட்க ளாக சென்னை - தூத்துக்குடி இடையேயான விமான சேவை பாதிக்கப்பட்டது. இந்நிலையில், மழை ஓய்ந்து வெள்ள நீரும் வெளியேற்ற ப்பட்டு இயல்புநிலை திரும் பியுள்ளதால், புதன்கிழமை முதல் சென்னை - தூத்துக் குடி இடையே விமானச் சேவை துவங்கியுள்ளது.