சென்னை,ஜன.14- தலித் மக்களுக்கு வழங்கப் பட்டு வந்த குடிதண்ணீர் தொட்டியில் மனித மலத்தை கலந்த வேங்கை வயல் தண்ணீர் தொட்டியை ஜனவரி 21 அன்று இடிக்கும் போராட்டத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக், மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிரா மத்தில் சாதிய வன்மத்தோடு தலித் மக்கள் குடிநீருக்காக பயன் படுத்தும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் மலத்தை கொட்டி யுள்ளனர். இது மனித மாண்புகளை உலுக்குகிற செயல். சாதியின் அடிப் படையில் இச்சமூகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் இழிவுகளின் உச்சம். நாடு விடுதலை பெற்று 75 ஆண்டு களை கடந்த பின்னரும் கூட தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாதியை முன்வைத்து தீண்டாமைக் கொடுமைகளும், வன்முறைகளும் இழிவுகளும் நிகழ்த்தப்படுவது சமூகத்தின் பொது மனசாட்சிக்கு விடுக்கப்பட்டுள்ள சவாலாகும்.
அண்ணல் அம்பேத்கர் உரு வாக்கித் தந்த அரசியலமைப்புச் சட்டத்தின் கூறுகளும், அவரது சிந்த னைகளும் இச்சமூகத்தின் சமத்து வத்தை நோக்கிய பயணத்திற்கு வழி காட்டி என்பதை உரக்க பேச வேண்டிய தருணம் இது. தந்தை பெரியார், அயோத்திதாச பண்டிதர் ,சிங்காரவேலர் , ஜீவானந்தம் உள்ளிட்ட தலைவர்களின் முன்னெ டுத்த போராட்டத்தை மேலும் முன்கொண்டு செல்வது தமிழ் நாட்டின் பொது சமூக மனநிலை போக்கை முற்போக்காக மாற்றி டும். இந்நிலையில் தமிழக அரசு “உள்ளாட்சி அமைப்பின் உதவி யோடு, அந்த கிராமத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சிறுமின்விசைத் தொட்டி ஆகியவை சுத்தம் செய்யப்பட்டதோடு, அனை த்து குடிநீர் வழங்கு குழாய்களும் கிருமி நீக்கம் செய்யப்பட்டு, அதன் மூலமாக நீரேற்றப்பட்டு, நீர்மாதிரி சேகரிக்கப்பட்டு, அறந்தாங்கி பொது சுகாதார ஆய்வகத்திற்கு அனுப் பப்பட்டு பரிசோதனை செய்யப் பட்டதில், தற்போது குடிநீர் சுத்த மாக உள்ளது என அறிக்கை வரப் பெற்றுள்ளது. அந்த கிராமத் திலுள்ள 32 வீடுகளுக்கும் 2 இலட்சம் ரூபாய் செலவில் முற்றிலும் புதிய இணைப்புக் குழாய்கள் மற்றும் குடிநீர்க் குழாய்கள் அமைக்கப் பட்டு, 5-1-2023 முதல் சீரான குடிநீர் விநியோகம் நடைபெற்று வரு கிறது”என கூறியுள்ளது. தற்போது அந்த குற்றச் செயலில் ஈடுபட்ட ஒருவர் கூட கைது செய்யப் படவில்லை. மாறாக வேங்கை வயல் தலித் மக்களையே குற்ற வாளிகளாக சித்தரிக்க காவல் துறை முயற்சிகளை எடுத்து வரு கிறது.
இது கடும் கண்டனத்திற் குரியது. உண்மைக் குற்ற வாளிகளை உடனடியாக கைது செய்வதற்கான துரித முயற்சிகளை தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும். அதேபோல், வேங்கைவயல் கிராமத்தில் மலம் கொட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி தீண்டாமையின், சாதிய இழிவு உருவாக்கத்தையும் , சமூக ஒற்றுமை யின்மையின் அடையாளமாக மாறி யுள்ளது. புதிய நீர்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான அறிவிப்புகள் வெளி யிடப்பட்டாலும் அந்த இழிவின் அடையாளமாக மாறியுள்ள தொட்டி இன்னும் இருப்பது மனித உணர்வு களை கொச்சைப்படுத்தும். சாதியையும் , வன்மத்தையும் ,இழிவு உருவாக்கத்தையும் சுமந்து நிற்கின்ற புதுக்கோட்டை வேங்கை வயலில் மலம் கொட்டப்பட்ட நீர்தேக்கத் தொட்டியை இடிக்கும் போராட்டத்தை வருகிற ஜனவரி 21 அன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்த உள்ளது. சாதிய இழிவுகளுக்கு எதிராக போராட நினைக்கிற , ஏற்றத் தாழ்வற்ற சமத் துவ சமூகம் உருவாக உழைக்கிற அனைவரையும் இப்போராட்டத்தில் பங்கேற்க இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் அழைப்பு விடுக்கிறது. இவ்வாறு தெரிவித்திருக் கிறார்கள்.