states

புதுச்சேரி ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளை 2025ல் முடிக்க திட்டம்

சென்னை, ஆக. 26- புதுச்சேரி ரயில் நிலை யத்தை ரூ.93 கோடி ரூபாயில்  மேம்படுத்தும் பணிகள் வரும் 2025 இல் ஆகஸ்டில் முடியும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்வேயின் மறுசீர மைப்பு திட்டத்தில், தெற்கு ரயில்வேயில், எழும்பூர், ராமேஸ்வரம், காட்பாடி, மதுரை, கன்னியாகுமரி, கேரளாவில் எர்ணாகுளம், கொல்லம் உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலை யங்களையும் மேம்படுத்த உள்ளன. இந்நிலையில், உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணியர் அதிக அளவில் வந்து செல்லும், புதுச்சேரி ரயில் நிலையத்தை ரூ. 93 கோடி யில் மேம்படுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 6 ஆம் தேதி காணொலி மூலம் துவக்கி வைத்தார். கட்டிடங்கள் சீரமைப்பு, பார்சல் அலுவலகம், டிக் கெட் பரிசோதகர்கள் அலு வலகம், ரயில் ஓட்டுநர் ஓய்வு  அறைகள் உள்ளிட்ட கட்டு மான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதேபோல், பயணியர் காத்திருப்பு அறைகள், நடைமேம்பாலம், லிப்ட், எஸ்கலேட்டர், உண வகங்கள், வணிக வளாகம், பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட உள்ளன. ஒட்டுமொத்த பணிகளும் வரும் 2025 ஆகஸ்ட்டில் முடித்து, பயணியர் பயன்பாட்டிற்கு கொண்டுவர தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.