சென்னை, நவ. 23 - கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கு தமிழக அரசு நலவாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் நவம்பர் 20 அன்று திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி புத்துக்கோவி லில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் டி. ஏழுமலை தலைமை வகித்தார். மாநிலப் பொதுச்செயலாளர் கே.பி. பெருமாள் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், “கறிக்கோழி வளர்ப்புக்கு குறைந்தபட்ச அடிப்படை கூலி யாக கிலோவிற்கு ரூ. 10 என நிர்ணயம் செய்ய வேண்டும்; மானியத்துடன் கூடிய மின்சாரம் வழங்க வேண்டும்; தரமான 50 கிராம் எடையுள்ள குஞ்சுகளை நிறு வனங்கள் வழங்க வேண்டும்; ஒரு ஆண்டி ற்கு குறைந்தபட்சம் 5 பேட்ஜ் என்ற வகை யில் கோழிக்குஞ்சுகள் வழங்க வேண்டும்” என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், “கோழிப்பண்ணைகள் அமைப்பதற்கு மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்க வேண்டும்; கறிக் கோழி வளர்ப்பு விவசாயிகளைப் பாது காத்திட மாநில அரசு விதிமுறைகளை உரு வாக்க வேண்டும்; நலவாரியம் அமைக்க வேண்டும்” எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உயர் அதிகாரிகளையும் அமைச்சர்களையும் நேரில் சந்தித்து மனுக் கொடுக்கவும் கூட்டத்தில் முடிவு எடுக்கப் பட்டது.