சென்னை, ஜூன் 23- பீடித் தொழில் மற்றும் பீடித் தொழிலா ளர்கள் மீதான நிலைபாட்டை ஒன்றிய அரசு தெளிவுபடுத்த வேண்டும். பீடித் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண் டும் என்று வலியுறுத்தி செப்டம்பர் 8 அன்று நாடு தழுவிய அளவில் பீடித்தொழிலாளர் கோரிக்கை நாள் இயக்கம் நடத்தப்படுகிறது. அகில இந்திய பீடித்தொழிலாளர் சம்மேளனத்தின் செயற்குழு கூட்டம் ஜூன் 22 அன்று சென்னையில் சம்மேள னத் தலைவர் கே.பி.சகாதேவன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிஐடியு அகில இந்திய துணைத்தலைவர் ஏ.கே.பத்மநாபன், சம்மேளன பொதுச்செயலாளர் தேபசிஸ் ராய், பொருளாளர் பிமன் சன்யால், எம்.பி.ராமச்சந்திரன், கே. திருச்செல்வன், எம்.வேல்முருகன் உட்பட சம்மேளன நிர்வாகிகளும், சம்மே ளன செயற்குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் கீழ்க் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
பீடித் தொழிலாளர்களின் நியாய மான கோரிக்கைகளை ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும். பீடித் தொழில் மற்றும் பீடித் தொழிலாளர்கள் மீதான நிலைப்பாட்டை ஒன்றிய அரசு தெளிவு படுத்த வேண்டும். வேலை இழப்பவர்க ளுக்கு மாற்று வேலை, நிதி உதவி திட்டத்தை அறிவிக்க வேண்டும். பதிவு செய்யப்படாத, சட்டவிரோத பீடி உற் பத்தியை தடுத்து நிறுத்த வேண்டும். பீடித் தொழிலாளர்களுக்கு ஒரே மாதிரியான குறைந்தபட்ச ஊதியத்தை நாடு முழுவதும் அறிவிக்க வேண்டும். (அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டுடன் (அடிப்படை 1960=100) இணைக்கப்பட்ட ஆயிரம் பீடிக்கு ரூ. 375, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 25சதவிகி தம். 7479 புள்ளிக்கு 0.5 பைசா (டிசம் பர் 2019) ஊதியக் கட்டமைப்பு உருவாக் கப்படும். பீடி சுற்றும் தொழிலாளர்களை தவிர மற்ற பீடி தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ. 21 ஆயிரம் வழங்க வேண்டும். பீடித்தொழிலில் ஒப்பந்த முறை ரத்து செய்யப்பட வேண்டும். ஒப்பந்தம் மற்றும் இதர முறை பீடித்தொழிலா ளர்களை நேரடியாக டிரேட் மார்க் முத லாளிகளின் கீழ் கொண்டுவர வேண்டும். உண்மையான தொழிலாளர்களுக்கு கணக்கு எண்கள் வழங்க வேண்டும்.
பீடித் தொழிலாளர்களின் நலத் திட்டங்களுக்கு நிதியளிக்கும் பீடித் தொழிலில் செஸ் வரியை மீட்டெடுக்க வேண்டும். பீடித்தொழிலாளர்களின் சேம நல திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். அடையாள அட்டை மூலம் தொழிலா ளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து மருத்துவ வசதிகளும் தொடர வேண்டும். இல்லையெனில், அவர்கள் இஎஸ்ஐ உறுப்பினர்களாக கருதப்பட வேண்டும். இந்த இஎஸ்ஐ தொழிலா ளர் பங்களிப்பு சந்தா தொகை ஒன்றிய அரசாங்கத்தால் வழங்கப்பட வேண்டும். அனைத்து மாநில அரசுகளும் பீடித் தொழிலாளர்களுக்காக ஒரு சிறப்புத் தொகுப்பைத் தொடங்க வேண்டும். பீடி மற்றும் சுருட்டுச் சட்டம் 1966. குறைந்தபட்ச ஊதியம், பதிவு புத்தகம், போனஸ், பி.எப். உள்ளிட்ட சட்டப்படியான உரிமைகள் நீடிக்கப்பட வேண்டும். வீடற்ற பீடித்தொழிலா ளர்களுக்கு வீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 8 அன்று நாடு தழுவிய பீடித்தொழிலாளர் கோரிக்கை நாள் இயக்கம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அகில இந்திய பீடித்தொழிலாளர் சம்மேளனத்தின் 8 ஆவது மாநாட்டை கேரள மாநிலம் கண்ணுரில் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.