states

காவிரி பிரச்சனையின் வரலாறு தெரியாத ஒன்றிய அமைச்சர்

சென்னை, ஆக.6- காவிரி நீர் பங்கீட்டு பிரச்சனை கள் இனி பேச்சுவார்த்தைக்கு இட மில்லை என்ற நிலையில்தான் நடுவர்  மன்றத்தில், தீர்ப்பு பெற்றிருக்கிறோம். இந்த தீர்ப்பில் ஏதாவது பிரச்சனை என்றால் உச்ச நீதிமன்றத்தை தான்  நாட வேண்டுமே தவிர, மீண்டும்  கர்நாடக மாநிலத்தில் பேச்சுவார்த்தை  நடத்தலாம் என்று கூறுவது காவிரி  பிரச்சனையின் அடிப்படை வரலாறு  தெரியாமல் பேசுவது என்று ஒன்றிய  இணை அமைச்சர் ராஜீவ் சந்திர சேகருக்கு, அமைச்சர் துரைமுருகன்  பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- கடந்த இரண்டு மாத காலமாக கர்நாடகம் தமிழகத்துக்கு உச்ச நீதி மன்றம் அறிவித்த அளவுப்படி தண்ணீரை வழங்கவில்லை. இது  குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கும்,  ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதி இருக்கிறார். ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சரை நான்  இரண்டு முறை நேரில் சந்தித்து நிலை மைகளை விளக்கி இருக்கிறேன். காவிரியிலிருந்து தண்ணீர் திறந்து  விடு என்று கூறுகிற அதிகாரம் காவிரி மேலாண்மை வாரியத்துக்குத்தான் உண்டு. அந்த வாரியம் கூட்டிய கூட்டங்களில் தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, கலந்து  கொண்டு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்தை அறிவுறுத்த வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்துள்ளார்.  ஆனால், இதுவரையில் காவிரி மேலாண்மை வாரியம் முழுமையாக செயல்படவில்லை. நீர் சராசரியாக கிடைக்கும் வருடங்களில் கர்நாடகம் எந்தெந்த மாதங்களில் எவ்வளவு திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. ஆனால், நீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் நீரை பகிர்ந்து கொள் வதை தரவு அடிப்படை என்று குறிப் பிடுவார்கள். அந்த பங்கீட்டை காவிரி மேலாண்மை வாரியம் இதுவரை செய்யவில்லை.

இந்த வாரியம் ஒன்றிய அரசின்  கீழ் இயங்குகிறது. எனவே தான் தமிழ் நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகத்தை அறிவுறுத்துமாறு வாரி யத்திடம் கேட்டுக் கொண்டிருக்கின் றோம். அந்த பணியை வாரியம் செய்ய வேண்டும் என்றுதான் முதல்வர் பிரத மருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.  அந்தக் கடிதத்துக்கு பிரதமர் அலுவலகமோ அல்லது ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரோ பதில் அளிக்காத நிலையில், ஒன்றிய இணை  அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், “கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி,  தமிழ்நாட்டில் திமுக ஆட்சி, இரண்டும் ஓர் அணியில் இருக்கிறார்கள் ஏன்  பிரச்சனையை நேரில் பேசித் தீர்த்துக் கொள்ளக் கூடாது” என்று தெரிவித்திருக்கிறார். ஒன்றிய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் காவிரி பிரச்சனையின் முழு விவரம் தெரியவில்லை என்று  நினைக்கிறேன். 1967 ஆம் ஆண்டி லிருந்து 1990 ஆம் ஆண்டு வரை இப்பிரச்சனை குறித்து பேசி பேசி எந்த முடிவுக்கும் வர முடியாத நிலை யில் தான் ஒன்றிய அரசு காவிரி நடுவர்  மன்றம் அமைத்தது.  காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கி, அந்த தீர்ப்பு உச்ச நீதி மன்றத்துக்கு போய், உச்ச நீதிமன்றம்  சில திருத்தங்களுடன் தீர்ப்பு வழங்கிய பிறகு இரு மாநிலங்களிடையே பேச்சுவார்த்தை என்பதற்கு இட மில்லை. பேச்சுவார்த்தையின் மூலம்  பிரச்சனைக்கு தீர்வு காண முடிந்திருந் தால் நடுவர் மன்றம் அமைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டி ருக்காது. இவையெல்லாம் நீண்ட  காலமாக நடைபெற்றுக் கொண்டிருக் கும் வரலாறு. ‘தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு வேறு’என்று கிராமங்களில் கூறுவது போல, தோழமையாக இருந்தாலும் தோழமையாக இல்லாவிட்டாலும் அவரவர் உரிமையை நிலைநாட்டு வதில் அவரவர்கள் உறுதியாக இருப்பார்கள். இந்த நிலைப்பாடு தான் தமிழ்நாட்டின் நிலைப்பாடு. இந்த விவரம் எல்லாம் தெரியாமல் ஒன்றிய இணை அமைச்சர் ஒருவர் முதல்வருக்கு அறிவுரை சொல்வது போல் ஓர் அறிக்கை விட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்திருக் கிறார்.