பாஜக வெளிநடப்பு
சென்னை, அக். 9 - “உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின்படி, காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீ ரைத் திறந்து விடுமாறு, கர்நாடக அர சுக்கு ஒன்றிய அரசு உத்தரவிடவேண்டும்” என்று தமிழ்நாடு சட்டப்பேரவை ஒருமன தாக தீர்மானம் நிறைவேற்றியது. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்த இந்த தனித் தீர்மானத்திற்கு, முக்கிய எதிர்க்கட்சிகளான அதிமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, பாமக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரி வித்த நிலையில் பாஜக மட்டும் தீர்மான த்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவையி லிருந்து வெளிநடப்பு செய்தது.
மழைக்காலக் கூட்டத் தொடர்
தமிழ்நாடு சட்டப்பேரவையின் மழைக் கால கூட்டத்தொடர், திங்களன்று (அக்.9) தொடங்கியது. அவை மரபுப்படி, காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. வினாக்கள் விடைகளு க்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதி லளித்தனர். 2023-24 நிதியாண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கைகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும்
அதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு, ஒன்றிய அரசை வலி யுறுத்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டா லின் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். “தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு அடித்தளமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதா ரத்தைப் பாதுகாத்திட மாண்பமை உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் வரை யறுக்கப்பட்டுள்ளபடி தமிழ்நாட்டிற்குத் தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசிற்கு உத்தரவிட ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்து கிறது” என்று தீர்மானத்தில் குறிப்பிடப் பட்டு இருந்தது.
ஒன்றிய அரசிடம் தொடர் முறையீடு
இந்த தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வர் மு.க. ஸ்டாலின், பின்னர் பேரவையில் உரையாற்றினார். 41.6 டிஎம்சி-யை போராடிப் பெற்றோம் “காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டங்களிலும், காவிரி நீர் முறைப் படுத்தும் குழுவின் கூட்டங்களிலும், தமிழ்நாடு அரசு, தொடர்ந்து வலுவாக வாதிட்டு வந்ததன் காரணமாக, 2023-2024 பற்றாக்குறை ஆண்டாக இருக்கும் போதிலும் 1.06.2023 முதல் 3.10.2023 வரை பில்லிகுண்டுலுவில் 46.1 டி.எம்.சி நீர் பெறப்பட்டுள்ளது. இந்த பாசன ஆண்டு பற்றாக்குறை ஆண்டாக இருந்து வரும் நிலையில், 5.10.2023 வரை, 90.25 டி.எம்.சி. நீர் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற் காக திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம், காவிரி டெல்டாவில் 6 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்காக, முறைபாசனப்படி நீர் பங்கீடு செய்து வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் எஞ்சியுள்ள நாட்களுக்கு நாம் நமக்கு உரிய நீரைப் பெற்று, குறுவைப் பயிரையும், அடுத்து நடவு செய்யப்பட உள்ள சம்பா பயிரை யும் காப்பாற்ற வேண்டிய அவசியம் உள்ளது.
சமரசமின்றி வாதாடுவோம்
ளின் நலன் காக்க ஒன்றிய அரசை வலி யுறுத்தி அரசு கொண்டு வந்துள்ள தீர்மா னத்தை இப்பேரவை நிறைவேற்றித்தர வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் உணவுத் தேவைக்கான மட்டுமல்ல - மனித உயிர்களின் உயிர்த் தேவைக்கு அவசியமானது காவிரி நீர்! அதனை தமிழ்நாட்டு மக்களுக்குப் பெற்றுத் தரு வதில் எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுக் காமல் வாதிட்டு பெற்றுத் தருவோம். ஒன்றிய அரசானது, இதில் முறை யாகச் செயல்பட்டு தமிழ்நாட்டு மக்க ளுக்கு காவிரி நீரைப் பெற்றுத் தர வேண்டும். இதற்கான அனைத்துவித முயற்சிகளையும் தி.மு.க. அரசு தயங்கா மல் செய்யும் என்று மாமன்ற உறுப்பி னர்களுக்கு உறுதி அளிக்கிறேன். அதே உணர்வுடன் இந்தத் தீர்மா னத்தை இப்பேரவையின் சார்பில் நிறை வேற்றி தர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் கேட்டுக் கொண்டார்.
எடப்பாடியின் சர்ச்சைப் பேச்சு
அதைத் தொடர்ந்து, தீர்மானம் மீதான விவாதத்தைத் துவக்கிவைத்து, எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். “கர்நாடகாவில் இருந்து தண்ணீர் பெற முயற்சிகள் எடுக்க அதிமுக துணை நிற்கும். நியாயமான நீரை கர்நாடக அரசு திறந்து விடாதது சரியல்ல என்பதை தீர்மானத்தில் சேர்க்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார். அப்போது, காவிரி விவகாரத்தில் திமுக அரசு துணிச்ச லோடு செயல்படவில்லை என்று எடப் பாடி கூறியது, அவையில் சர்ச்சையானது.
முதல்வர் பதிலடி
முதல்வர் மு.க. ஸ்டாலினே நேரடி யாக எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்தார். “துணிச்சலை பற்றி எங்க ளுக்கு எதிர்கட்சி தலைவர் சொல்லித் தர வேண்டியது இல்லை. என்ன துணிச்சல் என்பது எங்களுக்கு தெரியும்” என்று அவர் காட்டமாக கூறினார். தீர்மானம் ஒருமனதாக நிறைவேற வேண்டும் என்பதற்காகவே எடப்பாடி பழனிசாமி பேசுவதை எல்லாம் பொறு மையாக கேட்டுக்கொண்டிருப்பதாக வும், அதற்காக எதை வேண்டுமானாலும் பேசிவிடலாம் என்று எடப்பாடி கருதக் கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
அனைத்துக் கட்சிகளும் ஆதரவு
முன்னதாக தனது பேச்சை திசை திருப்ப வேண்டாம் என்ற எடப்பாடி, நம்மு டைய உரிமைகளை காப்பதற்காக நான் பேசி வருகிறேன் என்று தீர்மானத்திற்கு அதிமுகவின் ஆதரவை வழங்கினார். எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து, அனைத்து கட்சி உறுப்பினர்களும் தீர்மானத்தை ஆதரித்து பேசினர். இதனையடுத்து, இந்த தீர்மானம் சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டது.
பாஜக-வுக்கே உண்மையான அக்கறையாம்!
இருப்பினும் பா.ஜ.க மட்டும் தீர்மா னத்தை ஆதரிக்காமல் வெளிநடப்பு செய்தது. வெளியில் வந்து செய்தி யாளர்களிடம் பேசிய பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், “திமுகவும், காங்கிரஸ் கட்சியும் பிரதமர் மோடியை எதிர்ப்பதற்காக மிகப்பெரிய ஒரு கூட்ட ணியை உருவாக்கிக் கொண்டிருக்கிறா ர்கள். மக்களை ஏமாற்றுகின்ற நாடக மாக இந்த தீர்மானத்தைப் பார்க்கிறோம். முதல்வர் கொண்டு வந்த தீர்மானம், முழு மையான, நிரந்தர தீர்வை நோக்கிய தீர்மானமாக இல்லாத காரணத்தால், தமிழகத்தின் நலன் உண்மையாகவே பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அக்க றையுடன் செயல்படும் பாஜக சட்ட ப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கிறோம்” என்று அவர் கூறிக் கொண்டார்.