திருச்சிராப்பள்ளி, ஜூன் 12- மாற்றுத்திறனாளிகளை ஏமாற்றும் போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டு மென தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்க மாநில, மாவட்டத் தலை வர்கள், செயலாளர்கள் கூட்டம் ஞாயிறன்று திருச்சிராப்பள்ளியில் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய பல்நோக்கு அடையாள அட்டையை சில மாநி லங்களில் 50 சதவீதம், வடமாநிலங்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கை யில் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உதவிகள், சலுகைகள் பெற தேசிய பல்நோக்கு அடையாள அட்டை கட்டா யம் என ஒன்றிய அரசு வலியுறுத்துவது கண்டிக்கத்தக்கது. மாற்றுத்திறனாளிகள் இடம்பெற்றுள்ள குடும்ப அட்டைகளை அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்திற்கு மாற்றி 35 கிலோ உணவு தானியங்கள் கிடைக்க உணவு பாது காப்புத்துறை நடவடிக்கை எடுக்க வேண் டும். ஒன்றிய அரசு மாற்றுத்திறனாளிகளுக் கான உதவித்தொகையை கடந்த 11 ஆண்டு களில் ரூ.300 மட்டுமே உயர்த்தியுள்ளது. அதுவும் மூன்று சதவீத மக்களுக்கு மட்டுமே கொடுக்கிறது. இந்த நடவடிக்கை யை கைவிட்டு உதவித்தொகையை குறைந்த பட்சம் ரூ.5 ஆயிரமாக உயர்த்தி அனை வருக்கும் கொடுக்க வேண்டும்.
கிராமப்புற மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரமும், வருமானமும் 100 நாள் வேலைத்திட்டத்தையே நம்பி இருப்பதால் அதற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்து மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வழங்க வேண்டும். ரயில்வே துறையில் மாற்றுத்திறனாளி கள் பயணிப்பதற்கு தடையற்ற சூழல் உரு வாக்கப்படவில்லை. ஒன்றிய அரசு தடை யற்ற சூழலை உடனே உருவாக்க வேண் டும். பல மாவட்டங்களில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் நியமனம் செய் யாமல் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்படும் மாவட்டங்களுக்கு தனி அலுவலர்களை உட னடியாக நியமிக்க வேண்டும். தமிழகத்தில் மாநில வருவாய்த்துறை அலுவலர் தலைமையில் மூன்று மாதங்க ளுக்கு ஒருமுறை நடைபெறும் மாற்றுத்திற னாளிகள் குறைதீர் கூட்டம் கடந்த 11 மாதங்க ளாக நடத்தப்படாத சூழலில் குறைதீர் கூட் டத்தை உடனடியாக நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்றிய அரசின் மாற்றுத்திற னாளிகள் விரோதப் போக்கைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலி யுறுத்தியும் வரும் ஜூலை 10-ஆம் தேதி தில்லி யில் தர்ணா நடைபெறுகிறது. இதில் தமிழ கத்தில் இருந்து 1,100 பேர் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் டி.வில் சன் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் பா.ஜான்சிராணி சிறப்புரை யாற்றினார். உரிமைக்குரல் சந்தா 2,238 கொடுத்த திண்டுக்கல் மாவட்டத்திற்கும், மாநில மைய நிதி ரூ. இரண்டு லட்சம் கொடுத்த விழுப்புரம் மாவட்டத்திற்கும், மாவட்ட உறுப்பினர் பதிவு ஏழாயிரம் முடித்த செங்கல்பட்டு மாவட்டத்திற்கும் கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் திருச்சிராப்பள்ளி மாநகர் மாவட்டச் செயலாளர் ஜி.பி.குமார், மாநகர் மாவட்டத் துணைத்தலைவர் கோ.வி.வெற்றிச்செல்வன், மலைக் கோட்டை பகுதிச் செயலாளர் ஜி.நெடுஞ்செழியன், புறநகர் மாவட்டச் செயலாளர் ரஜினிகாந்த், மாநகர் மாவட்டத் துணைச் செயலாளர் எம்.ரவிச்சந் திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.