states

img

‘மாட்டிறைச்சி சாப்பிடுவாயா?’ எனக் கேட்டு மாணவியை காலணி துடைக்க வைத்த ஆசிரியர்!

கோயம்புத்தூர், நவ. 22 - துடியலூர் அருகே ‘மாட்டிறைச்சி சாப்பிடுவாயா?’ எனக் கேட்டு காலணியை துடைக்க வைத்ததாக, பள்ளி ஆசிரியர் மீது மாணவி புகார் அளித்துள்ளார்.  இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். கோவை மாவட்டம், துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இஸ்லாமிய மாணவி ஒருவர் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கோவை மணி குண்டு பகுதியிலுள்ள முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு, பெற்றோருடன் வந்து தனது பள்ளியின் ஆசிரியர் அபிநயா மீதும், தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி மீதும் புகார் ஒன்றை அளித்தார்.  அம்மனுவில், ஆசிரியர் அபிநயா,  தன்னிடம் கடுமையாக நடந்து கொண்ட தால், தலைமை ஆசிரியரிடம் முறை யிட்டதாகவும், இதனால் ஆத்திர மடைந்த ஆசிரியர் அபிநயா, தன்னை சக மாணவர்கள் முன்பு வகுப்பறை யில் வைத்து ‘உனது பெற்றோர் என்ன வேலை செய்கிறார்கள்?’ என கேட்ட தாகவும், அதற்கு மாணவி, ‘மாட்டி றைச்சிக் கடை வைத்துள்ளதாக’ பதிலளித்த நிலையில், அப்படியானால், ‘மாட்டுக்கறி சாப்பிடுவதால்தான் திமிருடன் பேசுகிறாயா?’ என்று கேட்டவாறே, ஆத்திரத்துடன் மாண வியின் கன்னத்தில் அறைந்ததாக வும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டு மல்லாமல், ‘மாட்டுக்கறி சாப்பிடு வாயா?’ என்று சக மாணவிகள் முன்பு கேட்டு காலணியை துடைக்கவைத்தும் துன்புறுத்தியதாக தெரிவித்து, இவர்களால், தான் படிக்க முடியுமா? என்ற அச்சம் எழுந்துள்ளதாகவும் கூறியுள்ளார். நடந்த இந்த சம்பவத்தை செய்தி யாளர்களிடம் விவரித்த மாணவியின் பெற்றோர், இதுகுறித்து துடியலூர்  காவல் நிலையத்தில் புகார் அளித்தி ருந்ததாகவும், காவல்துறையினர் விசாரித்து அறிவுரை வழங்கிய பின்பும், பள்ளிக்குச் செல்லும் பொழுது மீண்டும் மிரட்டும் சம்பவம் நடை பெற்றதால், தற்போது முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பதாகவும் தெரிவித்தனர்.  இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், பள்ளிக்கு சென்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார். காவல் துறையினரும் பள்ளியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை துடியலூர் அசோகபுரம்  அரசு உயர்நிலைப்பள்ளி மாண விக்கு ஆசிரியரே மனஉளைச்சலை ஏற்படுத்தியதாக வெளியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. வெறுப்புக் கருத்துக்கள் வளர்வதற்கு எந்த விதத்திலும், ஆசிரியர்களோ,  மாணவர்களோ  இடம்அளித்து விடக்கூடாது என்றும், இச்சம்பவம் தொடர்பாக கோவை  மாவட்ட  முதன்மை கல்வி அலுவலர் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்து கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.