பிரதமர் மோடி வாய்திறக்க மறுப்பதேன்?
முன்னாள் அமைச்சர் கபில் சிபல் கேள்வி
மேற்கு வங்கம், பீகார் வன்முறைகள் குறித்து பிரதமர் மோடி பேச வேண்டுமென்று, ஒன்றிய முன்னாள் அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக கபில் சிபல் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேற்குவங்கம், பீகாரை எரிப்பதையும், வெறுப்பு விதைகளை தூவுவதையும் நிறுத்த வேண்டும். இவை அனைத்தும் அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் சித்தாந்தங் களுக்கு மட்டுமே பலன் அளிக்கும். சாதாரண மனிதன் இந்த வெறுப்பால் பாதிக்கப்படுகிறான். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி பேச வேண்டும், உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச வேண்டும். இந்த வன்முறைக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். இந்த வன்முறைக்கு மத்தியில் இருவரில் ஒருவர் கூட பேசவில்லை என்பது துரதிஷ்டவசமானது. அவர்கள் ஏன் அமைதியாக உள்ளனர்? இந்த பைத்தியக்காரத்தனத்திற்கு காரணமான குறிப்பிட்ட தரப்பினருக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் வேண்டுகொள் விடுக்கிறேன். தற்போது உருவாக்கப்பட்ட சூழ்நிலையில் இருந்து நாடு முன்னேறிச் செல்ல வேண்டும். இந்தச் சம்பவம் 2024-க்கான (நாடாளுமன்ற தேர்தல்) காரணமாக இருக்க வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கலவரம் செய்தவர்களை 2025-இல் தலைகீழாக கட்டித் தொங்க விடுவோம்: அமித்ஷா
ராம நவமி ஊர்வலங்கள் மூலம் கலவரம் செய்த பாஜக-வினர் பழியைத் தூக்கி முஸ்லிம்கள் மீது போட்டுள்ளனர். இதுதொடர்பாக நவாடாவில் பேசியிருக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “சசாராம் மற்றும் பீகார் ஷெரீப்பில் கலவரக்காரர்கள் வெறித்தனமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். 2025-இல் பீகாரில் பாஜக ஆட்சி அமைத்தால் அவர்கள் தலைகீழாகத் தொங்கவிடப்படுவார்கள்” என்று பயமுறுத்தியுள்ளார். மேலும் பீகாரில் நிதிஷ்குமார் ஆட்சி விரைவில் கவிழும் என்றும் குறிப்பிட்டுள்ளார். பீகார் வன்முறைச் சம்பவங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து, மாநில ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் அறிக்கை அளிக்கவும் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.
கொல்கத்தா, ஏப். 3 - குஜராத் மாநிலம் வதோதரா, மகா ராஷ்டிர மாநிலம் சத்திரபதி சம்பாஜி நகர், மேற்குவங்க மாநிலம் ஹவுரா வில் உள்ள ஷீபூர் பகுதி, உத்தரப் பிரதேச மாநிலத்தில் மதுரா, லக்னோ ஆகிய நகரங்களில், கடந்த மார்ச் 30 அன்று நடைபெற்ற ராம நவமி ஊர்வலங்களில் கல்வீச்சு, வாக னங்கள், குடியிருப்புகளுக்குத் தீவைப்பு சம்பவங்கள் போன்ற வன்முறைகள் அரங்கேறின. பலர் படுகாயம் அடைந்தனர். ஹவுரா ஊர்வலத்தின்போதே “வன்முறையில் ஈடுபட்டவர்கள் தேச விரோதிகள்” என்றும், “இதன்பின்னால் உள்ளவர்கள் நிச்சயம் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது. நான் ஒருபோதும் வன்முறையை ஆதரிக்க மாட்டேன்” என்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்திருந்தார். எனினும், ஞாயிறன்று மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியில் பாஜக தேசிய துணைத்தலைவர் திலீப் கோஷ் பங்கேற்ற மற்றொரு ராம நவமி ஊர்வலத்தையும் பாஜகவினர் கல வரம், வன்முறையில் முடித்துள்ளனர்.
பீகாரில்...
பீகார் மாநிலம் சசாராம் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை ராம நவமி ஊர்வலத்தின்போது வெடித்த வன்முறையில், வாகனங்கள் மற்றும் சாலையோர கடைகள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட்டன. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டது. எனினும், சனிக்கிழமை இரவு பீகாரின் ஷரீப் மற்றும் நாளந்தா மாவட்டங்களிலும் சங்-பரிவாரங் களால் மீண்டும் மோதல்கள் வெடித்தன. அங்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, வன்முறை சம்பவங்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. இதனிடையே, சசாராம் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் 6 பேர் காயம் அடைந்ததும், அதில் ஒருவர் பலியானதும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக, சசாராம் பகுதியைச் சேர்ந்த 26 பேர் மற்றும் நாளந்தா பகுதியைச் சேர்ந்த 80 பேர் என இதுவரை 106 பேரை பீகார் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வன்முறைச் சூழல் காரணமாக, பீகாரில் உள்ள இந்துக்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதாகக் கூறும் வீடியோவை சிலர் சமூக வலை தளங்களில் பரப்பி பதற்றத்தை ஏற்படு த்தினர். ஆனால், இது “ஆதாரமற்றது; அபத்தமான வதந்தி; யாரும் தங்கள் பகுதியை விட்டு வெளியேறவில்லை; இதுபோன்ற வதந்திகளுக்கு மக்கள் செவி சாய்க்க வேண்டாம்” என்று ரோஹ்தாஸ் காவல்துறை கேட்டுக் கொண்டது. மேலும், “ராம நவமி விழா வன்முறையில் ஈடுபட்ட அனைவரும் சிசிடிவி-க்களின் உதவியுடன் அடை யாளம் காணப்பட்டுள்ளனர்; வன் முறைக்கு காரணமானவர்கள் யாரை யும் விட மாட்டோம்” என ஆளும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் எம்எல்ஏ-வும், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரு மான சக்தி சிங் யாதவ் தெரிவித்தார். முன்னதாக, ராம நவமி மோதல்கள் குறித்து செய்தியாளர் களிடம் பேசிய பீகார் முதல்வர் நிதிஷ் குமார், “இந்த சம்பவங்கள் ‘இயற்கை யானவை’ அல்ல என்றும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க யாரோ ‘இயற்கைக்கு மாறான’ ஒன்றை வேண்டுமென்றே செய்திருக்கலாம்” என்றும் குற்றம் சாட்டினார். இந்தச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தவும், யாத்திரை மோதல் களின் பின்னணியில் உள்ளவர்களை கண்டறியவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.