விலைவாசி உயர்வு நாட்டு மக்களை கசக்கி பிழிந்து வருகிறது. ஆனால் இதை ஒப்புக் கொள்ள மோடி அரசு மறுத்து வருகிறது. ஜூலை மாதத்தில் நாட்டின் கிராமப்புற பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வின்படி 2.3 சதவீதம் அளவிற்கு பொருட்கள் விற்பனை உயர்ந்திருப்பது போல தெரிந்தாலும், அதே ஜூலை மாதத்தில் நகர்ப்புற பகுதிகள் அனைத்திலும் பொருட்கள் விற்பனை 7 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இது சராசரி அளவே ஆகும். சென்னை, மும்பை போன்ற முதல் வகை பெருநகரங்களில் பொருட்கள் விற்பனை 8.7 சதவீதம் அளவிற்கு மிகப் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதற்கு காரணம் நகர்ப்புற மக்களின் கைகளில் கிடைக்கும் கூலி மற்றும் ஊதியம் விலைவாசி உயர்வாலும், பல்வேறு கட்டணங்கள் உள்ளிட்ட செலவினங்கள் உயர்வாலும் முற்றாக உறிஞ்சப்படுகின்றன. அதன்விளைவு, மக்களின் கைகளில் பணப்புழக்கம் இல்லை. இதுதான், பொருட்கள் விற்பனையில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் வாங்கும் சக்தி அதிகரிப்படாமல் இந்த வீழ்ச்சியிலிருந்து மீள்வது சாத்தியமில்லை. ஆனால் மோடி அரசு தனது கூட்டுக் களவாணிகளின் லாபத்தை உறுதி செய்வதில் மட்டும் தான் கவனமாக உள்ளது.