லிமா, டிச.17- தென் அமெரிக்க நாடான பெருவில் மக்கள் எழுச்சிகரமான போராட்டங்களை நடத்தி வரும் வேளையில், அந்தக் கோரிக் கைகளை ஏற்றுக் கொள்ளாமல் வலதுசாரிக் கட்சிகள் தொடர்ந்து முரண்டு பிடித்து வரு கின்றன. அரசியல் சட்டச் சீர்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு முற்போக்குத் திட்டங்களை பெட்ரோ காஸ்டில்லோ முன்வைத்தபோது தொடர்ந்து வலதுசாரிகள் நிராகரித்து வந்தனர். அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்ததால், மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதியின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வந்தனர். நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு பொதுத் தேர்தல் நடத்த அவர் முடி வெடுத்தபோது, அவசர, அவசரமாக நாடா ளுமன்றத்தைக் கூட்டி, அவரைப் பதவி நீக்கம் செய்வதாக அறிவித்தனர். அவரின் பதவி நீக்கத்திற்கு மக்கள் மத்தி யில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. காஸ்டில் லோவின் விடுதலை, நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் உள்ளிட்ட கோரிக் கைகளை முன்வைத்து மக்கள் பெரு நாட்டு வீதிகளில் போராடிக் கொண்டிருக்கி றார்கள். 30 நாட்களுக்கு அவசர நிலையை நடைமுறைப்படுத்தும் அளவுக்கு போராட் டத்தின் வீச்சு இருக்கிறது. போராடும் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறை க்கு இதுவரையில் 20 பேர் பலியாகியி ருக்கிறார்கள். இந்நிலையில், 2023-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடத்தக் கோரும் அரசியல் சட்டத் திருத்த மசோதா அவையில் முன்வைக்கப்பட்டது. இதற்கு ஆதரவாக 49 வாக்குகளும், எதிராக 33 வாக்குகளும் கிடைத்தன. 25 பேர் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய வில்லை. மசோதாவுக்கு ஆதரவு அதிகமாக இருந்தாலும், 87 வாக்குகள் கிடைத்தால் தான் மசோதா நிறைவேறும். மீண்டும் வாக்கெடுப்பு நடத்த முன்னேற்றத்திற்கான கூட்டணிக்கட்சி கோரிக்கை வைத்தி ருக்கிறது.