states

சென்னையில் வெள்ளத் தடுப்புக்கான திட்டங்கள்

சென்னை,மார்ச் 14- சென்னையில் ஏற்படும் வெள்ள பாதிப்பு பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண  எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் உழைத் திட்டவர் திருப்புகழ் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதி களில் ஏற்படும் மழை வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக சென்னை வெள்ள இடர் தணிப்பு மேலாண்மை குழு அமைக்கப்பட்டு, அதன் தலைவராக திருப்புகழ் நியமிக்கப்பட்டார். அக்குழு சென்னை பெருநகர பகுதிகளில் மழைநீர் தேங்கா வண்ணம் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு அறிக்கைகளை அளித்தது. இதன் தொடர்ச்சியாக, இக்குழுவின் இறுதி அறிக்கை முதல்வர் மு.க.ஸ்டாலி னிடம் செவ்வாயன்று (மார்ச் 14) தலைமைச் செயலகத்தில் வழங்கப்பட்டது.

ஆலோ சனைக் குழுவின் தலைவர் திருப்புகழ் இறுதி  அறிக்கையை அளித்து, அதன் விவரங்கள் குறித்து எடுத்துரைத்தார். இதையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:- ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனாவை சமாளிக்க அரசு முழு வேகத்தில் செயல் பட்டது. அதன்பிறகு, உடனே பெருமழை  காரணமாக அரசுக்கு ஒரு பெரும் நெருக்கடி  ஏற்பட்டது. அதனை எதிர்கொண்டவுடன், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, திருப்புகழ் தலை மையில் ஒரு குழு அமைக்கப் பட்டது. அந்தக்  குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அரசின் அனைத்துத் துறைகளும் ஒருங் கிணைந்து செயல்பட்டன. இதனால்  80 விழுக்காடு பணிகளை முடித்ததால்  கடந்த மழையின்போது தண்ணீர் தேங்காமல் நல்ல பெயர் அரசுக்கு கிடைத்தது. இதற்கு  முக்கிய காரணங்களில் ஒன்று திருப்புகழ் குழுவினரின் செயல்பாடுகள்.  இதற்காக முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, எந்த பிரதிபல னும் எதிர்பாராமல் இந்த வெள்ளப் பிரச்ச னைக்கு நிரந்தரத் தீர்வு காண உழைத் திட்ட திருப்புகழுக்கும், குழுவின் உறுப் பினர்களான ஜனகராஜ், அறிவுடைநம்பி, இளங்கோ, பாலாஜி நரசிம்மன், காந்திமதி நாதன், ராஜா, முருகன், ஜெய்சங்கர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மன மார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கி றேன். தொடர்ந்து அரசுடன் நீங்கள் எந்த நேரத்திலும் இணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.