states

தீக்கதிர் விரைவு செய்திகள்

தேர்வெழுதும் மாணவர்களுக்கு பஞ்சாப் அரசு தலா ரூ.90 நிதியுதவி

பஞ்சாபில் 8 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வுகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில், மாணவர்கள் தேர்வுக்குத் தேவையானவற்றை (முக்கியமான வினா-விடை தொகுப்பை) நகல் எடுத்துக்கொள்ள 8 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அம்மாநில அரசு முறையே, ரூ. 72 மற்றும் 90 ரூபாயை நிதியுதவியாக அறிவித்துள்ளது. இதற் காக மொத்தம் ரூ. 3.5 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. 

மெட்ரோ தூண் விழுந்து பலியானோருக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு!

பெங்களூருவில், மெட்ரோ ரயில் திட்டப்பணியை ஒட்டி அமைக்கப்பட்ட இரும்புக் கம்பிகளைக் கொண்ட தூண், செவ்வாயன்று சரிந்து விழுந்தது. இதில், தேஜஸ்வினி என்ற பெண்ணும், அவரது இரண்டரை வயது ஆண் குழந்தை யும் உயிரிழந்தனர். மேலும் கணவரும், மற்றொரு குழந்தையும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலை யில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10  லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அத்துடன் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை,  உயிரிழந்த 2 பேருக்கும் மாநில அரசு சார்பில் தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். 

அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காதவர்கள்தான் பாஜக-வினர்!

“பாஜக-வினரும் யாத்திரை செல்லத் துவங்கி விட்டனர். அவர்கள் இந்து தேசம் பற்றி பேசுகிறார்கள். ஆனால் அது அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை. இதன் அர்த்தம் அவர்களுக்கு அரசியல் சாசனத்தில் நம்பிக்கை இல்லை என்பது தான். பிறகு ஏன் தேர்தலில் போட்டியிடுகிறார்கள், ஏன் சத்தியப் பிரமாணம் செய்கிறார்கள்? இந்திய அரசியலமைப்பை அவர்கள் நம்புகிறார்களா என்பதை பா.ஜ.க. தெளிவுப்படுத்த வேண்டும். அவர்கள் நம்பவில்லை என்றால், அதனுடன் வெளிப்படையாக கூறவேண்டும்” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது குறிப்பிட்டுள்ளார்.

கட்டுமான தொழிலாளர்கள்  சட்ட முன்முடிவு தாக்கல்

சென்னை, ஜன.12- தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், சட்ட முன்முடிவு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறி யிருப்பதாவது:- 1984 ஆம் ஆண்டு தமிழ்நாடு கட்டிடம் மற்றும் கட்டுமான தொழி லாளர்கள் சட்டமானது (தமிழ்நாடு சட்டம்  29/1986), கட்டிடம் மற்றும் கட்டு மான தொழிலாளர்களின் வேலை  வாய்ப்பு மற்றும் பணி நிபந்தனை களை ஒழுங்குபடுத்தவும் அவர்களின்  பாதுகாப்பு உடல்நலம் அதனுடன்  தொடர்புடைய பிற பொருட்படுத்து வதற்காகவும் இயற்றப்பட்டது. இந்த சட்டமானது இதுவரை நடை முறைக்கு வரவில்லை. இதற்கிடையில் ஒன்றிய அரசானது 1996 ஆம் ஆண்டு கட்டிடம் மற்றும் இதர கட்டுமான தொழி லாளர்கள் வேலைவாய்ப்பு முறைப் படுத்தல் மற்றும் பணி நிபந்தனைகள் சட்டத்தினை (மைய சட்டம் 27/1996) இயற்றியுள்ளது. இதனால், தமிழ்நாடு சட்டம்  வழக்கொழிந்து தேவையற்றதாகி விட்டது. எனவே தமிழ்நாடு சட்டம்  29/1986-ஐ முடிவு செய்துள்ளது.  இந்த சட்ட முன்வடிவானது மேற்சொன்ன முடிவிற்கு செயல்படி வம் கொடுக்க விழைகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

கேரள அரசு அத்து மீறவில்லை: அமைச்சர்'

சென்னை,ஜன.12- தமிழ்நாடு சட்டப் பேரவையில் பேசிய எதிர்க் கட்சித் துணைத் தலை வர் ஓ.பன்னீர்செல்வம்,“ கேரளா அரசு டிஜிட்டல் சர்வே எடுப்பது குறித்து தகவல் வருகிறது என்றும், தமிழக எல்லைப் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது”என்றார். இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச் சந்திரன், “நம் எல்லை பகுதியில் கேரளா  அதிகாரிகள் எந்த சர்வேயும் எடுக்க வில்லை. அவர்கள் மாநில எல்லையில் தான் நடக்கிறது. நம் பகுதியில் இது  போன்ற சர்வேக்களை எடுப்பதற்கு முன் தகவல் தெரிவிக்க வேண்டும்  என்று கேரளா அரசிடம் தெரிவித்துள் ளோம். அண்டை மாநிலங்களின் மாவட்ட  எல்லை பகுதிகளில் உள்ள ஆட்சியர்களி டமும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு  அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் மட்டுமல்ல  மாநிலத்தின் எந்த எல்லை பகுதியிலுள்ள மாவட்டங்க ளிலும் ஒரு சென்ட் நிலம் கூட இந்த  அரசு அண்டை மாநிலத்துக்கு விட்டுத்த ராது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

222 கோடியே 51 லட்சம் பெண்கள் பயணம்

சென்னை,ஜன.12- தமிழ்நாடு சட்டப்பேரவையில் வியா ழனன்று (ஜன.12) நடைபெற்ற வினாக் கள் விடைகள் நேரத்தில், கொரோனா  காலத்தில் நிறுத்தப்பட்ட வழித் தடங்களில் பேருந்துகளை இயக்குமா? எனவும் அதிமுக சட்டமன்ற உறுப்பி னர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பி னார்.  இதற்கு பதிலளித்த போக்கு வரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.  சிவசங்கர்,“ இந்த அரசு பொறுப்பேற்றப் பின், இதுவரை 222 கோடியே 51 லட்சம் பெண்கள் நகரப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொண்டுள்ளனர். தினசரி 40 லட்சம் பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா காலத்தில் நிறுத்தி வைத்த  பேருந்துகள் இன்னும் இயக்கப்படாமல் இருந்தால், உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்”என்றார்.

திருப்பூரில் நவீன மைதானம்

சென்னை,ஜன.12- தமிழ்நாடு சட்டப்பேரவையில் வியா ழனன்று (ஜன.12) நடந்த கேள்வி நேரத்தின் போது சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், திருப்பூரில் நவீன வசதியுடன் கூடிய விளை யாட்டு மைதானம் அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் உதய நிதி ஸ்டாலின்,“திருப்பூரில் 1,500 பேர் அமர்ந்து  பார்க்கக்கூடிய பார்வையாளர் மாடம் கட்டும் பணிகள் முடிக்கப்பட்டு ஏப்ரலில்  திறக்கப்படும்” என்றார்.

அணுஆயுதம் கிடைக்காதா? ஏக்கத்தில் தென்கொரிய பிரதமர்

சியோல், ஜன.12- வடகொரியாவைக் காரணம் காட்டித் தங்களுக்கு அணு ஆயுதங்களைத் தாருங்கள் என்று அமெரிக்காவிடம் தென் கொரியா கெஞ்சி வருகிறது. அமெரிக்க அணுஆயுதங்களைத் தங்கள்  நாட்டில் வைப்பதில் தான் இன்னும் கூடுதலாகப் பணியாற்றப் போவதாக தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் தெரி வித்துள்ளார். வடகொரியாவிடம் இருந்து பாது காத்துக் கொள்ளவே இத்தகைய நடவடிக்கை களை எடுப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். இதனால் கொரியப்  பகுதி அணுஆயுதங்கள் குவிக்கப்படும் பகுதியாக மாறும் வாய்ப்பு உள்ளது. அமெரிக்காவுடனான கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் பெரும் முயற்சி எடுத்துக் கொண்டார். அமெரிக்காவுடனான உறவைப் பலப்படுத்துவதிலும் கவனம் செலுத்தினார். ஆனால் அணு ஆயுதங்களை தென் கொரியாவில் நிறுத்துவதற்கு ஒப்புதல் தர அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொடர்ந்து மறுத்து வருகிறார். இத்தனைக்கும் ஏராளமான போர்ப்பயிற்சிகளை ஜப்பான், தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா நடத்தி வருகிறது. இதற்கு முன்பு ஜனாதிபதியாக இருந்த மூன் ஜே-இன், பதற்றத்தைத் தவிர்க்க ஏராள மான முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், தேர்தலுக்குப் பிறகு யூன் சுக் இயோல் பதவியேற்ற பின் மோதல் போக்கு  அதிகரித்துள்ளது. அமெரிக்க மற்றும் தென்  கொரியக் கூட்டணியின் 70ஆவது ஆண்டு விழாவையொட்டி இதுவரை நடந்திராத எண்ணிக்கையில் ராணுவப் போர்ப் பயிற்சி களை நடத்துவது என்று தென் கொரியா முடிவெடுத்துள்ளது.